search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ImranKhan"

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
    • ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி 2-வது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3-வது இடத்திலும் உள்ளன.

    மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 70 இடங்களைக் கைப்பற்றினர். பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

    இம்ரான்கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் இருக்கின்றன. இதில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும்.

    இதனிடையே முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர் நேற்று லாகூரில் ஒரு சந்திப்பை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

    இந்நிலையில், வடமேற்கின் ஷாங்லா பகுதியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மிகப் பெரிய கட்சிகளின் தலைவர்கள் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதால், அங்கு அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    • அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
    • இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமின் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நேற்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


    இந்த நிலையில் இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான்கான், அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து அவருக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத் தண்டனை கோர்ட்டு விதித்துள்ளது. மேலும் இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
    • பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், இங்கிலாந்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    தேசத்துரோக வழக்கில் தனது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த இந்த கூட்டத்தில் பெண் நீதிபதிக்கு இம்ரான்கான் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

    போலீஸ் அதிகாரிகள், ஷாபாஸ் கில்லை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு பெண் நீதிபதி ஜெபா சவுத்ரிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தார்.

    இதையடுத்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன. மேலும் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் இருந்து சாதாரண அமர்வு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

    இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் இம்ரான்கான் ஆஜராகி, தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக கூறி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் அவரது இல்லத்துக்கு 300 போலீசார் அனுப்பப்பட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

    ஆனால் அதனை போலீசார் மறுத்தனர். இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. இது ஆதாரமற்றது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் கடந்த கோர்ட்டு விசாரணையில் இம்ரான்கான் ஆஜராக தவறினார். இதையடுத்து அவர் ஆஜராவதற்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி தான் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan
    புது டெல்லி:

    இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன.



    இது குறித்து செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

    இதுப்போன்ற கருத்துகள் ஏன் பரவுகின்றன என தெரியவில்லை. பிரதமர் மோடியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை சந்தித்து  திட்டம் தீட்டி வருகின்றனர்.

    அதேபோல் இம்ரான் கானின் இந்த கருத்துக்கும் காங்கிரசின் சூழ்ச்சியே காரணமாகும். இப்படி செய்வதால் என்ன தான் நடந்துவிடப்போகிறது என புரியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி, இந்தியா, பாகிஸ்தானை ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாக்குதல் செய்யவுள்ளது என கூறியிருந்தார். இது குறித்து நிர்மலா கூறுகையில், ‘இந்த தேதிகள் குறித்த விவரத்தை இந்தியாவில் இருந்து யார் அனுப்புகின்றனர் என தெரியவில்லை. இந்த கருத்து வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது’ என கூறியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan

    மேற்கத்திய நாடுகள் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரத்தை மேம்படுத்த மோடியை இம்ரான்கான் புகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #PMModi #Imrankhan
    புதுடெல்லி:

    ‘இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும்’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து வெளியிட்டு இருந்தார். இது காங்கிரஸ் கட்சியால் விமர்சிக்கப்பட்டது. இந்தநிலையில் பிரதமர் மோடி சிறந்தவர் என இம்ரான்கான் புகழ்ந்தது ஏன் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தானில் ஆட்சி செய்யும் இம்ரான்கானின் அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியகம் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டது. பயங்கரவாதிகள் பிரச்சனையால் அதிருப்தி ஆன அமெரிக்காவும் நிதி உதவி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இத்தகைய காரணங்களால் தற்போது பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி உள்ளது.

    அதை சமாளிக்க இம்ரான் கான் தனது பாரம்பரிய நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளிடம் கூடுதல் நிதி உதவியை பெற்றார். இருந்தும் அது போதுமானதாக இல்லை. இதுதவிர அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நட்பு நாடுகளான சீனாவும், பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகள் அளித்து வருகிறது.



    அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிதி உதவி பெற்று அதன் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரத்தை மேம்படுத்த இம்ரான்கான் விரும்புகிறார். அதற்காகவே அண்டை நாடான இந்திய பிரதமர் மோடியை பாராட்டி புகழ்ந்ததாக தெரிகிறது.

    பாகிஸ்தானில் பிப்ரவரி மாத அன்னிய செலாவணி கையிருப்பு 8 பில்லியன் டாலராக இருந்தது. அது 2 மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 12 பில்லியன் டாலர் இருந்தது. #PMModi #Imrankhan
    இந்தியா குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது என்று பெனாசிர் மகன் குற்றம் சாட்டியுள்ளார். #ImranKhan

    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

    இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய போர் விமானங்களின் குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த விதத்தில் முடக்கப்பட்டுள்ளது. மு‌ஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் நடந்தது என்ன? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.

    பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்தியாவுடன் நடத்திய பேச்வார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும் என்றார்.

    முன்னதாக டுவிட்டரில் பிலாவல் பூட்டோ செய்தி வெளியிட்டார். அதில் இம்ரான் கானுக்கு சரமாரியாக கேள்வி விடுத்தார்.

    தேர்தல் நேரத்தில் ஆதரவு அளித்த பயங்கரவாதிகளுக்கு இம்ரான்கான் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற தயாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். #ImranKhan

    புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரத்தை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார். #ImranKhan #PulwamaAttack #CRPFA

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர். பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இயக்கம் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.

    புல்வாமா தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை நடத்த இந்திய ராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறுகையில், “புல்வாமா தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்” என்றார்.

    ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்பதற்கான ஆதாரங்களை ராணுவம் வெளியிட்டது. இந்த நிலையில் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.


    பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில், “பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஓருங்கிணைந்து உள்ளன. பயங்கரவாதத்தை ஒழிக்கும் வி‌ஷயத்தில் இப்போது இந்தியாவிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது இருப்பது புதிய இந்தியா. இனியும் பயங்கரவாதத்தால் ஏற்படும் வலிகளை பொறுக்க இயலாது. பயங்கரவாதத்தை எப்படி அழிப்பது என்பது பற்றி எங்களுக்கு தெரியும்“ என்றார்.

    மோடியின் இந்த பேச்சால் பாகிஸ்தான் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இம்ரான்கான் இந்தியாவை சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இம்ரான்கான் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா கருதினால் அதற்கான ஆதாரத்தை தரட்டும். அந்த ஆதாரத்தில் உண்மை இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது.

    இந்த வி‌ஷயத்தில் கொடுத்த வாக்கை பாகிஸ்தான் ஒரு போதும் மீறாது. பாகிஸ்தானியர்கள் யாருக்காவது குண்டு வெடிப்பில் தொடர்பு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அமைதிக்கு ஒரு வாய்ப்பை இந்தியா வழங்க வேண்டும்.

    இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறி உள்ளார்.  #ImranKhan  #PulwamaAttack #CRPFA

    பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பாகிஸ்தான் எம்பிக்கள் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியினை பரிசாக வழங்கினர். #GoldPlatedGun #SaudiArabiaCrown #MohammedBinSalman #PakistanSenators
    இஸ்லாமாபாத்:

    கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையில் சுமார் 2 ஆயிரம் கோடி டாலர் அளவிலான 8 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
     
    மேலும் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியை சவுதி இளவரசர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிபர் ஆரிப் ஆல்வி, பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய ‘நிஷான் இ பாகிஸ்தான்’ விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கவுரவித்தார்.



    அதன்பின்னர் பாகிஸ்தான் செனட் சபை உறுப்பினர்கள் சார்பில், தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று சவுதி இளவரசருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இது ஹெக்லர் அண்ட் கோச் எம்பி5கே ரக துப்பாக்கி ஆகும். இஸ்லாமாபாத்தில் இளவரசர் தங்கியிருந்த குடியிருப்புக்குச் சென்று பாகிஸ்தான் செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ரானி இந்த பரிசை வழங்கியுள்ளார். #GoldPlatedGun ##SaudiArabiaCrown #MohammedBinSalman #PakistanSenators
     
    சவுதி இளவரசர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்த வார இறுதிக்குள் பாகிஸ்தான் செல்ல இருந்த நிலையில், தற்போது ஒரு நாள் தாமதமாகியுள்ளது. #SaudiPrince #MohammedbinSalman
    இஸ்லாமாபாத்:

    சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என அறிவிக்கப்பட்டது.

    இதற்காக 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டன.

    சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தனர். பாகிஸ்தானுக்கு இளவரசராக வருகை தர உள்ளது இதுவே முதல் முறையாகும். முன்னதாக பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்தபோது, ஏமன் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் பாகிஸ்தானுக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் சவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒருநாள் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (பிப்ரவரி 17, 18) அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புல்வாமா தாக்குதலுக்கு இளவரசர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த சுற்றுப் பயண தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சவுதி இளவரசர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிப்ரவரி 19ம் தேதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SaudiPrince #MohammedbinSalman 
    சவுதி இளவரசர் பாகிஸ்தானில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி, 5 டிரக்குகளில் அவரது பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. #SaudiPrince #MohammedbinSalman #Imrankhan
    இஸ்லாமாபாத்:

    சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதிக்குள் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்பு காரணங்களினால் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி  மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் நேற்று இஸ்லாமாபாத்தை அடைந்தன.

    சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்திரிக்கையாளர்களும் வந்துள்ளனர். பாகிஸ்தானுக்கு இளவரசராக வருகை தர உள்ளது இதுவே முதல் முறையாகும். முன்னதாக பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்தபோது, ஏமன் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் பாகிஸ்தானுக்கு வந்திருந்தார்.

    சவுதி இளவரசரின் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இரு நாடுகளுக்கிடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. .  #SaudiPrince #MohammedbinSalman #Imrankhan
    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். #PakistanPM #Imrankhan
    ரியாத்:

    சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவை பேண எனது கையை நீட்ட முயற்சித்தேன். அது மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது. எனவே இந்தியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக காத்திருக்கிறோம்.

    எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மீண்டும் இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என கருதுகிறேன் என்றார்.

    ஐ.நா. சபை கூட்டத்தின் போது இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேசுவது என கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலால் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. இதை தான் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். #PakistanPM #Imrankhan
    தமிழ்நாட்டை பற்றி நவ்ஜோத் சித்து தெரிவித்த கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. #NavjotSingh #Rahulshouldapologise
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பலதரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவுக்கு சென்று வந்ததும் அந்நாட்டு ராணுவ தளபதியுடன் சிரித்து கைகுலுக்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாகிஸ்தானை நான் விரும்புவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிப்பதுபோல் நேற்று ஒரு கருத்தை சித்து வெளியிட்டிருந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் பேசிய சித்து, ‘நான் தமிழ்நாட்டுக்கு சென்றால் அங்குள்ள மொழி புரியாது. ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகள் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது.


    அங்குள்ள உணவு பிடிக்காது என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும், தொடர்ந்து அதை நீண்ட நாட்களுக்கு சாப்பிட முடியாது. அதேபோல் அவர்களின் கலாசாரமும் முற்றிலும் வேறுவிதமானது.

    ஆனால், நான் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும்போது இந்த சிரமம் இல்லை. மொழி உள்பட அங்குள்ள அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று  குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க. இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,  கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மேலிடத் தலைவர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சித்து கூறிய கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    உங்கள் கட்சி (காங்கிரஸ்) பாகிஸ்தானை நேசிப்பதும், உங்கள் கட்சியினர் பாகிஸ்தானின் புகழ்பாடி வருவதும் எங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டை பற்றி சித்து தெரிவித்த கருத்துக்காக அவர் நீக்கம் செய்யப்பட வேண்டும்.



    இதற்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நவ்ஜோத் சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #GVLNarasimhaRao #NavjotSingh #Rahulshouldapologise
    ×