என் மலர்
நீங்கள் தேடியது "transport officer"
- மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ. ஆக யுவராஜ் பணிபுரிந்து வந்தார்
- கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த 12.8.2025 முதல் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆதனூரைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரி யுவராஜ் மறைமலைநகர் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கு செய்வதற்கு முன்பு டி.ஜி.பி.க்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ள யுவராஜ், அதில் என் தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ. ஆக யுவராஜ் பணிபுரிந்து வந்தார். கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த 12.8.2025 முதல் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
அவருக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் வேலைக்கு வரக்கூடாது என அதிகாரிகள் நிர்பந்தித்ததாகவும் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தும் ஏ.இ. கோவிந்தராஜ் நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
ஏ.இ. கோவிந்தராஜ், மற்றொரு அதிகாரி சொர்ணலதா இருவரும் தான் என் தற்கொலைக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூன். 1-
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன.
பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு உடனடியாக புதிய பஸ் பாஸ் கிடைக்காது. பழைய பஸ் பாஸ்களை காண்பித்துதான் பயணம் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதி காரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆண்டு தோறும் முதல் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் விரைவாக பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
பள்ளிகளில் இருந்து மாணவர்களின் முழு விவரங்கள் வந்தவுடன் பஸ் பாஸ் வழங்கிவிடுவோம்.
எனவே புதிய பஸ் பாஸ் கிடைக்கும் வரை பழைய பயண அட்டையை காண்பித்து பயணம் செய்யலாம். அல்லது பள்ளி சீருடை அணிந்திருக்க வேண்டும். அவர்களிடம் கட்டணம் எதுவும் கேட்க கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






