search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "litigations"

    • குடும்ப நல நீதிமன்ற வழக்கு என 700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
    • தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடியே 59 லட்சத்து 96 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சார்பில் (லோக் அதாலத்) நடை பெற்றது.

    மாவட்ட நீதிபதி எம். இளங்கோவன் தலைமை தாங்கினார்.இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்ப நல நீதிமன்ற வழக்கு என 700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

    தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடியே 59 லட்சத்து 96 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி திருஞானசம்பந்தம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, கூடுதல் உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வாசுதேவன், வக்கீல்கள் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் ஹரிகரன் வழக்கறிஞர் சங்கத் தலைவர் டி கார்த்திகேயன் செயலாளர் கார்த்திகேயன் அட்வகேட் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரை முருகன் அரசு வழக்கறிஞர்கள் பி. கார்த்திகேயன் சத்தியமூர்த்தி கலந்து கொண்டனர்.

    • இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என தலைமை நீதிபதி கருத்து
    • இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.

    புதுடெல்லி:

    தேர்தல் காலங்களில் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுப்பதற்கு எதிராகவும், அதனை கட்டுப்படுத்தவும் வேண்டி அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தபோது, இந்த வழக்கை அவர் தாக்கல் செய்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது பொதுமக்களுக்கு பல்வேறு இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இது ஓட்டு போடுவதற்காக மக்களுக்கு தரப்படும் லஞ்சமாகவே பார்க்க வேண்டும். இது நம் ஜனநாயக தேர்தல் நடைமுறையை சீர்குலைப்பதாக உள்ளது.

    மேலும், இந்த இலவசங்கள் பொது நிதியில் இருந்தே தரப்படுகின்றன. இதனால், மக்களின் தலையில் அதிக சுமை ஏறுகிறது. இவ்வாறு இலவச அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, கட்சி சின்னத்தை முடக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு,சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹீமா கோஹ்லி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னர் நடந்த விசாரணைகளின்போது, இது மிகப்பெரும் பிரச்சினை என அமர்வு பலமுறை கூறியிருந்தது. கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தேர்தல் கமிஷன் கூறியது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என அமர்வு கேட்டிருந்தது.

    கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவச அறிவிப்புகள், இலவச பொருட்கள் வினியோகம் ஆகியவை, நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    மேலும் தங்களுடைய தேர்வை சுயமாக முடிவு செய்யும் வாக்காளர்களின் உரிமையும் பறிக்கப்படுகிறது என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறுகையில், பல மாநிலங்கள் கடும் கடனில் உள்ள நிலையிலும், ஆட்சியை பிடிக்க அல்லது தக்கவைக்க இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதற்காகும் செலவு மக்கள் மீதே சுமத்தப்படுகிறது என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.

    கட்சிகள் இலவசப் பொருட்களை அறிவிப்பது, மிகப் பெரிய பொருளாதார பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரச்னை குறித்து, எந்த அரசியல் கட்சியும் பாராளுமன்றத்தில் பேசாது. அனைவருக்கும் இலவசங்கள் தேவை. இந்த விவகாரத்தில் ஒரு சரியான முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகும். இலவசங்களை எப்படி தவிர்ப்பது, தடுப்பது என்பது குறித்து, மத்திய அரசு, நிதி ஆயோக், நிதி கமிஷன் ஆகியவை ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். அவை பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

    இதில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் ஒதுங்கி கொள்ளக்கூடாது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில், மத்திய அரசு, நிதி ஆயோக், தேர்தல் கமிஷன், நிதி கமிஷன், ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களுடைய கருத்தை, ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க உத்தரவிடப்படும் என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா இருதரப்பு வாதங்களை கேட்டார். பின்னர் அவர் கூறுகையில், இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை. தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையா? இலவச திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இலவச அறிவிப்புகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

    பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசும் சில திட்டங்களை வைத்துள்ளது. இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம்.

    ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது அந்த மாநிலத்தின் பொருளாதார நிலை என்ன என்பது பற்றி தெரியாது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக்கூடாது. இலவச தேர்தல் வாக்குறுதிகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.

    நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 159 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


    தீபாவளி பண்டிகையை புகை மாசில்லாத பண்டிகையாக கொண்டாட வலியுறுத்தி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. காலையில் 1 மணிநேரமும், மாலை 1 மணிநேரமும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    மேலும் சரவெடிகள் உள்பட அதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டங்களில் அரசு விதித்த கால அளவை யாரும் கண்டுகொள்ளவில்லை. 3-ந் தேதி நள்ளிரவில் இருந்தே தீபாவளி பட்டாசுகள் ஆங்காங்கே வெடிக்க தொடங்கியது.

    தீபாவளி அன்றும் அதிகாலையில் இருந்தே சரவெடி உள்பட பல்வேறு வகையான வெடிகளும் வெடிக்கப்பட்டன. தொடர்ந்து பகல், பிற்பகல், மாலையிலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இரவு நீண்ட நேரம் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.

    பாளை பகுதியில் ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடித்த பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நெல்லை மாநகர பகுதியில் மட்டும் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 27 பேர் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    நெல்லை புறநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 159 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் பெரிய அளவில் தீ விபத்துகள் ஏற்படவில்லை.

    வழக்கமாக பட்டாசு வெடி விபத்தினால் வைக்கோல் படப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்படும். ஆனால் நேற்று அவ்வப்போது மழை பெய்து வந்ததால் எந்தவித தீ விபத்தும் ஏற்படவில்லை. பட்டாசு வெடித்ததில் பெரிய அளவில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை.

    உப்பிலியபுரம் அருகே அனுமதியின்றி பட்டாசு கடை நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உப்பிலியபுரம்:

    உப்பிலியபுரம் பகுதிகளில் அனுமதியில்லாமல் பட்டாசு கடைகள் நடத்துவதாக உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதனை தொடர்ந்து,சிறப்பு இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார்.

    ஏட்டு பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சிக்கத்தம்பூர் மெயின்ரோட்டில் பட்டாசு கடை நடத்தி வந்த ராஜா , வெங்டாசலபுரம் பிரசாந்த்குமார், கேசவன், சோபனபுரத்தை சேர்ந்த முத்துக்கருப்பண், கொப்பம்பட்டியைசேர்ந்த ராஜா, சீனிவாசன் செட்டியா ர், வைரிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் முறையான அனுமதியின்றி பட்டாசு கடை நடத்தி வந்ததை தொடர்ந்து அவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. #NaamThamizharKatchi #LokSabhaElections2019

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.

    அந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பேப்பர்கள் ஓட்டுவது வழக்கம்.

    அப்படி ஓட்டப்பட்ட நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று அந்த கட்சி புகார் தெரிவித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு எந்த பலனும் இல்லை.

     


    இந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவாக இருக்கு மாறு செய்ய தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    அந்த கட்சியின் பொதுச் செயலாளர் என்.சந்திரசேகரன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. #NaamThamizharKatchi #LokSabhaElections2019

    சீர்காழியில் பெட்ரோல் டோக்கன் வினியோகம் செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #ADMK

    சீர்காழி:

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வினர் சீர்காழியில் பிரசாரம் செய்தனர்.

    இந்த நிலையில் சீர்காழியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கட்சி கொடிகளுடன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் பறக்கும்படை மண்டல துணை தாசில்தார் சுவாமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆய்வு நடத்தினர்.

    இதில்அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி பெயர் ரப்பர் ஸ்டாம்பு மூலம் அச்சிட்ட டோக்கன் கொடுத்து ரூ.100க்கு பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் கையில் வைத்திருந்த 100 டோக்கன்களையும், ரூ.10 ஆயிரத்து 870-ஐயும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன்பேரில் போலீசார் அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர்கள் தங்கராசு, தினேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #ADMK

    தாகூர் கலைக்கல் லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 21 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைகல்லூரியில் நேற்று 2 பிரிவு மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இந்த மோதலில் பேராசிரியர் சம்பத்குமார் மற்றும் ஒரு மாணவர் காயம் அடைந்தனர்.

    தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வந்ததால் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கல்லூரி முதல்வர் இளங்கோ சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பேராசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    பின்னர் இந்த மோதல் குறித்து கல்லூரி முதல்வர் இளங்கோ லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துதல், அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் மிரட்டியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 21 மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் 2 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடைக்கானலில் போலி செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பகுதியில் பிரபல ஓட்டல்கள், தனியார் சொகுசு பங்களாக்கள், பள்ளிகள், அதிகளவில் உள்ளன. இவற்றிக்கு தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் காவலாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

    நாய்ஸ்ரோடு பகுதியில் போலி செக்யூரிட்டி சர்வீஸ் இயங்கி வருவதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த செக்யூரிட்டி நிறுவனம் அனுமதியில்லாமல் போலியாக நடத்தப்பட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் ஆகிய 2பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டிவனம் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திண்டிவனம்:

    நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. அந்த பஸ்சை மதுரையை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மீனாட்சிமுத்து (49), நெல்லையை சேர்ந்த மல்லிகா (60), தினேஷ்பாபு (27), சென்னையை சேர்ந்த சுசீலா (45), மேரிநிர்மலா, தூத்துக்குடியை சேர்ந்த தங்கராஜ் (90), சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜகுமாரி (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தெலுங்குதேசம் எம்.எல்.ஏ மீது நடிகை ரோஜா அளித்த புகாரில் வழக்கு பதிய வேண்டும் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#ActorRoja #TeluguDesamParty

    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ நடிகை ரோஜாவை, பெணமலூர் தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பொடே பிரசாத் அவதூறாக பேசி பேட்டி கொடுத்தார்.

    இதையடுத்து ரோஜா போலீசில் பொடெ பிரசாத் மீது புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதுதொடர் பாக ரோஜா ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

     


    அதில், என்னைப்பற்றி அவதூறாகவும், ஆபாச மாகவும் பேசிய பொடே பிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தர விடவேண்டும் என்று கூறி இருந்தார்.

    மேலும், பொடே பிரசாத் பேசிய சிடியையும் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், பெண் எம்.எல்.ஏ.வான ரோஜா பற்றி பொடே பிரசாத் தரக் குறைவாக பேசி இருக்கிறார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.#ActorRoja #TeluguDesamParty

    கூட்டுறவு சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதல் காரணமாக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #CooperativeSocietyElection #OPanneerSelvam

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் புதுநகரில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க கட்டிட வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திருமங்கலம் நகர்மன்ற முன்னாள் தலைவர் சிரஞ்சன் உள்பட 7 பேரும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்களான அழகர் உள்பட 4 பேரும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.

    இதனைத்தொடர்ந்து தலைவர், துணைத்தலை வருக்கான தேர்தல் கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. அப்போது நிரஞ்சனின் சகோதரரான தி.மு.க. நகர பொறுப்பாளர் முருகன், வங்கியின் கேட்டை உடைத்து தகராறில் ஈடுபட்டார்.

    இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி, தேர்தலை 24-ந் தேதிக்கு தேர்தல் அதிகாரி அறிவரசு கண்ணன் தள்ளி வைத்தார்.

    இதற்கிடையே நிரஞ்சன் தரப்பினர் தேர்தலை நடத்த வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது.

    தேர்தல் அதிகாரி அறிவரசு கண்ணன் மற்றும் அதிகாரிகள் தேர்தலை நடத்தினர்.

    பகல் 12 மணியளவில் அ.தி.மு.க.வின் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென வங்கி அலுவலகத்திற்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த ஓட்டுப்பெட்டியை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    வாக்குச்சீட்டுகளையும் கிழித்து எறிந்தனர். இதனால் பயந்த தேர்தல் அதிகாரிகள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன் பிறகு வங்கியும் பூட்டப்பட்டது.

    அழகர் அணியினர் தான் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறி, நிரஞ்சன் தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டது.

    சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசில் தேர்தல் அதிகாரி அறிவரசு கண்ணன் புகார் செய்தார்.

    அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அழகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் புகாரின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட நிரஞ்சன் உள்பட 19 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டுறவு சங்கத்தேர்தல் மோதல் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலத்தில் தங்கம், வெள்ளி வாங்கி தருவதாக கூறி நகைக்கடை அதிபரிடம் ரூ. 7½ கோடி மோசடி செய்த தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவை சேர்ந்தவர் துளசிராம். இவரது மகன் லட்சுமிகாந்த் (வயது 26). இவர் மொத்தமாக வெள்ளி, தங்கத்தை வாங்கி ஆபரணமாக செய்து, விற்பனை செய்து வருகிறார்.

    இவர் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான், பேர்லேண்ட்ஸ் ஏ.ஏ.தெருவில் உள்ள என்.எஸ். வில்லியன் பெயரில் நகைக்கடை நடத்தி வரும் அம்ஜித் சிங்கவி மற்றும் அவரது தந்தை மகேந்திரசந்த் சிங்கவி ஆகியோரிடம் இருந்து மொத்தமாக வெள்ளி, தங்கம் வாங்கி தொழில் செய்து வந்தேன். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி வரை தங்கம், வெள்ளி மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக வங்கி மூலம் ரூ.7 கோடியே 58 லட்சத்து 36 ஆயிரத்து 750 அவர்களிடம் செலுத்தினேன்.

    இதனை தொடர்ந்து அவர்கள் தங்கம், வெள்ளி ஆகியவை கொடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    இது குறித்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் அம்ஜித் சிங்கவி மற்றும் அவரது தந்தை மகேந்திரசந்த் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் மரியமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×