search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mangalore airport"

    பூசணிக் காய்களுக்குள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நபரை, மங்களூர் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். #Mangaloreairport
    மங்களூர்:

    கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் இன்று மாலை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகள் அனைத்தையும் ஸ்கேன் செய்தனர். அப்போது ஒரு பயணியின் லக்கேஜை ஸ்கேன் செய்தபோது மிகப்பெரிய உருண்டைகள் இருந்தது தெரியவந்தது. 

    உடனே அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதனுள் மூன்று பெரிய பூசணிக்காய்கள் இருந்தன. போலீசாருக்கு சந்தேகம் வரவே, பூசணிக்காய்களை வெட்டிப் பார்த்தனர். அப்போது பூசணிக் காய்களுக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுமார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை கடத்த முயன்ற நபரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அந்த நபர் கர்நாடகாவைச் சேர்ந்த பஷீர் என்பதும், மங்களூரில் இருந்து தோகாவிற்கு செல்லும் விமானத்தில் கஞ்சாவை கடத்த முயன்றதும் தெரியவந்தது.  #tamilnews #Mangaloreairport
    ×