என் மலர்
நீங்கள் தேடியது "தீபாவளி பலகார சீட்டு"
- மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
- சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க...

மைசூர் பாக் செய்முறை
* மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.
* நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்)
* அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.
* சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும்.
* ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது.
* சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும்.
* கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம்.
* ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
* மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது.
* 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம்.
* அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும்.
- இனிப்பு வகைகள் தயாரிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்
- தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாராபுரம் :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமிக்க இனிப்பு வகைகள் தயாரிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.அதில் தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில், தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளதாவது:-
இனிப்பு கார வகைகள், பேக்கரி பொருட்களை, தரமான மூலப்பொருட்கள் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்படம், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக நிறமிகள், கார வகைகளில் நிறமிகளை பயன்படுத்தக்கூடாது.பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சூடான பொருட்களை பிளாஸ்டிக் தாள் கொண்டு மூடி வைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக நிறமிகள் பயன்படுத்தினால் உணவு மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும். எண்ணெய், நெய் மற்றும் மூலப்பொருட்களின் விபரங்கள் முழுமையாக அதன் கொள்முதல் கேன்கள், டின் லேபிளில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.பால், பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளை தனியாக வைக்க வேண்டும். பயன்படுத்தும் கால அளவை அச்சிட்டிருக்க வேண்டும்.இனிப்புகளில் பூஞ்சை தொற்று வராதவாறு, பாதுகாக்க வேண்டும். இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் பலகார சீட்டு நடத்துபவர்கள் அனைவரும் துறையில் பதிவு அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும்.இவர்கள் துறையின் பாஸ்டாக் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






