என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ganja hidden"
கொடைக்கானல் போலீசார் பெருமாள்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது 3½ கிலோ கஞ்சாவை 2 பேர் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மதுரை சின்ன வளையன்குளத்தைச் சேர்ந்த மூர்த்தி (வயது 38), அவரது கூட்டாளி செந்தில் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மூர்த்தி கொடைக்கானல் நகரில் கடந்த பல மாதங்களாக கட்டப்பஞ்சாயத்து, ஆட்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, ஆக்கிரமிப்பு செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இவர் மீது மதுரையில் பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொடைக்கானல் அண்ணாநகர் முந்திரி தோப்பைச் சேர்ந்த செந்தில் என்பவரை அடி ஆளாக வைத்துக்கொண்டு கொடைக்கானலில் தொடர்ந்து இவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது கஞ்சா பதுக்கிய வழக்கில் கொடைக்கானல் போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வத்தலக்குண்டு - கொடைக்கானல் ரோட்டில் 24 மணி நேர செக் போஸ்ட் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்தால் அவர்களிடம் அத்து மீறும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இது போன்ற நிலையில் கொடைக்கானல் சோதனைச்சாவடியை கடந்து கஞ்சா விற்பனை செய்வது எவ்வாறு சாத்தியமாயிற்று என போலீசார் விசாரணை நடத்த வேண்டும். இது போன்ற சட்ட விரோத செயல்களுக்கு துணை போகும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ரெங்கநாதபுரம் மலைக் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
முன்னுக்கு பின் முரணான பதில் அளிக்கவே அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்தினர். அதில் 3 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனைடுயத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனை வைத்திருந்த ஆர்.எம்.காலனியை சேர்ந்த பாண்டியராஜன் (30), கண்ணன் (27), கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமிகாந்தன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
ராயபுரம்:
காசிமேடு பகுதியில் காசிபுரம் ஏ பிளாக்கை சேர்ந்தவர் நண்டுகுமார். இவரது மனைவி தனலட்சுமி (48). வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே நேற்று இரவு காசிமேடு போலீசார் அவரது வீட்டில் சோதனையிட்டனர் . அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சிறு பொட்டலமாக்கி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தனலட்சுமி கைது செய்யப்பட்டார். மது பாட்டில்கள் விற்றதாக ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டவர் ஆவார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்