என் மலர்
நீங்கள் தேடியது "நிதின் கட்கரி"
- சுங்கச் சாவடிக்குள் வாகனங்கள் சென்றால் மட்டுமே கட்டணம் பிடிக்கப்பட வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனங்களின் சக்கரங்களின் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்க கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஃபாஸ்டேக் முறை நடைமுறையில் உள்ளது. வாகனங்கள் சுங்க சாவடியை கடக்கும்போது கேமராக்கள் மூலம் பதிவு எண் ஸ்கேன் செய்யப்பட்டு, வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
சுங்கச் சாவடிக்குள் வாகனங்கள் சென்றால் மட்டுமே கட்டணம் பிடிக்கப்பட வேண்டும். ஆனால் அதில் செல்லாத வாகனங்களுக்கும் கட்டணம் பிடிக்கப்பட்டதை பார்த்து வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கார், வேன், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது அதற்கான கட்டணத்தை வசூலிக்காமல் கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்தது. பலர் புகார் கொடுக்காமல் சென்றுவிடுவது உண்டு.
தமிழ்நாட்டில் மதுரவாயல், பரனூர், விக்கிரவாண்டி, போரூர், புழல் உள்ளிட்ட அனைத்து சுங்க சாவடிகளிலும் இந்த தவறு நடை பெற்றுள்ளது. இது பற்றி லாரி உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். மேலும் இது போன்ற தவறுகள் நாடு முழுவதும் நடந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்தார். 2025 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 464 கோடி ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளில் 17.66 லட்சம் தவறான பணம் பிடித்தம் செய்யப்பட்டு மீண்டும் திருப்பி கொடுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சுங்கச் சாவடிகளில் தவறாக பணம் பிடித்தம் செய்யப்பட்டு 17.7 லட்சம் வழக்குகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டணத்தை திருப்பி வழங்கியுள்ளது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம், மற்றும் சுங்கச்சாவடியில் செல்லாமலேயே பிடித்தம் செய்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
சுங்க சாவடி ஊழியர்கள் வாகன விவரங்களை கை முறையாக பதிவு செய்யும் போது ஏற்படும் பிழைகளால் இத்தகைய பரிவர்த்தனைகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த முறையை முழுமையாக கைவிடுவது குறித்து சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தவறான பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தாலும் இது நடக்கக்கூடாது. சுங்க கட்டணத்தை பிடித்தம் செய்ய வாகன பதிவு எண்களை கம்ப்யூட்டரில் கைமுறையாக பதிவிடும் நடைமுறையை விரைவில் நிறுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
- வண்டி சீராக ஓடத் தொடங்கியதும், நாம் அதிலிருந்து விலகி மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.
- நிதின் கட்கரிக்கு தற்போது 68 வயதாகிறது.
மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரத்தில் உள்ள விதர்பாவில் 'அட்வான்டேஜ் விதர்பா-காஸ்தர் ஆத்யோகிக் மஹோத்சவம்' என்ற முதலீட்டு மாநாடு மற்றும் வணிக விழா பிப்ரவரி 6 முதல் 8 வரை நடைபெற உள்ளது. மூன்றாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது,
"தலைமுறை மாற்றமும் படிப்படியாக நிகழ வேண்டும் என்று நான் நம்புகிறேன். இப்போது நாம் படிப்படியாக ஓய்வுபெறச் செய்யப்பட்டு, புதிய தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். வண்டி சீராக ஓடத் தொடங்கியதும், நாம் அதிலிருந்து விலகி மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.
மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்வின் நோக்கம், விதர்பாவை இந்தியாவின் தொழில்துறை வரைபடத்தில் வலுவான மற்றும் வளர்ந்து வரும் வளர்ச்சி மையமாக நிலைநிறுத்துவதாகும்" என தெரிவித்தார். மேலும் எந்தவொரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் தொழில்துறை, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் சேவைத் துறையின் முக்கியத்துவத்தையும் கட்கரி வலியுறுத்தினார். ஓய்வு குறித்த நிதின் கட்கரியின் இந்தப் பேச்சு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
- மாசுபாட்டை அதிகரிப்பதற்கு நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம்.
- டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன
டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தாலே தனக்கு நோய்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் உதய் மஹூர்கரின் 'My Idea of Nation First: Redefining Unalloyed Nationalism' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நிதின் கட்கரி, "என்னால் இரண்டு நாட்கள்கூட டெல்லியில் தங்கமுடிவதில்லை. உடனே நோய்தொற்று ஏற்படுகிறது. டெல்லியில் ஏன் எல்லா இடங்களிலும் இவ்வளவு மாசுபாடு உள்ளது? நான் போக்குவரத்து துறை அமைச்சர். இந்த மாசுபாட்டிற்கு 40% காரணம் நாங்கள்தான். பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களே காரணம்.
புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும், மாசுபாட்டை அதிகரிப்பதற்கும் நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம். இது என்ன தேசியவாதம்? நம்மால் ஒரு மாற்று இந்தியாவை உருவாக்க முடியாதா? மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு ஒரு ஆத்மநிர்பர் பாரதத்தை (சுயசார்பு இந்தியா) உருவாக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பாஜக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் நிதின் கட்கரியின் இந்த கருத்து கவனம்பெற்றுள்ளது. நிதின் கட்கரியின் இந்த கருத்துதொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி, இம்ரான் மசூத்,
"கட்கரிக்கு குறைந்தபட்சம் காற்று மாசு அதிகரிப்பை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தது. நீங்கள் எல்லா தீர்வுகளையும் வழங்கும்போது, தயவுசெய்து இதற்கும் ஒரு தீர்வை பரிந்துரையுங்கள். மாசுபாட்டிற்கு வாகனங்கள் மட்டுமே காரணம் என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.






