search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 99985"

    • காலை நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.
    • கொடைக்கானலில் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உறைபனி என்பது அபூர்வமான நிகழ்வாகவே இருக்கும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது. மாலை 4 மணிக்கு மேல் நீர்ப்பனியால் குளிர் தொடங்கி விடுகிறது. இரவு 8 மணிக்கு மேல் கடும் குளிர் நிலவுகிறது. இரவு 7 மணிக்கு மேல் சாலையில் நிற்கும் வாகனங்களில் கனமழை பெய்தது போல் நீர் நிரம்பி காணப்படுகிறது. இரவு 7 மணிக்கு 10 டிகிரி வரை குளிர் அதிகரிக்கிறது. காலை நேரங்களில் புல்வெளிகளில் கடும் உறைபனி நிலவி வருகிறது. பனியின் தாக்கம் காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக இரவு 8 மணி முதல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    காலை நேரங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் இரவில் விரைவாக இருப்பிடங்களுக்கு செல்வதும் காலை நேரங்களில் தாமதமாக வெளியில் வருவதுமாக உள்ளனர். இவ்வாறு கடும் குளிர் நிலவும் நிலையில் ஸ்வெட்டர், குல்லா விற்பனை மட்டுமே அதிகரித்துள்ளது.

    ஏரிச்சாலை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் இரவு 10 மணி வரை கடைகள் நடத்துபவர்கள் விரைவாகவே கடைகளை அடைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புல்வெளி மற்றும் நீர்நிலைகளில் உறைபனி படர்ந்திருப்பதால் அதனை சுற்றுலா பயணிகள் படம் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானலில் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உறைபனி என்பது அபூர்வமான நிகழ்வாகவே இருக்கும். இந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசியில் பனியின் தாக்கம் சற்று அதிகரித்து உறைபனி ஓரிரு நாட்கள் தென்பட்டு மறைந்தது.

    அதன் பிறகு மீண்டும் உறைபனி நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளும் முடங்கி வருகிறது.

    • மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக கனமழை முதல் மிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வருவதை சில நாட்கள் தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    கொடைக்கானல், பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு கிராமத்தில் பழங்குடியினர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியிலிருந்து மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் அப்பகுதி கிராம மக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான முறையில் கயிற்றை பிடித்து கொண்டு ஆற்றை கடந்து வருகின்றனர்.

    மேலும் இப்பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூங்கில்காடு கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர். மேலும் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.


    எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மலைக்கிராமப்பகுதியில் இருந்து மூங்கில்காடு பகுதிக்கு செல்ல விரைவில் பாலம் அமைத்து தர வேண்டும்.

    பலமுறை இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அதற்கான தீர்வு முடிவுக்கு கொண்டுவர துறை சார்ந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்மலை கிராம பகுதியில் கீழான வயல் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையை கடந்து செல்வதில் பொதுமக்கள், விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் சாலை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து வீடுகளில் விழுந்துள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லாவிட்டாலும் முறையான சாலை பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    நள்ளிரவு மிக கனமழையாக பெய்த நிலையில் காலையிலும் மிதமான மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதே போல் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனிடையே பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

    கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் சாலையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அலுவலர்கள் விழுந்த பாறைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதால் வாகனங்கள் மறு உத்தரவு வரும்வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உள்ளூர் சிறு வாகனங்கள் மட்டும் எச்சரிக்கையுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • சசிகுமார் மற்றும் மகாலெட்சுமி தற்கொலை செய்தகொள்ள முடிவு செய்தனர்.
    • மயங்கிய நிலையில் இருந்த மகாலெட்சுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    கொடைக்கானல்:

    மதுரை மேலக்கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவருக்கும் அவரது உறவினர் மகாலெட்சுமி என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சசிகுமார் மகாலெட்சுமி மீது கொண்ட காதல் மோகத்தால் நாடு திரும்பினார்.

    இவர்கள் இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றுலா சென்று வந்துள்ளனர். உறவினர்கள் இவர்களை சந்தேகப்படவில்லை. இந்த நிலையில் மகாலெட்சுமி தனது கணவரிடம் நகை கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் மகாலெட்சுமியை தேடினார்.

    இந்நிலையில் மகாலெட்சுமி தனது குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கொடைக்கானலில் உள்ளேன் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து கொடைக்கானலுக்கு சென்றனர்.

    ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பு சசிகுமார் மற்றும் மகாலெட்சுமி தற்கொலை செய்தகொள்ள முடிவு செய்தனர். அதன்படி விஷ மருந்தை மகாலெட்சுமி மட்டும் குடித்துள்ளார். ஆனால் சசிகுமார் அதனை குடிக்காமல் வெளியே வீசினார்.

    மயங்கிய நிலையில் இருந்த மகாலெட்சுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். நீண்ட நேரமாக அறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது மகாலெட்சுமி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கள்ளக்காதலன் சசிகுமாரை தேடி வருகின்றனர்.

    வெளியூரிலிருந்து வரும் ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று வாரவிடுமுறை காரணமாக கொடைக்கானல் நகரம் ஸ்தம்பிக்கும் வகையில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தது. பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறும் சூழல் ஏற்பட்டது. ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளும் வாகன நெரிசலில் சிக்கி தாங்கள் புக்கிங் செய்து வைத்த விடுதிகளுக்கு குறித்த நேரத்தில் செல்லமுடியாமலும், விடுதிகளில் இருந்து கிளம்பியவர்கள் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல முடியாமலும் சாலைகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    நகரின் முக்கிய இடங்கள் மற்றும் சுற்றுலா இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தங்களை அமைக்க முன் ஏற்பாடு நடவடிக்கைகளை எடுக்காதது, குறைவான எண்ணிக்கையில் போக்குவரத்து போலீசாரை நியமித்தது, வெளியூரிலிருந்து வரும் ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ×