என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ராணுவம்"
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
- அப்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் 12 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அங்குள்ள சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டன. போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
அப்போது நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டங்கள் கடந்த 72 மணி நேரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கி உள்ளன.
- இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
- ராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.
அவ்வ்கையில் இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த 'ராணுவ ஏவுகணை படை' என்ற தனி ராணுவப் பிரிவை உருவாக்குவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று அறிவித்துள்ளார். .
இந்தியா உடனான சமீபத்திய மோதலின் எதிரொலியால், ஏவுகணைத் திறனை அதிகரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- பாகிஸ்தான் ராணுவ மேஜர் அப்பாஸ் ஷா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- இவர் இந்திய ராணுவ வீரர் அபினந்தனை சிறை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் 2019-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது ராணுவ வீரர் அபினந்தன் வர்தமான் சென்ற மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது பாராசூட் மூலம் வெளியே குதித்த அபினந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கினார். இதையடுத்து அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.
மத்திய அரசின் கடும் எச்சரிக்கை மற்றும் அழுத்தத்தினால் சிறைபிடிக்கப்பட்ட 58 மணிநேரத்தில் அபினந்தன் விடுவிக்கப்பட்டார். அவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அடாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினார்.
அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கியபோது அவரை சிறைபிடித்தவர் பாகிஸ்தான் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா என்பவர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடமேற்கு பாகிஸ்தான் பகுதியான கைபர் பக்துன்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான்கள் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
- உயிரிழந்த ஹபீஸ் அப்துல் ரவூஃப் என்பவர் ஒரு சாதார மனிதர்
- ஹபீஸ் அப்துல் ரவூஃப் தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.
காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ் தானுக்குள் புகுந்து அங்கிருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் தீவிரவாதிகள் யூசுப் அஸ்ஹார், அப்துல் மாலிக் ரவூப், முதாசீர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்களது இறுதி சடங்கு பாகிஸ்தானில் உள்ள முரிட்கே பகுதியில் நடைபெற்றது. இந்த இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டி னன்ட் ஜெனரல் பயாஸ் ஹூசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிக்கே டியர் முகமது புர்கான், பஞ்சாப் மாகாண காவல்துறை ஆய்வாளர் ஜெனரல் உஸ்மான் அன்வர் மற்றும் மாலிக் சோஹைப் அகமது ஆகியோர் கலந்து கொண்ட னர்.
இந்த இறுதி சடங்கில் அமெரிக்காவின் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப் பட்ட ஹபீஸ் அப்துல் ரவூப் தலைமையில் பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட குவாரி அப்துல் மாலிக், காலித், முதாசீர் ஆகியோர் ஜமாஅத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களாகவும், முரிட்கேயில் உள்ள மசூதியின் காப்பாளர்களாகவும் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.
இவர்களின் உடல்கள் பாகிஸ்தான் தேசியக் கொடியால் சுற்றப்பட்டு பாகிஸ்தான் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இந்த இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறையின் மூத்த அதிகாரிகள் மட்டு மின்றி பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்-மந்திரி மரியம் நவாஸ், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மருமகள் ஆகியோர் கலந்து கொண்டு, கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்தனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைபாடு குறித்து பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த வீடியோ மூலம் சர்வதேச தீவிரவாதியான ஹபீஸ் அப்துல் ரவூப் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஹபீஸ் அப்துல் ரவூப் 1999-ம் ஆண்டு முதல் லஸ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினராகவும், தடை செய்யப்பட்ட பலா-இ-இன்சானியத் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடை பெற்ற தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹபீஸ் அப்துல் ரவூப்பை 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் கொண்ட சாதாரண மனிதர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தானில் பொதுச்சேவைகள், பொது உறவுகள் அமைப்பின் அதிகாரியான அகமது செரீப் சவுத்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஹபீஸ் அப்துல் ரவூப் 1973-ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரது குடும்ப விவரங்கள் அனைத்தையும் நீங்கள் காணலாம்" என காட்டினார்.
இதற்கிடையே, ஆபரே ஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறையின் அதிகாரிகள் பங்கேற்ற புகைப்படத்தை இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டு பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்தார். இது பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தீவிரவாத குழுக்களுக்கும் இடையேயான நேரடி தொடர்பை காட்டுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.
- பாகிஸ்தான் ஃபட்டா பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல்.
- பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சரமாரி தாக்குதல் நடத்தியது. கடந்த 7ஆம் தேதி 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் 26 தாக்குதல் நடத்தி 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. இந்த நிலையில் 7ஆம்தேதி இரவு பாகிஸ்தான் இந்தியா எல்லையில் அத்துமீறி தாக்கதல் நடத்தியது. அத்துடன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. நேற்று முன்தினமும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த இந்தியா, தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் நேற்று உச்சகக்ட்டமாக பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிகளை குறிவைத்து டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அத்துடன் டெல்லியை நோக்கி பாலிஸ்டிக் ஏவகணையான ஃபட்டா-2 மூலம் தாக்குதல் நடத்தியது. இது அதிவேக ஏவுகணை ஆகும். 400 கி.மீ. தூரத்தை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும். இதை இந்தியா வானில் இடைமறித்து அழித்தது.
நேற்று வழிபாட்டு தலங்கள், மருத்துவ கட்டமைப்புகள், ராணுவ தளங்கள், பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதால் நடத்த முயற்சித்தது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் மென்மேலும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லை நோக்கி நகர்த்தி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஒருவேளை தரைவழி தாக்குதலுக்கு தயாராகிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் பிரதமர் மோடி பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஒருவேளை பாகிஸ்தான் தாக்குதலை அதிகரித்தால் தற்போதுள்ள அறிவிக்கப்படாத போர், அதிகாரிப்பூர்வமாக போர் அறிவிப்பாக மாறலாம்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல்.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு.
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் ஜெய்சல்மேர் பகுதியில் இடைமறித்து தாக்கி அழித்தது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அக்னூர், கிஸ்த்வார் மற்றும் பல பகுதிகளில் Blacout எனும் மின்சார தடை ஏற்பட்டு இருளில் மூழ்கப்பட்டுள்ளது. டிரோன் தாக்குதலுக்கான சைரன் ஒலித்து கொண்டே இருக்கிறது.
டிரோன் தாக்குதலுக்கிடையே, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாராமுல்லா மாவட்டங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் (LoC) பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். எல்லையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
- இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- தாக்குதலில் 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.
சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த விதிகளை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது
இதற்கிடையே நேற்றிரவு ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக அவந்திபூரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட்டு, அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, அதாம்பூர், பதிண்டா, சண்டிகார், நநல், பலோடி, உட்டார்லை, பூஜ் ஆகிய இடங்கில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் சரமாரி தாக்குதல் நடத்தியது.
இந்திய விமானப்படை எஸ்-400 சுதர்ஷன் சக்ரா வான் பாதுகாப்பு ஏவுகணை சிஸ்டம் மூலம் அவைகள் தாக்கி அழிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 16 பேர் உயிரைப் பறித்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
- பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 23 ஆம் தேதி பஞ்சாபில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிர ஆலோசனை.
- இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் பாகிஸ்தான் எல்லையில் படைகளை உஷார் படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில இருப்பவர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை, அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் தன்னை உஷார் படுத்தி வருகிறது. எல்லைகளில் படைகளை குவித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப், இந்தியா விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இதனால் படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் கூறுகையில் "நாங்கள் எங்கள் படையை வலுப்படுத்தியுள்ளோம். ஏனென்றால் இப்போது உடனடி தாக்குதல் ஒன்று இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவம் அரசுடன் இந்தியா தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது எனத் தெரிவித்ததுடன், இந்தியாவின் தாக்குதால் உடனடியாக இருக்கும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.
எங்களுடைய இருப்புகளுக்கு நேரடி மிரட்டல் இருந்தால் மட்டும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் மேலும் என்றார்.
- இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
- அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடும் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக ராஜினாமா எனவும் கூறப்படுகிறது.
- நேற்று முன்தினம் இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கடுமையான பதட்டம் உருவானது.
- நேற்று இரவு இரு தரப்புக்கும் நிகழ்ந்த துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்ததாக தெரிய வந்து உள்ளது.
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி 26 சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு சுற்றுலா பயணிகளையும் அவர்கள் இந்துவா? என்று விசாரித்து அறிந்த பிறகு தலையில் சுட்டுக்கொன்றது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதிகளில் போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கடுமையான பதட்டம் உருவானது. அன்று இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் விதிகளை மீறி அத்துமீறல்களில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் எல்லைப் பகுதி ராணுவ நிலைகள் மீது பல இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். உடனடியாக அவர்களுக்கு இந்தியா தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. அதில் இந்தியா தரப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து விதிகளை மீறி அத்துமீறல்களில் ஈடுபட்டனர். இந்திய நிலைகள் மீது நேற்று இரவும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து இந்தியா தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பல இடங்களில் இந்திய வீரர்கள் துப்பாக்கி சூட்டை தீவிரப்படுத்தினார்கள். அதன் பிறகே பாகிஸ்தான் வீரர்கள் தங்களது நிலைக்கு பின்வாங்கி சென்றனர்.
நேற்று இரவு இரு தரப்புக்கும் நிகழ்ந்த துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்ததாக தெரிய வந்து உள்ளது. இந்தியா தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பயத்தில் பாகிஸ்தான் எல்லை வீரர்கள் யூகத்தின் அடிப்படையில் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இது தொடர்பாக கூறுகையில், தாங்கள் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
- இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தபடி வாகா எல்லை மூடப்பட்டது.
- இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.
மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தபடி வாகா எல்லை மூடப்பட்டது. அங்கு ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியர்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற அறிவிப்பை பாகிஸ்தானும் வெளியிட்டுள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சண்டையை ஆரம்பித்தது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.
எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுகிறது.






