என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சிங் மாணவி"

    • இபிஎஸ் கல்லூரியில் ஒரு மாதத்திற்குள் 2 மாணவிகள் உயிர்மாய்ப்பு.
    • மாணவி மன உளைச்சலில் இருந்ததாக போலீசார் தகவல்

    ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் நேற்று காலை தான் தங்கியிருந்த விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 19 வயது மாணவி பல்லவி, குப்பத்தில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (பிஎஸ்சி நர்சிங்) படித்து வந்தார்.

    போலீசாரின் கூற்றுப்படி பல்லவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழனன்று மாலை (20.11.25) விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மாணவி குதித்ததை பார்த்த சக மாணவிகளும், அங்கிருந்த ஊழியர்களும் அவரைமீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமை காலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்லவியின் குடும்பத்தினர் கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ளனர். 

    முன்னதாக அக்.31ஆம் தேதி முதலாமாண்டு மாணவி ஒருவர் தூக்க மாத்திரை உட்கொண்டு இறந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டு மாணவிகள் உயிரை மாய்த்துக்கொண்டது அங்குள்ள சக மாணவிகள் மத்தியிலும், ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் சித்தூர் மாவட்டத்தில் பொறியியல் மாணவர்கள் இருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

    மற்றொரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒரு பொறியியல் மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டார். மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

    • திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
    • மாணவியை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வருகிறார்.

    நேற்று மாணவி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மாணவியை தாக்கினார். ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில் யாருமே மாணவியை காப்பாற்ற முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பட்டப்பகலில் நடை பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் தனது செல்போனிலும் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

    இதற்கிடையே மாண வியை கழுத்தறுத்து கொலை செய்த வாலிபர் தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தினர்.

    இதில் மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது. இவரும், மாணவியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    சமீபத்தில் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.

    • ரபிகா உடலை கைப்பற்றி செண்பகராமன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ரபிகா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் ரபிகா (வயது 18), நர்சிங் கல்லூரி மாணவி.

    இவருக்கும் பூதப்பாண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இரு வீட்டாரும் கண்டித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை ரபிகா நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.

    இதனை தாயார் பானுமதி கண்டித்து உள்ளார். அதன் பிறகு ரபிகா குளிக்கச் செல்வதாக கூறிவிட்டு குளியல் அறைக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் குளியல் அறையில் இருந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், குளியல் அறை கதவை தட்டிப்பார்த்தனர்.

    அப்போது ரபிகாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ரபிகா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ரபிகா உடலை கைப்பற்றி செண்பகராமன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போனில் பேசியதை கண்டித்ததால் அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தீபாவிடம் விசாரணை நடத்தினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் தீபா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் தீபா, ஒருவருடன் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். இதன் காரணமாக அவர் கர்ப்பமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    நிறைமாத கர்ப்பமாக இருந்த தீபாவிற்கு பிரசவ வலி வந்துள்ளது. அப்போது அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த குழந்தையை தனது வீட்டு வாசல் முன்பு குழி தோண்டி தீபா புதைத்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற ஒரு பெண், குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அங்கும், இங்கும் சுற்றிப்பார்த்தார். அப்போது, தீபா வீட்டு வாசலில் மண்ணுக்குள் குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததார்.

    பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையை அந்த பெண் தோண்டி எடுத்த போது, குழந்தை உயிருடன் இருந்தது. உடனே குழந்தையை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குபின், மேல்சிகிச் சைக்காக குழந்தை புதுக்கோட்டை ராணியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பின்னர் அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தீபாவிடம் விசாரணை நடத்தினர்.

    காதலனுடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமான தீபா, நிறைமாதம் ஆன உடன், குழந்தையை பெற்றெடுப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தை பிறந்த உடன் காதலனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது அவர், திருமணமாகாத நிலையில் குழந்தையினை பெற்றெடுத்ததால் உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் எனவே பிறந்த குழந்தையை மறைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் வந்து விடு என காதலன் கூறியதாக தெரியவருகிறது.

    இதனை தொடர்ந்து தீபா குழந்தையை தனது வீட்டு வசாலில் குழி தோண்டி அவசர அவசரமாக உயிருடன் புதைத்துள்ளார் என தெரியவருகிறது.

    போலீசார் காதலன் மற்றும் தீபா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார், வீட்டிலேயே தனக்குத் தானே அவரே எப்படி பிரசவம் பார்த்தார்?

    குழந்தையை அவர் மட்டுமே புதைத்தாரா? அவருக்கு உடந்தையாக அவரது காதலன் இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவி வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ளார்.
    • அவ்வழியே சென்ற பெண், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு உடனடியாக அந்த குழியைத்தோண்டி உள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே நர்சிங் மாணவி தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ளார்.

    அவ்வழியே சென்ற பெண் ஒருவர், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு உடனடியாக அந்த குழியைத்தோண்டி உள்ளார். பின்னர் உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    பிறந்த குழந்தை உயிருடன் புதைத்த சம்பவத்தில் கல்லூரி மாணவியின் காதலன் சிலம்பரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள குழந்தையின் தாய், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையுடன் இருப்பதால் அவரையும் பின்னர் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்
    • கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல்

    கன்னியாகுமரி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இங்கேயே தங்கி படித்த இந்த மாணவி விடுமுறை தினங்களில் ஊருக்கு செல்வது வழக்கம்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாணவி ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஊரிலிருந்து மீண்டும் குமரி மாவட்டத்திற்கு பஸ்ஸில் வந்தார். ஊரிலிருந்து பஸ்ஸில் வடசேரிக்கு வந்த போது பஸ்ஸின் பின் இருக்கையில் அமர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டார்.இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார். அந்த வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியிடம் மீண்டும் சேட்டையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இரணியில் போலீசார் இரணியல் கோர்ட் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர்.அப்போது அந்த பஸ் அந்த பகுதிக்கு வந்தது.

    உடனே போலீசார் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். உடனே போலீசார் மாணவியின் பின் இருக்கையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது பெரிய வந்துள்ளது.

    அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறா ர்கள். ஒடும் பஸ்சில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமங்கலத்தில் நர்சிங் கல்லூரி மாணவி திடீரென இறந்தார்.
    • பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி போலீஸ் சரகம் குராயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வையத்துரை. இவருடைய மகள் பவானி(19). இவர் திருநகரில் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று கல்லூரி செல்வதற் காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது பவானி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பவானி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள எஸ்.தோப்பூரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் கீர்த்தனா (வயது 20). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது பெருநாழியை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவரும், கீர்த்தனாவும் காதலித்ததாக கூறப்படு கிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த கீர்த்தனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர். பின்னர் அருப்பு க்கோட்டை போலீசார் கீர்த்தனா-அப்துல்ரகுமானை அழைத்து அறிவுரை கூறி னர். ஆனாலும் 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல்ரகுமான் தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வேறொரு பெண்ணை காதலிப்பதாக தெரிவித்திருந்தார்.

    இதனால் கீர்த்தனா யாருடனும் பேசாமல் விரக்தி யுடன் காணப்பட்டார். பெற்றோரும் மகளை சமரசம் செய்தனர். ஆனா லும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்தனா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த காரியா பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக சுந்தரமூர்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவன தட்டச்சர் நந்தினி தனது தாயாரிடம் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்
    • பண்ணையார்விளை பகுதியைச் சேர்ந்த சகாய லூர்து பாப்பு மதுரைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் நீண்ட நாட்களாக வரவில்லை.1

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வட்ட விளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தினி (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தட்டச்சராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நந்தினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் நந்தினியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நந்தினி தனது தாயாரை தொடர்பு கொண்டு வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    கொல்லங்கோடு அருகே சந்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்தி (18). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்த நிஷாந்தி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது தாயார் மகள் நிஷாந்தியை தேடினார்.அப்போது வீட்டில் இருந்து சான்றிதழ்களுடன் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது தாயார் ராணி கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம்மவுண்ட் பண்ணையார்விளை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.இவரது மனைவி சகாய லூர்து பாப்பு (31). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.சகாய லூர்து பாப்பு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.சம்பவத்தன்று மதுரைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற அவர் நீண்ட நாட்களாக வரவில்லை.இதையடுத்து சிவகுமார் மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    • தாய்-தம்பிகள் பாசப்போராட்டம் நடத்தியும் பலனளிக்கவில்லை
    • அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இளம்பெண் வெளியூரில் நர்சிங் படித்து வருகிறார்.

    இவரது தந்தை வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாய் மற்றும் 2 தம்பிகள் ஊரில் வசித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். தினமும் தாயாரி டம் செல்போனில் பேசி வந்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் குடும்பத்தி னருடன் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தாயார் அழைத்துப் பார்த்த போது, மாணவியின் போன் சுவிட்ச் ஆப் என தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் கல்லூரிக்கு வந்து விசாரித்தார். அப்போது மாணவி அங்கு இல்லை. மகள் மாயமானது குறித்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் திருவட்டார் போலீசில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கும் கல்லூரி உள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து மாணவியையும் அவரது காதலனையும் போலீசார் தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அந்த மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவி, காதல னுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில் மகள் போலீசில் தஞ்சம் அடைந்த தகவல் அறிந்து மாணவியின் தாயார், தனது 2 மகன்களுடன் ேபாலீஸ் நிலையம் வந்தார்.

    அவர், தனது மகளை சந்தித்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவரோ மறுத்து விட்டார். காதலனோடு செல்வதி லேயே உறுதியாக இருந்தார். மாணவியை அவரது தம்பி களும் கண்ணீர் மல்க அழை த்துப் பார்த்தனர்.

    ஒரு கட்டத்தில் 2 தம்பி களில் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இத்தனை பாசப் போராட்டங்கள் நடந்த பிறகும் மாணவியின் மனம் மாறவில்லை. அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தார்.

    • நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் முள்ளிவேல் நகரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.

    டி.கே.எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கோவில்பட்டி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார் அதன் பின் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் அடிக்கடி வெளியூரில் வசிக்கும் தனது மகன், மகள்களை பார்த்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிக்கும் தனது பிள்ளைகளை பார்த்து வருவதாக கூறிச் சென்ற மணி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணியின் மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஸ்வினி அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார்.
    • சம்பவத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அம்மன் கொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தியாகதுருகம் செல்வா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்வினி (20) இவர் இதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் சம்ப வத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இவரது தந்தை நடராஜன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×