என் மலர்
நீங்கள் தேடியது "Sweet Box"
- மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
- சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க...

மைசூர் பாக் செய்முறை
* மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.
* நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்)
* அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.
* சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும்.
* ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது.
* சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும்.
* கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம்.
* ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
* மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது.
* 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம்.
* அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும்.
- சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவி வழங்கி வருகிறார்.
- குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் முசம்மில் கான். கம்மம் மாவட்டத்தில் உள்ள வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்ற உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் பெண் பிறப்பு சதவிகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண் பெருமை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பெண் குழந்தைகள் பிறந்தால் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து சுவீட் பாக்ஸ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஏற்கனவே கலெக்டர் முசம்மில் கான் பெண்களின் மேம்பாட்டிற்காக மாவட்டத்தில் 19 டீ கடை மற்றும் உணவகங்களை தொடங்கி வைத்து உள்ளார்.
திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவி வழங்கி வருகிறார்.
கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பகல் நேர பராமரிப்பு மையத்தை நடத்தி வருகிறார்.
பராமரிப்பு மையத்தில் குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
- மாற்றுத்திறன் மாணவர்களை கடைக்கு அழைத்து சென்று உடைகளை எடுத்து கொடுப்பது மன நிறைவை தருகிறது.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி (ஞாயிறு) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
அதற்காக அனைத்து மக்களும் பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்கிட கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர் .
விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும், பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவ -மாணவிகளும் எந்த ஒரு காரணத்துக்காகவும் தீபாவளி கொண்டாட்டங்க ளையும் பண்டிகை தரும் அளவற்ற மகிழ்வான தருணங்களையும் தவற விடக்கூடாது என்ப தற்காக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை முன்னிட்டு ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திப்பியக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாண வர்களையும் அவர்களது பெற்றோர், ஆசிரியர்களுடன் அவர்களது இல்லத்திலிருந்து தஞ்சாவூரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகள் அவர்கள் விரும்பும் உடைகளை தீபாவளி பரிசாக ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் வாங்கிக் கொடுத்தனர்.
மேம்பாலம் பார்வைத்திறன் குறைவுடையோர் பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவ- மாணவிகளுக்கும் தேவையான புத்தாடைகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது .
மேலும் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் 10 வகையான இனிப்புகள் அடங்கிய ஸ்வீட்பாக்ஸ் வழங்கி பண்டிகை கால வாழ்த்துக்கள் தெரிவிக்க ப்பட்டது.
மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் , இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில், ஆதர வற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி உள்ளிட்டபண்டிகை காலங்களை மகிழ்வாக கொண்டா டுவதற்காக தொடர்ந்து பல்வேறுநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வேளையில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவர்களை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது மன நிறைவை தருவதாக தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வை யாளர் கல்யாண சுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






