என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில்இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி
    X

    இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்த காட்சி.

    ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில்இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி

    • ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சைன்ஸ் கல்லூரியில் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புதுவை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்துகொண்டு விழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து ஜி20யின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சைன்ஸ் கல்லூரி மற்றும் புதுவை நேரு யுவகேந்திரா இணைந்து மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சியை நடத்தியது.

    கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் மற்றும் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக புதுவை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்துகொண்டு விழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து

    ஜி20யின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். மேலும் கல்லூரியின் இளைஞர் மன்றம் அமைப்பினையும் தொடங்கி வைத்தார்.

    புதுவை நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக பாகூர் தாசில்தார் பிரிதிவி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், புதுவை இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளாதாரப் பிரிவு உதவி பேராசிரியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு ஜி 20 மாநாடுகளின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

    விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு டீன் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

    முடிவில் புதுவை அலைடு ஹெல்த் சயின்ஸ் இயக்குனர் பொறுப்பு ஆண்ட்ரூ ஜான் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியினை கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் வளர்மதி, அனிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் இளைஞர் பாராளுமன்றம் விவாதங்கள் நடைபெற்றன.நேரு யுவகேந்திரா சார்பாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, நேரு யுவகேந்திரா குழு அமைப்பி னர், நாட்டு நலத்திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசூர்யா, தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×