search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அறந்தாங்கி அருகே பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி தற்கொலை
    X

    அறந்தாங்கி அருகே பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி தற்கொலை

    • பள்ளிக்கு சென்றுவரும் மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.
    • தங்களது உறவினர்கள் மூலம் அவரை கண்காணித்தபோது, மகள் காதல் வலையில் சிக்கி இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள காடை இடையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகன் அருண் (வயது 23). பள்ளி படிப்பை முடித்துவிட்டு கட்டிட கான்கிரீட் வேலை பார்த்து வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியும், அருணும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் காதலனுடன் ஊர் சுற்றியும் வந்துள்ளார்.

    பள்ளிக்கு சென்றுவரும் மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அத்துடன் தங்களது உறவினர்கள் மூலம் அவரை கண்காணித்தபோது, மகள் காதல் வலையில் சிக்கி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    முதலில் மகளிடம் பெற்றோர் படிப்பு தான் நமக்கு முக்கியம், காதல் எல்லாம் வேண்டாம் என்று பக்குவமாக எடுத்துக்கூறினர். ஆனால் அதனை மாணவி கண்டுகொள்ளவில்லை. வழக்கம்போல் தனக்கான பாதையில் சென்றார். கடந்த 1-ந்தேதி மகளை அவரது பெற்றோர் கடுமையாக கண்டித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மாணவி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினர்.

    இதற்கிடையே அங்கு இருள்சூழ்ந்த பகுதியில் கோவில் அருகே உள்ள புளியமரத்தில் அருண், மாணவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் நாகுடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்காதல் ஜோடி தற்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×