என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspension"

    • உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் ஸ்ரீஅவிட்டம் திருநாள் (எஸ்.ஏ.டி.) மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மின்தடை ஏற்பட்டது. 3 மணி நேரம் நீடித்த இந்த மின்வெட்டால் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் அவதிக்குள்ளானார்கள். அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறையின் மின் பிரிவைச் சேர்ந்த உதவி பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளரை சஸ்பெண்டு செய்து கேரள பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் உத்தரவிட்டார்.

    மேலும் மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

    • பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது
    • நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளு வில் ஈடுபட நேரிட்டது.

    பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "எதிர்க்கட்சிக ளுக்கு அம்பேத்கர் பெ யரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கி றது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்ச ரித்தால் அவர்களுக்கு சொர்க்கத் தில் இடம் கிடைத்து இருக்கும்" என்று கூறினார்.

    இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அம்பேத்கரை அமித்ஷா அவமரியாதை செய்து விட்டதாக கூறி குற்றம் சாட்டினார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் இழிவுப்படுத்தி இருப்பதாக ஆவண ஆதா ரங்களுடன் பா.ஜ.க. தலைவர்கள் தகவல்களை வெளியிட்டனர். இதையடுத்து அம்பேத்கர் தொடர்பான பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

    நேற்று பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் செல்ல வந்தபோது அங்கு நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளு வில் ஈடுபட நேரிட்டது.

    இந்த மோதலில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தள்ளுமுள்ளுவுக்கு ராகுல்தான் காரணம் என்று பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக பாராளுமன்ற வளாக போலீஸ் நிலையத் தில் ராகுல் மீது புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் 5 பிரிவுகளில் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரும் பாராளுமன்ற வளாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பா.ஜ.க. எம்.பி.க்கள் காந்தி சிலை முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அவர்கள் ராகுல்காந்தியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

    இதற்கிடையே இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் விஜய் சவுக் பகுதியில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அமித்ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அமித்ஷா மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முழக்க மிட்டனர்.

    இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஊர்வலத்துக்கு பிரியங்கா தலைமையேற்று நடத்தி வந்தார். 2-வது நாளாக பாராளுமன்ற வளாகத்தில் பாரதீய ஜனதா-இந்தியா கூட்டணி போட்டி போராட்டம் நடத்தியதால் இன்று காலை 10.30 மணியில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    இதற்கிடையே பாராளுமன்ற அலுவல்களை இன்று ஒத்திவைத்து விட்டு அம்பேத்கர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று மேல்சபை துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பான தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    பாராளுமன்றம் கூட்டத் தொடர் இன்று நிறைவு பெறும் நிலையில் மீண்டும் இந்தியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பாராளுமன்ற வளாகம் பரபரப்புடன் காணப் பட்டது.

    • அம்பேத்கர் வாழ்க என்று ஆம்ஆத்மியினர் கோஷமிட்டனர். பதிலுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மோடி வாழ்க என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.
    • அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றுவதன் மூலம் பாஜக அதன் உண்மையான நிறத்தை காட்டியுள்ளது.

    கடந்த பிப்ரவரி டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது.

    மொத்தம் உள்ள 70 இடங்களில் பா.ஜனதா 48 தொகுதிகளை கைப்பற்றியது. ஆம்ஆத்மிக்கு 22 இடங்கள் கிடைத்தது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

    டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் அதிஷி தேர்ந்தெடுக்கடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் டெல்லி சட்டசபையின் முதல் கூட் டத்தொடர் நேற்று தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்.

    அதன்பிறகு ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண்களுக்கு ரூ.2500 உதவி தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இன்றைய 2-வது நாள் கூட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியதும் துணை நிலை ஆளுநர் விஜேந்தர் குப்தா உரையாற்றினார்.

    அப்போது எதிர்கட்சி தலைவர் அதிஷி தலைமை யில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க் கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    அம்பேத்கர் வாழ்க என்று அவர்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மோடி வாழ்க என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.

     

    அமளியில் ஈடுபட்ட ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை சபாநாயகர் சஸ்பெண்டு செய்து நட வடிக்கை எடுத்தார்.

    எதிர்க்கட்சி தலைவர் அதிஷி, கோபால்ராய், வீர் சிங், முகேஷ், சுபேர் அக மது, அனில்ஜா, ஜர்னல் சிங் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க் கள் இன்று நாள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இதை தொடர்ந்து சட்டசபைக்கு வெளியேயும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிஷி கூறியதாவது, அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றுவதன் மூலம் பாஜக அதன் உண்மையான நிறத்தை காட்டியுள்ளது.

    அம்பேத்கரை விட மோடி பெரியவர் என்று பாஜக நினைக்கிறதா? ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அம்பேத்கர் முழக்கங்களை எழுப்பியபோது, அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆனால் பாஜக எம்.எல்.ஏக்கள் பிரதமர் மோடியின் முழக்கங்களை எழுப்பியபோது, அவர்கள் எதுவும் சொல்லவில்லை. இதன் பொருள் பா.ஜ.க. அம்பேத்கரை வெறுக்கிறது என்று தெரிவித்தார்.

    சட்டசபையில் தொடர்ந்து ஆளுநர் உரையாற்றினார். அவரது உரையில் மக்களுக்கு அளிக்கப் பட்ட அனைத்து வாக்குகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ×