என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்மானம்"

    • சிலர் தலையில் துணியை போட்டுக்கொண்டு ஒப்பாரி வைத்தும், மடிப்பிச்சை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
    • தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராடி வருகின்றனர்.

    கோவை:

    சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கால முறை ஊதியம், 10 ஆண்டு அனுபவம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வூதியம், காலி பணியிடம் நிரப்புதல், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 3-ந் தேதி முதல் தொடர்ந்து மறியல் போராட்டம், கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் என பல்வேறு வகைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பிணம் போல் தரையில் படுத்தும். அவர்களின் பக்கத்தில் சிலர் தலையில் துணியை போட்டுக்கொண்டு ஒப்பாரி வைத்தும், மடிப்பிச்சை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.

    அங்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வந்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு அ.தி.மு.க. ஆதரவாக இருக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து கடும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நாங்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

    சட்டசபை கூட்டத்தொடரில் இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கையாக வைக்கலாம். தி.மு.க. கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கேட்கிறார்கள். எனவே தமிழக அரசு இவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    கலெக்டரோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது நியாயமில்லாத செயல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×