search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    உப்பிலியபுரம் அருகே அனுமதியின்றி பட்டாசு கடை நடத்திய 7 பேர் மீது வழக்கு

    உப்பிலியபுரம் அருகே அனுமதியின்றி பட்டாசு கடை நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உப்பிலியபுரம்:

    உப்பிலியபுரம் பகுதிகளில் அனுமதியில்லாமல் பட்டாசு கடைகள் நடத்துவதாக உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதனை தொடர்ந்து,சிறப்பு இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார்.

    ஏட்டு பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சிக்கத்தம்பூர் மெயின்ரோட்டில் பட்டாசு கடை நடத்தி வந்த ராஜா , வெங்டாசலபுரம் பிரசாந்த்குமார், கேசவன், சோபனபுரத்தை சேர்ந்த முத்துக்கருப்பண், கொப்பம்பட்டியைசேர்ந்த ராஜா, சீனிவாசன் செட்டியா ர், வைரிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் முறையான அனுமதியின்றி பட்டாசு கடை நடத்தி வந்ததை தொடர்ந்து அவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×