search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodaikanal Tourist places"

    கொடைக்கானலில் தேர்தலையொட்டி நாளை சுற்றுலா இடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை கவரும் வண்ணமாக 12 மைல் சுற்றளவில் சுற்றுலா இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட், தூண்பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. மேலும் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினரிடம் தனியாக அனுமதி பெற வேண்டும்.

    தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் நாளை பாராளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    நாளை (18-ந் தேதி) தேர்தலையொட்டி அனைத்து சுற்றுலா இடங்களும் மூடப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு சுற்றுலா வருமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    ×