search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருவமழை தொடங்கியதால் பவானிசாகர் அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    பருவமழை தொடங்கியதால் பவானிசாகர் அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

    தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சிறுகுறு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    மொடக்குறிச்சி:

    தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் சென்னியங்கிரி, செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற இயலாத சூழ்நிலை உள்ளது. வங்கிப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தனிஅலுவலர் இல்லை என்று எந்த பணியும் செய்ய மறுக்கின்றனர். கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு தனிஅலுவலரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

    தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் நீண்டகாலப் பயிர்களான கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் பயிரிட ஜீன் மாத இறுதிக்குள் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் கால்வாய்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சிறுகுறு விவசாயிகளுக்கு வழங்கும் சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு மானியத்தை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உழவு எந்திரங்கள் போன்ற விவசாய கருவிகள் வழங்கவேண்டும்.

    பொதுமக்களின் சேமிப்பு கணக்கின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வரவேண்டும். என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×