என் மலர்
நீங்கள் தேடியது "Hospital"
- திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
- மாணவியை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என கூறப்படுகிறது.
மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வருகிறார்.
நேற்று மாணவி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மாணவியை தாக்கினார். ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில் யாருமே மாணவியை காப்பாற்ற முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பட்டப்பகலில் நடை பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் தனது செல்போனிலும் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இதற்கிடையே மாண வியை கழுத்தறுத்து கொலை செய்த வாலிபர் தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தினர்.
இதில் மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது. இவரும், மாணவியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.
- கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துள்ளார். அவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 22) என்பவரும் காதலித்துள்ளனர்.
கோபாலகிருஷ்ணன் மாணவியை திருமணம் செய்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் அங்குள்ள கோவிலில் அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர். கோபாலகிருஷ்ணன் வீட்டில் மாணவி வசித்துள்ளார். அதன்பிறகும் அவர் பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மாணவி கர்ப்பம் ஆனதால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கோபால கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 14-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மருத்துவமனை முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்தப் பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.
- மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் ஸ்ரீஅவிட்டம் திருநாள் (எஸ்.ஏ.டி.) மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மின்தடை ஏற்பட்டது. 3 மணி நேரம் நீடித்த இந்த மின்வெட்டால் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் அவதிக்குள்ளானார்கள். அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறையின் மின் பிரிவைச் சேர்ந்த உதவி பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளரை சஸ்பெண்டு செய்து கேரள பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் உத்தரவிட்டார்.
மேலும் மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.






