என் மலர்
நீங்கள் தேடியது "சிறைக்கைதிகள்"
- நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமானது.
காத்மண்டு:
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியது.
சிறைகளில் இருந்து தப்ப முயன்ற 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும் தகவல் வெளியானது.
தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- சாதிய அடிப்படையில் சிறையில் வசதிகளை ஏற்படுத்துவது, வேலை வழங்குவதை அனுமதிக்க முடியாது.
- அரசியலமைப்பு சட்டங்கள் குடிமக்களின் கண்ணியம், சமத்துவத்தை நிலை நிறுத்த வேண்டும்.
சிறைகளில் சாதி அடிப்படையிலான பிரிவினையை தடுப்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தனஞ்சய ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், சிறைகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் -பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான பாரபட்சமான நடைமுறைகளை எடுத்துரைத்தது.
* சிறையில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த கைதிகளை செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய வைப்பதை அனுமதிக்க முடியாது.
* சாதிய அடிப்படையில் சிறையில் வசதிகளை ஏற்படுத்துவது, வேலை வழங்குவதை அனுமதிக்க முடியாது.
* சாதிய அடிப்படையில் பாகுபாடு, வெறுப்பை விதைப்பது, அவமதிப்பு செய்வது காலனிய நிர்வாகத்தையே காட்டுகிறது.
* சிறையில் உள்ள கைதிகளின் மன மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்.
* அரசியலமைப்பு பிரிவு 14, 17, 21-ல் உள்ளிட்டவற்றை மீறும் வகையில் உள்ள கையேடுகளை உடனே மாநில அரசுகள் மாற்றியமைக்க ஆணை பிறப்பித்தது.
* அரசியலமைப்பு சட்டங்கள் குடிமக்களின் கண்ணியம், சமத்துவத்தை நிலை நிறுத்த வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
* சிறைகளில் சாதிய பாகுபாடு இல்லை என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து சிறை விதிகளையும் 3 மாதத்துக்குள் மாற்ற வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.






