search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Conclusion"

    • பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணிக்கு சர்க்கஸ் காட்சிகள் நடக்கின்றன.
    • 100-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் - காங்கயம் சாலை பத்மினி கார்டனில், 'தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்' தொடங்கி நடைபெற்று வந்தது.இந்தநிலையில் வருகிற 14-ந்தேதியுடன் சர்க்கஸ் முடிவடைகிறது. கடந்த 30 ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் உட்பட 30-க்கும் மேற்பட்ட வெளி நாடுகளில் நடத்தப்பட்டு புகழ் பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கசில் சீனா, ஆப்பிரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வல்லுநர்களால் பயிற்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.

    குறிப்பாக அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் அக்ரோ பெட், 60 அடி உயரத்தில் அழகிய பெண் நடனமாடும் ரஷ்யன் ரிங் பேலன்ஸ், பல வளையங்களை கால்களால் விளையாடும் விளையாட்டு, பெண்கள் கயிற்றை கொண்டு சாகசம் புரியும் விளையாட்டு, எந்த சர்க்கஸிலும் இடம்பெறாத உலக புகழ்பெற்ற கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக் ஆகியவை பெரியவர்கள், சிறுவர்களை வெகுவாக கவர்ந்தது.

    பின்புறம் உள்ள பொருளை திரும்பி பார்க்காமல், முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியுடன் குறி தவறாமல் துப்பாக்கி சுடுதல், மரணக் கூண்டில் கலைஞர்கள் செய்யும் சாகச நிகழ்ச்சி, உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் தலைகீழாக அழகி நடக்கும் ஸ்கைவாக், பிடிமானம் ஏதும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் பேலன்ஸிங் டிரிபிஸ், குதிரையின் மீது அமர்ந்து கொண்டு அழகி செய்யும் சாகசம், பிரேக் இல்லாத சைக்கிளில் முன் சக்கரம் தரையில் படாமல் தூக்கிக்கொண்டு ஓட்டுதல் உள்ளிட்ட சாகசங்கள் இடம்பெற்றன. இந்த சர்க்கஸ் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) முடிவடைகிறது.

    பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணிக்கு சர்க்கஸ் காட்சிகள் நடக்கின்றன. கட்டணம் ரூ.100, ரூ.150, ரூ.200. முன்பதிவு ரூ.150, ரூ.200 ஆகும். சர்க்கஸ் வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 9364193939 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என 'தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்' மேலாளர்கள் நாசர், பத்மநாபன் தெரிவித்தனர்.   

    ஜம்மு காஷ்மீரில் 40 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, இதற்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு எதிராக ஐநா சபையில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வர உள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack

    பாரீஸ்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன் தலைமறைவாக இருக்கிறான்.

    இந்த நிலையில் மசூத் அசாரை ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் தீவிரமாக உள்ளது.

    அதற்காக ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

    ஆனால் தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரம் மூலம் சீனா தடுத்து விட்டது. எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது பங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக 2-வது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் சில நாட்களில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    அதற்கான நடவடிக்கையில் பிரான்ஸ் அரசின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீர்மானம் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் ஆலோசகர் பிலிப் எடின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாவுடன் நேற்று டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். #JammuKashmir #CRPF #PulwamaAttack

    தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சிறுகுறு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    மொடக்குறிச்சி:

    தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் சென்னியங்கிரி, செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற இயலாத சூழ்நிலை உள்ளது. வங்கிப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தனிஅலுவலர் இல்லை என்று எந்த பணியும் செய்ய மறுக்கின்றனர். கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு தனிஅலுவலரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

    தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் நீண்டகாலப் பயிர்களான கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் பயிரிட ஜீன் மாத இறுதிக்குள் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் கால்வாய்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சிறுகுறு விவசாயிகளுக்கு வழங்கும் சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு மானியத்தை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உழவு எந்திரங்கள் போன்ற விவசாய கருவிகள் வழங்கவேண்டும்.

    பொதுமக்களின் சேமிப்பு கணக்கின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வரவேண்டும். என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
    ×