search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சர் ஒட்டும் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    பஞ்சர் ஒட்டும் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    • சண்முகம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் சாம்பள்ளி மாசிலா பாளையம், அரசன்காடு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி (36). இவரது கணவர் சண்முகம் (40). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    சண்முகம் கடந்த ஒரு வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் தங்கியிருந்து இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் சண்முகம் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் சம்பவத்தன்று போன் மூலமாக மலர் கொடியை தொடர்பு கொண்டு சண்முகம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும், அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

    மலர்கொடி மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் விசாரித்த போது சண்முகம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து மலர்கொடி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×