search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fear"

    • தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.
    • விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக செடி-கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து கருகி வருகிறது. மேலும் ஒரு சில தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் இன்று பூம்பாறை வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பிரதான மலைச்சாலை ஓரங்களிலும் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் மலைச்சாலையை ஒட்டி சாலையை கடக்கும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெரும்பாலும் விவசாய நிலங்களுக்கு அருகே காய்ந்த பயன்பாடற்ற நிலங்களும் உள்ளது. இப்பகுதியில் சருகுகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் அங்கு வன விலங்குகள் தங்கி இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சருகுகள் எரிந்து பின்னர் மக்கிய பிறகு அந்த இடத்தில் உடனடியாக தாவரங்கள் முளைத்து வருவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதனால் காரணமாகவே விவசாயிகள் தாங்களாகவே தீ வைப்பதால் இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    • அரண்மனை - 4 திகில் படத்தில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை.
    • 'டிரெய்லர்' வெளியீட்டில் அந்த காட்சியை பார்த்த போது மிகவும் பயந்து விட்டேன்

    சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் நடித்தனர்.

    இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'அரண்மனை-2' படத்தில் 2016-ல் திரிஷா, ஹன்சிகா நடித்தனர். அந்த படமும் வெற்றி பெற்றது. மேலும் 2021-ல் அரண்மனை - 3- படத்தில், ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் நடித்தனர்.

    இப்படமும் வெற்றி பெற்றதை யொட்டி, சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் அரண்மனை- 4 திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர். சி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார்.



    இப்படத்தில் நடிகை தமன்னா மீண்டும் பேய் வேடத்தில் நடித்து உள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இதில் சுந்தர்.சி, தமன்னா, யோகிபாபு, ஹிப்ஹாப் ஆதி, ராஷி கன்னா ஆகியோர் பங்கேற்றனர்.

    விழாவில் தமன்னா பேசியபோது "அரண்மனை - 4  திகில் படத்தில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது 'டிரெய்லர்' வெளியீட்டில் அந்த காட்சியை பார்த்த போது மிகவும் பயந்து விட்டேன். இசையின் வேகம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு சிறப்பான திகில் படமாக அமைந்து உள்ளது." என்றார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.
    • 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஓட்டுனர் உரிமம் இன்றி பள்ளி மாணவர்கள், மோட்டார் சைக்கிள்கள், 4 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.

    போலீசார் கண்காணித்து ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் சிறு வயதிலேயே லாரிகளை ஓட்டிச் செல்லும் குழந்தைகளை பெற்றோர்களே ஊக்கப்படுத்தி வருகின்றனர். 18 வயது பூர்த்தியடைந்தால்தான் ஓட்டுனர் உரிமமே வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர்களும் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

    சில நேரங்களில் சாகச பயணம் மேற்கொண்டு அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர். இதே போல ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தில் தண்ணீர் டேங்கருடன் இணைந்த டிராக்டரை 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.

    இதனை அவரது குடும்பத்தினரே ஊக்கப்படுத்தி வருகின்றனர். சிறுவன் டிராக்டர் ஓட்டி வரும் போது தெருவில் நடந்து செல்லும் மக்கள் அச்சத்தில் தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து காலை 6.30 மணி அளவில் புறப்பட்ட தனியார் பஸ்சும், திண்டிவனத்தில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சும், வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்ரோட்டில் சந்தித்து கொண்டன.

    அப்போது 2 பஸ்களும் நேர வித்தியாசம் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றன. அப்போது பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது போன்று இருந்தது.

    இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்து பீதியில் உறைந்தனர்.

    பின்னர் சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். செல்போன்களில் பதிவான வீடியோக்களை சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் இது போன்ற செயல்களில் பஸ் டிரைவர்கள், பயணிகளை அச்சுறுத்த வேண்டாம் எனக் கூறி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    • உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானைகள் ரோட்டை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.
    • யானைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அடர்ந்த வனப்பகுதிககுள் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானைகள் ரோட்டை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் சத்தி-கடம்பூர் ரோட்டில் நேற்று மாலையில் யானைகள் குட்டியுடன் கூட்டமாக ரோட்டை கடந்து சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் தெரிவித்ததாவது:-யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவைகள் ரோட்டை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொ ள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றை விரட்டவோ முயற்சி செய்யக்கூடாது. மேலும் செல்பி, புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • 2 சிறுத்தைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும் திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
    • சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா? என்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள சென்னியப்பன் காட்டு பாறை என்ற பகுதியில் 2 சிறுத்தைகள் நாயை துரத்தி கொண்டு வந்ததாகவும், பின்னர் மோட்டார் சைக்கிள் சத்தத்தை கேட்டதும் 2 சிறுத்தைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும் திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் வனச்சரக அலுவலர், வருவாய்த்துறையினர் மற்றும் சேவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா? என்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து சோளக்காட்டில் சில காலடித்தடங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் திரளாக கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு இதே பகுதியின் அருகில் உள்ள பாப்பாங்குளத்தில் ஒரு சிறுத்தை இருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பெண் கூறிய தகவலால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை தீவிரமாக கண்காணித்து அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இதையடுத்து 3 பேரும் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றனர்.
    • குரங்குகளை பிடிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஓறையூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. நேற்று மாலை விவசாய வேலைக்கு சென்று திரும்பிய கூலி தொழிலாளர்கள் சரஸ்வதி (வயது 43), காத்தவராயன் (55), ஆசைத்தம்பி (53) ஆகிய 3 பேரை குரங்கு கடித்தது.

    இதையடுத்து 3 பேரும் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றனர்.மேலும், இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக குரங்குகளை பிடிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • புதர்கள் மற்றும் செடி-கொடிகளை அகற்ற நுகர்வோர் அமைப்பு வேண்டுகோள்
    • அயோடின் உப்பின் அளவு குறித்து ஆய்வு செய்யவும் கோரிக்கை

    அரவேணு,

    புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடந்தது. பொருளாளர் மரியம்மா, துணைதலைவர் செல்வராஜ், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது ஆண்டறிக்கை வாசித்தார்.

    தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4-ஜி அலைகற்றை வசதி செய்து தரவேண்டும், மாவட்ட அளவில் உள்ள ஹோட்டல் மற்றும் பேக்கரிகளில் அடிக்கடி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் உப்பில் அயோடின் அளவு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும், கோத்தகிரி நகரில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவை இந்த பகுதியில் உள்ள புதர்களில் மறைந்து நின்று தாக்குகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    எனவே கோத்தகிரி பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    நிகழ்ச்சியில் இணை செயலாளர் கண்மணி, கூடுதல் செயலாளர் பீட்டர், ஆலோசகர் பிரவின், செய்தி தொடர்பாளர் முகமதுஇஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் திரசா, ரோஸ்லின், ராதிகா, யசோதா, செல்வி, விக்டோரியா, ஷாஜகான், லெனின்மார்க்ஸ், விபின்குமார், விஜயா, தமிழ்செல்வி, ஏசுராணி, பிரேம்செபாஸ்டியன், சதீஷ், கார்த்திக், ஞானபிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணை செயலாளர் வினோபாபாப் நன்றி கூறினார்.

    • போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.
    • தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 5 மணி நேரத்தில் 10 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

    குறிப்பாக போடி-மதுரை ரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருப்பதால் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.

    இதே போல் போடி, கொட்டக்குடி, குரங்கணி, பீச்சாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் உருண்டு நடுரோட்டில் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கன மழை காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி சாலையில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இவை காண்பதற்கு மிகுந்த ரம்யமாக இருந்தாலும் தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் குரங்கணி போலீசார் மற்றும் நெடுஞ் சாலைத்துறையினருடன் இணைந்து சாலையில் விழுந்த மரங்களையும், பாறைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்துக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைச்சாலையில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    • பெரம்பலூரில் டிப்-டாப் உடையணிந்து வீடுகள் தோறும் செல்லும் ஆசாமிகளால் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர்
    • கியாஸ் செக்கிங் என்று வருகிற நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியாக ஏமாற்ற வந்துள்ளனரா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக கியாஸ் நிறுவனத்தில் இருந்து வருகிறோம். உங்கள் வீட்டில் கியாஸ் அடுப்பு ரெகுலேட்டர் சரியாக உள்ளனவா? என சரி பார்க்க வந்திருக்கிறோம். இதற்கு ஓராண்டு சந்தா தொகை ரூ.250 என கூறி பொதுமக்களிடம் வீடு வீடாக சில டிப்-டாப் ஆசாமிகள் கேட்டு வருகின்றனர். வருகிற நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியாக ஏமாற்ற வந்துள்ளனரா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிலர் உண்மை என நம்பி ரூ.250 செலுத்தி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுபோன்று வரும் நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியானவர்களா? என உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆய்வு செய்தாக வேண்டும் என்ற பட்சத்தில் கியாஸ் சிலிண்டர்கள் இறக்கும் நபர்களுடன் வந்து இது போன்ற ஆய்வுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மரம் சாய்ந்து விழுந்து சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்-மக்கள் அச்சமடைந்தனர்.
    • சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி போலீஸ் நிலையத் தின் பின்புறம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் சுமார் 150 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகி றது.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக் கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்க ளாக திருச்சுழி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான வாகை மரம் திடீரென சார்பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மீது விழுந்தது.

    இதைப்பார்த்த பத்திர பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மரம் விழுந்ததில் சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் முற் றிலும் சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்பட வில்லை.

    இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் சார்பதிவா ளர் அலுவலகத்தில் விழுந்து கிடந்த மரத்தை எந்திரத்தின் உதவியோடு அறுத்து அப்பு றப்படுத்தினர்.

    இந்த சம்பவத்தால் திருச் சுழி வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி உள்ளிட்ட பகுதி களில் சுமார் 2 மணி நேரத் திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    • 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள்.
    • தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம்.

    உலகளாவிய ரீதியில் 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள். அந்த வகையில் ஒவ்வொரு 4௦ விநாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்களே அதிகம்.

    ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து அவனை அழுத்தும் போது அவன் தற்கொலை செய்ய முயற்சிக்கிறான்.

    தற்போது தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் (டீன்ஏஜ்) பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம். அந்தவகையில் ஒருவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கான காரணம் மற்றும் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எவ்வாறு நடந்துக்கொள்வார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

    தற்கொலை செய்வதற்கான காரணம்

    குடும்பத்தில் பிரச்சினை, காதலில் பிரச்சனை, மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி என்று சின்ன சின்ன காரணங்கள் தான் தற்கொலை எண்ணங்கள் முடிவாகின்றன. தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு ஒரு நிமிடத்தில் வருவதில்லை. வருகின்ற பிரச்சினையை எப்படி கையாளுவது என்று தெரியாமல் தவிக்கும் போது அவர்களுக்கு ஒரே முடிவாக தெரிவது தான் தற்கொலை.

    அந்தவகையில் நம்முடன் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்யப்போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு சில அறிகுறிகள் மூலம் இவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் இருகின்றார் என தெரிந்துக்கொள்ள முடியும்.

    அறிகுறிகள்

    நடத்தையில் மாற்றம்

    தற்கொலை செய்துக்கொள்ள நினைக்கும் ஒருவர் எதிர்மறையான எண்ணத்தில் இருப்பார்கள். வாழ்க்கையே வெறுத்து போகின்றது என அடிக்கடி கூறுவார்கள். பேசும் விதம், நடந்து கொள்ளும் விதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அவர்களை தனியாகவிடக்கூடாது. அவர்கள் தோற்றத்தை அழகுபடுத்த விரும்பமாட்டார்கள். மற்றவர்களுக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தங்களுடைய தோற்றத்தை புறக்கணிக்க ஆரம்பிப்பார்கள். தன்னுடைய நிலையை பார்த்து யாரும் பரிதாபப்பட மாட்டார்களா என்று நினைப்பார்கள்.

    நண்பர்களுடன் தற்கொலை பற்றி பேசுவது, தற்கொலை பற்றிய புத்தகங்கள், படங்கள், நாவல்கள், பாட்டுகள் அனைத்தையும் பார்ப்பது. துப்பாக்கி எங்கு வாங்குவது, தூக்கு எப்படி போடுவது, பாய்சன் மருந்துகளை எங்கு வாங்குவது போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பித்தால் அவர்களை தனியாக விட்டுவிட வேண்டாம். இந்த மாதிரியான அறிகுறியானது மறைமுகமாக எடுத்துக்கூறிகின்றது என அர்த்தம்.

    போதை மற்றும் மது

    மனதில் ஏற்படும் துன்பத்தை, வலியை மறைக்க மது பழக்கத்திற்கு அடிமையாகுவது. போதையில் ஏற்படும் மனக்கிளர்ச்சி தற்கொலை செய்ய தூண்டுகிறது.

    மனநிலையில் மாற்றம்

    தீவிர கோபத்தை வெளிப்படுத்துவது, எரிந்து எரிந்து விழுவது மற்றவர்கள் பேச வந்தால் கூட தனிமையை நாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த பிரச்சினையை உடனே சரி செய்யவில்லை என்றால் அது தற்கொலையாக கூட மாறும்.

    இழந்ததை நினைத்து கவலைப்படுதல்

    மூக அவமானம், உறவு முறிவு போன்றவை தற்கொலை எண்ணத்தை தூண்டி விடுகிறது. தீவிர உடல் நோய், பிற உயிர் இழப்புகள், நிதி நிலைமை போன்றவை தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன. அந்தவகையில் தான் இழந்தவற்றை நினைத்து வருந்துவதும் கூட தற்கொலை எண்ணங்களை உருவாக்கி விடும்.

    தூங்குவதில் சிரமம், எடை அதிகரிப்பு, எடை இழப்பு, குற்ற உணர்வு, தேவையில்லாத கவலைகள், எரிச்சல், சோகம், கோபம், வாழ்க்கையை பற்றிய பயம், நம்பிக்கையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

    தற்கொலை தடுப்பு

    தற்கொலை அறிகுறிகளை கவனித்து எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் பல தற்கொலைகளை தடுக்க முடியும். தற்கொலை செய்துக்கொள்ளும் அறிகுறியில் யார் இருந்தாலும் அவர்களை தனியாக விடமால் கூடவே இருந்து கவனித்துக்கொள்வதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

    ×