என் மலர்
நீங்கள் தேடியது "Motorbikes"
- பைக்குகளுக்கு சுங்க வரி விதிக்க உள்ளதாக இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின.
- இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும் என்றார் நிதின் கட்கரி.
புதுடெல்லி:
இந்திய நெடுஞ்சாலைகளில் ஜூலை 15-ம் தேதி முதல் சுங்க சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டிகளும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என இணைய தளங்களில் தகவல்கள் பரவின.
இந்நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு அரசு சுங்க வரி விதிக்கப் போவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நிதின் கட்கரி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் முன்மொழியப்படவில்லை. இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும். உண்மை தெரியாமல் தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடக அறம் அல்ல. இதை நான் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரை தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வல்லபாய் மெயின் ரோட்டில் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்து அதனை வீடியோ வாக பதிவு செய்து கொண்டி ருந்தனர்.
அவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை கண்ட போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் செல்லூர் சுயராஜபுரம் பாலமுருகன், எஸ்.கொடிக்குளம் கதிரவன், செல்லூர் சிவராமன், மீனாம்பாள்புரம் சத்திய மூர்த்தி மெயின் ரோடு மகாபிரபு என்பது தெரியவந்தது.
இவர்கள் மதுரையில் செயல்பட்டு வரம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் சமூக வலை தளத்தில் தங்கள் சாகசத்தை பதிவிடுவதற்காக மோட்டார் சைக்கிள் வீலிங் செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் 4 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.
- வாலிபர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் சாகசத்தால், விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் கூடுகிறது.
பல்லடம் :
பல்லடத்தில் தாறுமாறாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டும் வாலிபர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி வருகின்றனர். பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமலும், முன்னே செல்லும் வாகனங்களை அதிரடியாக முந்திச் செல்வதும், வளைந்து, வளைந்து தாறுமாறாக ஓட்டுவதும், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்கள் அதிகம் ஏற்படும் சூழ்நிலையில், இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் சாகசத்தால், விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் கூடுகிறது. எனவே போலீசார் இதுபோன்ற மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்படுகையான பொத்தனூர் குட்டுக்காடு பகுதி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் மது அருந்துவோர் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக அப்பகுதிக்கு குளிக்கச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதன்காரணமாக இந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வராததால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் காவிரியாற்றில் இருந்து முறைகேடாக மணலை மூட்டைகளாக கட்டி, மோட்டார்சைக்கிள்கள் மூலம் மணலை கடத்தி விற்பனை செய்வது அதிகரித்தது.
இந்த நிலையில், பரமத்திவேலூர் போலீசார் பொத்தனூர் காவிரியாறு பகுதியில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வருகின்றனர். இதன்மூலம் காவிரி ஆற்றுக்குள் மோட்டார் சைக்கிளில் செல்லமுடியாத நிலை ஏற்படும்.
இதையும் மீறி முறைகேடாக மணல் எடுப்பவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ரோந்துப்பணிகள் தொடரும் எனவும் பரமத்திவேலூர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ‘ காவிரி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் சென்று மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்திய போது, மோட்டார் சைக்கிளில் தான் இந்த மணல் கடத்தல் பெரும்பாலும் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மோட்டார் சைக்கிளில் ஆற்றுக்குள் செல்வதை தடுக்க காவிரி ஆற்றின் படுகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியதன் மூலம் இந்த மணல் கடத்தலை தடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்கள்.






