என் மலர்
நீங்கள் தேடியது "assemply"
- நாட்டின் 70 கோடி மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உள்ளனர்.
- நாட்டிலேயே கர்நாடகாவில் மட்டும் தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடந்தி முடிந்துள்ளது.
திருப்பதி:
ஆந்திரா மாநில காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் நலன் பிரிவு தலைவராக நாகராஜு பதவியேற்பு விழா நேற்று மச்சிலிப்பட்டினத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷர்மிளா கலந்து கொண்டு பேசியதாவது:-
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெருமை சேர்க்கிறார். ஆனால் அவரது தலைமையிலான ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட சமூகம் குறிப்பிட்ட வளர்ச்சியை ஏற்றவில்லை. பா.ஜ.க உயர் சாதியினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
நாட்டின் 70 கோடி மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உள்ளனர். அவர்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.
நாட்டிலேயே கர்நாடகாவில் மட்டும் தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடந்தி முடிந்துள்ளது.
தெலுங்கானாவில் தற்போது தொடங்கி உள்ளனர். ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்ட சபைக்கு செல்ல தைரியம் இல்லாமல் உள்ளனர். சட்டசபைக்கு செல்ல தைரியம் இல்லை என்றால் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணன், தங்கையான ஜெகன்மோகன் ரெட்டி, ஷர்மிளா இடையே சொத்து பிரச்சனை உள்ள நிலையில் ஷர்மிளா தாக்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
- அம்பேத்கர் வாழ்க என்று ஆம்ஆத்மியினர் கோஷமிட்டனர். பதிலுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மோடி வாழ்க என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.
- அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றுவதன் மூலம் பாஜக அதன் உண்மையான நிறத்தை காட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது.
மொத்தம் உள்ள 70 இடங்களில் பா.ஜனதா 48 தொகுதிகளை கைப்பற்றியது. ஆம்ஆத்மிக்கு 22 இடங்கள் கிடைத்தது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் அதிஷி தேர்ந்தெடுக்கடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லி சட்டசபையின் முதல் கூட் டத்தொடர் நேற்று தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்.
அதன்பிறகு ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண்களுக்கு ரூ.2500 உதவி தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இன்றைய 2-வது நாள் கூட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியதும் துணை நிலை ஆளுநர் விஜேந்தர் குப்தா உரையாற்றினார்.
அப்போது எதிர்கட்சி தலைவர் அதிஷி தலைமை யில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க் கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
அம்பேத்கர் வாழ்க என்று அவர்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மோடி வாழ்க என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.

அமளியில் ஈடுபட்ட ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை சபாநாயகர் சஸ்பெண்டு செய்து நட வடிக்கை எடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அதிஷி, கோபால்ராய், வீர் சிங், முகேஷ், சுபேர் அக மது, அனில்ஜா, ஜர்னல் சிங் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க் கள் இன்று நாள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து சட்டசபைக்கு வெளியேயும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிஷி கூறியதாவது, அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றுவதன் மூலம் பாஜக அதன் உண்மையான நிறத்தை காட்டியுள்ளது.
அம்பேத்கரை விட மோடி பெரியவர் என்று பாஜக நினைக்கிறதா? ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அம்பேத்கர் முழக்கங்களை எழுப்பியபோது, அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆனால் பாஜக எம்.எல்.ஏக்கள் பிரதமர் மோடியின் முழக்கங்களை எழுப்பியபோது, அவர்கள் எதுவும் சொல்லவில்லை. இதன் பொருள் பா.ஜ.க. அம்பேத்கரை வெறுக்கிறது என்று தெரிவித்தார்.
சட்டசபையில் தொடர்ந்து ஆளுநர் உரையாற்றினார். அவரது உரையில் மக்களுக்கு அளிக்கப் பட்ட அனைத்து வாக்குகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
- டெல்லியில் 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.
- மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை நிலை கவர்னர் அதை ரத்து செய்தார்.
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்த போது 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை நிலை கவர்னர் அதை ரத்து செய்தார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.
இந்நிலையில் டெல்லியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மதுபான கொள்கை முறைகேடு குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை டெல்லி சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பாஜக முதல்வர் ரேகா குப்தா இதை தாக்கல் செய்தார். சி.ஏ.ஜி. அறிக்கையில் மதுபான கொள்கையால் ரூ.2000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஆம் ஆத்மி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறும் போது, 2017-2018க்கு பிறகு சி.ஏ.ஜி. அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. முந்தைய ஆம் ஆத்மி அரசு அரசியல் அமைப்பை மீறியுள்ளது என்று தெரிவித்தார்.






