search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LoC"

    • எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்
    • இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், நேற்றிரவு திடீரென பாகிஸ்தான் வீரர்கள் (Pakistan Rangers) துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.

    நேற்றிரவு 8 மணியில் இருந்து நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்குள்ளே இருந்தனர். இருந்தபோதிலும் எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், நான்கு பொதுமக்கள் காயம் அடைந்தனர்.

    பாகிஸ்தான் வீரர்கள் அரினியா, ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள ஐந்து இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் குப்வாரா மாவட்டம் மச்சில செக்டாரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர்.

    இதற்கிடையே எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஐந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி, உடுருவல் திட்டத்தை முறியடித்தனர்.

    சுமார் இரண்டு மூன்று வருடத்திற்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், நேற்றிரவு 8 மணியில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக எல்லையோர மக்கள் தெரிவித்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார். #Soldierkilled #Pakistanarmy #ceasefire #Rajouriceasefire
    ஜம்மு:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.



    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் ராணுவம்  துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், இன்றும் இதே ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு இந்திய வீரர் உயிரிழந்தார்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இன்றுவரை பாகிஸ்தான் ராணுவம் 110 முறை இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Soldierkilled #Pakistanarmy #ceasefire #Rajouriceasefire
    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir
    ஸ்ரீநகர்:

    புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான்  ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.



    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளத்தாக்கு பகுதியை ஒட்டியுள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம்  இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் 7 மணிக்கு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எனினும், எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு ராகுல் காந்தி சல்யூட் தெரிவித்துள்ளார். #PulwamaAttack #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன.

    இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய தேசிய கொடி லோகோவையும் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி சார்பிலும் இந்திய விமான படைக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், ‘‘இந்தியர்களை பாதுகாக்க இந்திய விமான படை மேற்கொண்ட உறுதியான தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம் ஜெய்ஹிந்த்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.



    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி பெருமைப்படுத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறுகையில், ‘‘சகோதி, முசாபராபாத், பாலாகோட் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. உண்மையில் இந்தப் பகுதிகள் நமக்கு சொந்தமானவை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. எனவே நாம் நமது மண்ணில்தான் குண்டுவீசி இருக்கிறோம். இதில் தவறு இல்லை. நம் பகுதியை காக்க நாம் தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

    இதுவே அவர்களது (பாகிஸ்தான்) எல்லை என்றால் ஐ.நா. படை மூலம் தான் தாக்குதல் நடத்தி இருக்க முடியும். எங்களை தாக்கினால் நாங்கள் இந்தியாவை ஆயிரம் கூறு போடுவோம் என்று பாகிஸ்தான் மிரட்டி இருந்தது. எனவே 1000 குண்டுகளை இந்தியா வீசியிருப்பது சரியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் கூறுகையில், “40 வீரர்கள் பலியானபோது வேதனை அடைந்தோம். இப்போது பதிலடி கொடுப்பது ஆறுதல் அளிக்கிறது” என்றார். #PulwamaAttack #IAFAttack #LoC
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய விமானப்படை அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது. #IAFAttack #PakistanAccusesIAF
    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகள் வீசின. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



    இந்நிலையில், முசாபராபாத் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய விமானப்படை அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது. இந்திய விமானப்படையின் தாக்குதலில் உயிரிழப்போ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தலைவர் ஆசிப் கபூர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் விமானப்படை உடனடியாக புறப்பட்டதால் இந்திய விமானம் திரும்பி சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

    புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. #IAFAttack #PakistanAccusesIAF
    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. #IAFAttack #LoC
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசும் கூறியிருந்தது. எனவே, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்று எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின.

    இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் (மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  #IAFAttack #LoC

    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகளின் மீது தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. #LoC #ceasefire #PoonchLoC
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் கடந்த பத்து நாட்களாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

    இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் குல்பூர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டதாக இந்திய ராணுவ உயரதிகாரி குறிப்பிட்டார்.

    மேலும், ஜம்மு மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை நமது எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். #LoC #ceasefire #PoonchLoC
    காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். #BATattack #LoC #Pakistanisoldiers
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியான நவ்காம் செக்டர் கண்காணிப்பு சாவடியில் இன்று அதிகாலை இந்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் அடர்த்தியான இருள் சூழ்ந்திருந்தது. அங்குள்ள அடர்ந்த காடுகளின் வழியாக பாகிஸ்தானில் இருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதைகண்ட இந்திய வீரர்கள் ஊடுருவ முயன்றவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டனர்.

    ஆனால், இந்த தாக்குதலை திசை திருப்பும் வகையில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த ராணுவத்தினர் இந்திய வீரர்களை நோக்கி ஆவேசமாக துப்பாக்கிகளால் சுட்டனர். ஊடுருவ முயன்றவர்களும் ஒருபக்கத்தில் துப்பாக்கிகளால் சுட்டவாறு முன்னேறி வந்தனர்.



    இந்த இருதரப்பு தாக்குதல்களுக்கும் இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். விடியவிடிய நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நமது தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாததால் ஊடுருவ முயன்றவர்கள் காட்டு மரங்களுக்கு இடையில் பதுங்கியவாறு பின்நோக்கிச் சென்றனர்.

    பொழுது புலர்ந்த பின்னர் அந்த காட்டுப்பகுதிக்கு சென்ற இந்திய வீரர்கள் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் அணியும் சீருடையுடன் இருவர் இறந்து கிடப்பதை கண்டனர். அவர்கள் அருகாமையில் கிடந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் வெடிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    புத்தாண்டு தினத்தன்று எல்லைப்பகுதியில் உள்ள இந்திய வீரர்களை கொடூரமான முறையில் கொல்வதற்காக இந்த ஊடுருவல் திட்டத்தை பாகிஸ்தான் ராணுவமே முன்நின்று செயல்படுத்தியதாக இந்திய ராணுவ உயரதிகாரிகள் கருதுகின்றனர்.

    விழிப்புணர்வுடன் செயல்பட்டு பெரும் அசம்பாவிதம் மற்றும் அன்னிய சக்தியின் ஊடுருவலை முறியடித்த நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். #BATattack #LoC #Pakistanisoldiers 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். #LoC #mineblast
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் எல்லைக்கோட்டுப்பகுதியில் நேற்றிரவு இந்திய வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த இரு வீரர்கள் காயம் அடைந்தனர்.

    உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #LoC #mineblast
    போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் இனி துப்பாக்கிச்சூடு வேண்டாம் என இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே அடிக்கடி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறியது.

    இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டாலும் வீரர்கள் இழப்பு என்பது அதிகரித்த வண்ணமே இருந்தது. பயங்கரவாத தாக்குதல்களை விட பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் வீரர்கள் பலியாவது கூடுதலாக உள்ளது. குறிப்பாக, காஷ்மீரின் ரஜோரி, சம்பா, உரி ஆகிய பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது.

    இந்நிலையில், இரு நாட்டு ராணுவ செயல்பாட்டுபிரிவு இயக்குநர் ஜெனரல்கள் மத்தியில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. ஹாட்லைன் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், எல்லை துப்பாக்கிச்சூடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 

    2003-ம் ஆண்டு போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு மூச்சாக கடைப்பிடிப்பது என உடன்பாடு எட்டப்பட்டது. 
    ×