என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்சிங் மாணவி - குழந்தையை உயிருடன் குழிதோண்டி புதைத்த கொடூரம்
    X

    தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்சிங் மாணவி - குழந்தையை உயிருடன் குழிதோண்டி புதைத்த கொடூரம்

    • மாணவி வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ளார்.
    • அவ்வழியே சென்ற பெண், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு உடனடியாக அந்த குழியைத்தோண்டி உள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே நர்சிங் மாணவி தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ளார்.

    அவ்வழியே சென்ற பெண் ஒருவர், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டு உடனடியாக அந்த குழியைத்தோண்டி உள்ளார். பின்னர் உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    பிறந்த குழந்தை உயிருடன் புதைத்த சம்பவத்தில் கல்லூரி மாணவியின் காதலன் சிலம்பரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள குழந்தையின் தாய், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையுடன் இருப்பதால் அவரையும் பின்னர் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×