search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweet"

    • 8 ஆண், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன.
    • தீபாவளி பண்டிகைகளில் குழந்தை பிறந்தது தங்களுக்கு பரிசாக திகழ்கிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோர்ட்டு அருகில், அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கும்பகோணம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    அதன்படி தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் தினமும் சுகபிரசவமாகவும், அறுவை சிகிச்சையின் மூலமும் ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன.

    அதன்படி தீபாவளி பண்டிகை நாளில் 8 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் சுக பிரசவமாக 6 குழந்தைகளும், அறுவை சிகிச்சை மூலம் 6 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    குழந்தைகளும், தாய்மார்க ளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

    குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், தீபாவளி பண்டிகை பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தீபாவளி கொண்டாடினார்.
    • அனைவருக்கும், புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி திருநாளில் ஆதரவற்றோர், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை மங்களபுரத்தில் உள்ள அதுல்லாம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., அங்குள்ள அனைவருக்கும், புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.

    முதியவர்கள், சிறுவர்களைப் போல் மத்தாப்புகளை கொளுத்தி உற்சாகமடைந்தனர்.

    குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு , எம்.எல்.ஏ.வுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க பகுதி செயலாளர்கள் நீலகண்டன் (கீழவாசல்), சதாசிவம் (மருத்துவ கல்லூரி), மண்டல குழு தலைவர் கலையரசன், கவுன்சிலர்கள் ஆனந்த், அண்ணா.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் சங்க பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக சங்க செயலாளர் ரோட்டரியன் சோமசுந்தரம் அனைவ ரையும் வரவேற்றார்.

    வட்டார கல்வி அலுவலர்கள் ரோட்டரியன் அறிவழகன், பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரோட்டரியன் வாசுதே வனின் பங்களி ப்புடன் சிறப்பாக கொண்டா டப்பட்ட விழாவில் சுமார் 30 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், இனிப்பு பலகாரங்கள் வழங்கப்பட்டது.

    இதில் ரோட்டரியன் ஏ.ஆர்.ஜான், ரோட்டரியன் தனிகாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் வேதரத்தினம், ஆசிரியர் சுபாஷ், வார்டு உறுப்பினர் எழிலரசன், ஆசிரியர் வேதரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

    • உணவு, இனிப்பு பொருட்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும்.
    • ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டு க்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்உள்ள உணவகங்கள் மற்றும் இனிப்பகங்கள் உள்ளி ட்ட கடைகளுக்கு தஞ்சை மாவட்ட உணவுபாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.

    இதில் தீபாவளிபண்டிகைக்கு தயாராகி வரும் இனிப்புகள் தரமானதாக உள்ளதா எனவும் அத்தோடு அதில் தயாரிப்பு மற்றும் காலாவதி யாகும் தேதிகள் கட்டாயம் குறிப்பிடப்பட்டு ள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்ட பத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இனிப்பாக உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு மற்றும் இனிப்பாக உரிமை யாளர்களிடத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகள் மற்றும் சில விதிமுறைகள் வழங்கினர்.

    பின்னர் தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா செய்தி யாளர்களிடத்தில் கூறுகை யில், ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு தேதி மற்றும் அதன் காலாவதி தேதியை கட்டாயம்குறிப்பிட வேண்டும்.

    இந்த நடை முறையை கட்டாயம் அனைத்து ஹோட்டல் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பொது மக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு மற்றும் இனிப்புகளை வழங்க முடியும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கடேசன் செயலாளர் அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும்.
    • ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும்.

    தமிழர்களின் பண்பாடுகள் எல்லாம் தலைசிறந்த விருந்தோம்பல் என்பதும் ஒன்று. உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும். விருந்தளிக்கும் பொழுது சிறப்பாக எல்லா சுவைகளும் கலந்த விதத்தில் தலை வாழை இலைபோட்டு புன்னகையோடு விருந்தளித்தால் அறுசுவை உணவோடு அற்புதமான சாப்பாடு என்று சொல்வார்கள்.

    அந்த ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும். இந்த ஆறு சுவைகளையும் யார் ஒருவர் உட்கொண்டு வந்தாலும் உடலில் நோய்க்கான அறிகுறிகளே இருக்க முடியாது. ஆறுசுவையும் ஒரே காலத்தில் ஒரு சேரக்கிடைப்பது என்பது அரிது. எனவே அதற்கான காலங்கள் வரும் பொழுது அவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

    ஒவ்வொரு மனிதனும் உடல் நலத்தை பேணுவதற்கு அத்தியாவசியத்தேவை நல்ல சத்துள்ள உணவாகும். இனிப்பு, உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவை. இவற்றை தேவைக்கேற்ப சாப்பிட்டால் தேகநலன் சீராகும்.

    வருடத்தின் முதல் நாள், மாதத்தின் முதல் நாட்களில் முக்கியமாக சதுர்த்தி, பொங்கல் விழா எனப்படும் முக்கிய நாட்களில் பிள்ளையாருக்கு சர்க்கரைப் பொங்கல் வைப்பது வழக்கம். அதில் வெல்லத்தை சேர்த்து இனிப்பு சுவையை கூட்டிக் கொள்கின்றோம். அதேபோல மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு அன்று நமது இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காக உப்பு வாங்குவது வழக்கம். அதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகின்றோம்.

    நமது உடம்பில் உள்ள எலும்பு, நரம்புகளுக்கு கால்சியம் சத்து தேவை. அதை சோடியம் குளோரைடு என்னும் உப்பின் மூலமாகப் பெறுகின்றோம்.

    வருடப்பிறப்பு அன்று எல்லா சுவைகளும் கலந்த உணவை நம் முன்னோர்கள் வைப்பது வழக்கம். இனிப்பு, உப்பு, கசப்பு. கார்ப்பு. துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறுசுவைக்கும் ஏற்ப சாம்பார். கூட்டு. பொரியல். அப்பளம், பாயசம், வேப்பம்பூ பச்சடி, மாங்காய் இனிப்பு பச்சடி, வாழைப்பூ வடை என்றெல்லாம் வைத்து உணவு பரிமாறிய பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்து விருந்தினரை கவனிப்பது வழக்கம். பாக்கில் துவர்ப்பு சத்தும் வெற்றிலை ஜீரண சக்தியையும், சுண்ணாம்பு கால்சியம் சத்தையும் கொடுக்கின்றது.

    பொதுவாக வாழ்க்கை என்பது இன்பமும். துன்பமும், நன்மையும். தீமையும் கலந்து வருவதுதான். எந்த விழாவிற்கு சென்றாலும் முதலில் இனிப்புத் தான் கொடுப்பர். பிறந்தநாள் என்றாலும் திருமண நாள் என்றாலும், திருமணத்தில் தாலிகட்டும் நேரத்திலும் இனிப்பு வழங்குவதுதான் வழக்கம். இவ்வாறு விழா நாட்களில் இனிப்பை உட்கொண்டாலும் மற்ற நாட்களில் பிறகவைகளும் நமக்குத் தேவை. எப்படித்தான் இனிப்பு சுவை இருந்தாலும் கசப்பு சுவையும் நம் உடலுக்கு அவசியம் தேவை.

    இன்பத்தை பார்க்கும் நாம் துன்பத் தையும் சமமாகப் பார்க்க வேண்டும். உதாரணமாக கரும்பு இனிப்பின் இருப்பிடம். வேம்பு கசப்பின் இருப்பிட மாகும். இதனால் தான் வருடப் பிறப்பன்று கசப்பாக இருந்தாலும் வேப்பம்பூ பச்சடியை சேர்க்கின்றோம்.

    தை மாதம் இனிப்புச்சுவை தரும் கரும்பினையும் உண்கின்றோம். ஆடி மாதத்தில் அம்பிக்கையைக் கொண்டாட வேப்பிலை எடுத்துச்செல்வர். கூழ் காய்ச்சிக் கொடுப்பதில் வேப்பிலை தூவுவர். வேம்பு என்பது ஒரு கிருமி நாசினி. சர்வரோக நிவாரணி என்று கூடச் சொல்ல லாம். இதைத்தவிர நீரழிவு, புற்றுநோய் தடுப்பு. அம்மை நோய் தடுப்பு, மற்றும் நம் உடலில் உருவாகும் நச்சுக் களை அழிப்பதற்கும் பயன்படுகின்றது.

    வீடுகளில் விருட்சங்களாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு தெய்வீக மூலிகை வேம்பாகும். கரும்பிற்கும், வேம்பிற்கும் உள்ள சுவை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இரண்டும் சமநிலை வகிக்கின்றது.

    உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் கூறியுள்ளார். எனவே ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்தினால் தான் சீரோடும். சிறப்போடும் ஒவ்வொருவரும் வாழமுடியும். எனவே அன்றாட வாழ்வில் அறுசுவை உணவால் ஆரோக்கிய வாழ்வை நாம் பெறவாம்.

    • பனீர் ஃபர்பியை பார்த்ததும் அதை வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டார்கள்
    • எல்லா பண்டிகை நாட்களிலும் இந்த சுவீட் இல்லாமல் முழுமை பெறாது.

    தேவையான பொருட்கள்

    பனீர்-200 கிராம்

    சர்க்கரை-200 கிராம்

    முந்திரி, பாதாம்- ஒருகப்

    பால்-1/2 லிட்டர்

    பால்பவுடர்-100 கிராம்

    செய்முறை

    ஒரு மிக்சி ஜாரில் பனீரை போட்டு ஒரு முறைபொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு முந்திரியையும், பாதாம் பருப்பையும் ஒரு பிளேட்டில் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் காடாயை வைத்து காய்ந்ததும் அதில் 100 கிராம் பால்பவுடர் போட்டு அதில் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்க்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த பனீர், துருவிய பாதாம், முந்திரி கலவை ஆகியவற்றை சேர்த்து கெட்டி இல்லமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையை சிறிது கெட்டிபதம் வந்ததும் அதில் ஒரு ஸ்பூன் நெய்சேர்த்து கிளறி இறக்கவும்.

    இந்த கலவையை ஒரு நெய் தடவிய பிளேட்டில் கொட்டி நன்றாக ஆறியதும் துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சுவையான பனீர் ஃபர்பி தயார். இந்த ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

    • மிகவும் சுவையான சூரியகலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
    • தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான டிஷ் சூரியகலா

    `சந்திரகலா', `சூர்யகலா' என்ற இரண்டு பெயர்களை கேட்டதும் ஏதோ ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளின் பெயர் என்று தான் நாம் நினைப்போம். ஆனால், உண்மையிலேயே அவை ஒரு ஸ்வீட் பெயர் என்று சொன்னால் ஆச்சர்யம்தான். இந்த பதிவில் மிகவும் சுவையான சூரியகலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

    தஞ்சாவூரில், `பாம்பே ஸ்வீட்ஸ்' என்றாலே `சந்திரகலா, சூர்யகலா ஸ்வீட்ஸ்' என்கிற அளவுக்கு பிரபலமான டிஷ். தஞ்சாவூரின் அடையாளங்களை சொல்லும் பட்டியலில் புதுவரவு இந்த சூரியகலா ஸ்வீட் என்றால் அது மிகையாகாது.

    தேவையான பொருட்கள்:

    மைதாமாவு -ஒரு கப்

    சர்க்கரை- ஒரு கப்

    நெய்- 3 ஸ்பூன்

    உப்பு- ஒரு சிட்டிகை

    கோவா- ஒருகப்

    முந்திரி, பாதாம்- உடைத்தது

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    கோவாவை பூரணமாக வைத்து செய்யக்கூடிய ஸ்வீட் வகையின் பெயர் தான் சூரியகலா. முதலில் பூரணம் தயார் செய்துகொள்ளலாம். அதற்கு ஒரு கப் இனிப்பாக இருக்கும் கோவாவை ஒரு பவுளில் சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். அதில் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் ஆகிய நட்ஸ் வகைகளை உடைத்து இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் சூரியகலா செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் 3 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை 10 நிமிடம் முடிவைக்க வேண்டும்.

    தயாரித்து வைத்த மைதாமாவு கலவையை எடுத்து சிறிய உருண்டைகளாக அதாவது பூரிக்கு உருட்டுவது போன்று உருட்டி அதனை சிறிய வட்ட வடிவில் தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிய சிறிய உருண்டைகளையும் வட்டமாக தட்டி அதன் ஒருபகுதியில் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்த கோவா கலவைகளை நடுவே வைத்து அதன் மேல் மற்றொரு தட்டையை வைக்க வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்ட வேண்டும். மற்றும் இதன் ஓரங்களை கைமுருக்கு உருட்டுவது போல நன்றாக மடித்து விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு உருண்டைகளையும் சூரியகலாக்களாக வட்டமான வடிவில் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து இந்த சூரியகலாக்களை பொறித்து எடுக்க வேண்டும்.

    ஜீரா தயார் செய்வதற்கு ஒரு வாணலியில் ஒரு கப் சர்க்கரை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். நாம் கையில் தொட்டு பார்த்தால் பிசுபிசுப்பாக இருக்கும் அளவுக்கு ஜீரா தயார் வேண்டும். கம்பி பதம் தேவையில்லை.

    நாம் ஏற்கனவே எண்ணெயில் பொறித்து தயாராக வைத்துள்ள சூரியகலாக்களை அந்த ஜீராவில் சேர்க்க வேண்டும். நன்கு அந்த ஜீராவில் சூரியகலாக்களை புரட்டி எடுத்து 5 நிமிடத்திற்கு ஜீராவில் இருக்குமாறு அதனை வைக்க வேண்டும். ஜீரா முழுவதும் சூரியகலாவில் கலந்ததும் இதனை தனியாக எடுத்து வைக்கலாம். சுவையான சூரியகலா தயார்.

    • பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள்ளது.

    திருப்பூர் :

    கோடை விடுமுறை முடிந்து இன்று1 முதல், 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், பல்லடம் , உடுமலை உள்பட அனைத்து இடங்களில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். குழந்தைகள் என்பதால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். 1-ம்வகுப்பு சேர்ந்த சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம்பிடித்தனர். அவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள் ளது. இவற்றில் 6முதல், பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து 673 பேர் கல்வி பயில்கின்றனர். பள்ளி திறந்த கடந்த 12ந்தேதி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 545 பேர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். 6,128 பேர் (5 சதவீதம்) பள்ளிக்கு வரவில்லை. நடப்பு வாரத்துக்குள் இவர்கள் பள்ளிக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை தொடங்கி உள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 1-ம்வகுப்பில் 2,645 மாணவர்கள் அரசு பள்ளியில் இணைந்துள்ளனர். 2-ம் வகுப்பில் 220, 3-ம் வகுப்பில் 238, 4-ம் வகுப்பில் 241, 5-ம் வகுப்பில் 240, 6-ம் வகுப்பில் 532 பேர் இணைந்துள்ளனர். 7 மற்றும் 8-ம் வகுப்பில் முறையே 65 மற்றும் 62 பேர் என மொத்தம், 4,243 பேர் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளனர்.

    தமிழை முதன்மை பாடமாக தேர்வு செய்து படிக்க 1,351 மாணவர், 1,290 மாணவிகள் என 2,641 பேர் இணைந்துள்ளனர். ஆங்கில மீடியம் படிப்பை 840 மாணவர், 762 மாணவிகள் என 1,602 பேர் தேர்வு செய்துள்ளனர்.

    மாவட்ட கல்வி அலுவலர் அமுதா கூறுகையில், இன்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவருக்கும் நோட்டு வழங்கப்படும். ஒரு வாரத்துக்குள் விடு பட்டவர்களுக்கு வழங்க தேவையான புத்தகம் பள்ளிகளில் இருப்பில் உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீருடை, காலணி உள்ளிட்ட நலத்திட்டங்களும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றார்.

    • பிளஸ்-2 தேர்–வில் மாணவி கே. சவுந்–தர்–ய–லட்–சுமி 600-க்கு 594 மதிப்–பெண்–கள் பெற்று கட–லூர் மாந–கர அள–வில் முதல் இடத்–தைப் பெற்றுள்ளார்.
    • பள்–ளி–யின் தாளா–ளர் டி.மாவீ–ர்மல் சோர–டியா, முதல்–வர் எம்.சந்–தோஷ்–மல் சோர–டியா ஆகி–யோர் பாராட்டி இனிப்பு மற்–றும் பரிசு வழங்கினர்.

    கடலூர்:

    கட–லூர் லட்–சுமி சோர–டியா நினைவு மெட்–ரிக் மேல்– நி–லைப்–பள்–ளி–யில் 2022-23-ம் க ல்– வி– ய ாண்– டு க்– க ா ன பிளஸ்-2 தேர்–வில் மாணவி கே. சவுந்–தர்–ய–லட்–சுமி 600-க்கு 594 மதிப்–பெண்–கள் பெற்று கட–லூர் மாந–கர அள–வில் முதல் இடத்–தை–யும், மாவட்ட அள–வில் 2-ம் இடத்–தை–யும் பெற்று சாதனை படைத்–துள்–ளார். வி. ஸ்ரீஹ–ரிணி 600-க்கு 591 மதிப்–பெண் பெற்று பள்–ளி–யில் 2-ம் இடம் பெற்–றுள்–ளார். இந்த 2 மாண–வி–களும் வணி–க–வி–யல், கணக்கு பதி–வி–யல் மற்–றும் கணினி பயன்–பாட்–டில் முழு மதிப்–பெண் பெற்–றும் சாதனை படைத்–துள்–ள–னர்.

    மேலும் எம்.திவ்யா 600-க்கு 580 மதிப்–பெண் பெற்று 3-ம் இடம் மற்–றும் வேதி–யி–யல் மற்–றும் கணினி அறி–வி–யல் பாடத்–தில் முழு மதிப்–பெண்–ணும் பெற்–றுள்–ளார். எஸ். நந்–திதா 600-க்கு 572 மதிப்–பெண் பெற்று 4-ம் இடத்–தி–லும், சி.யுவ–ஸ்ரீ 600-க்கு 566 மதிப்–பெண் பெற்று 5-ம் இடத்–தை–யும் பெற்று சாதனை படைத்–துள்–ள–னர். பாட–வா–ரி–யாக முழு–மதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 8 மாண–வர்–களும், 500-க்கு மேற்–பட்ட மதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 26 மாண–வர்–களும், 450-க்கும் மேற்–பட்டமதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 21 மாண–வர்–களும் உள்–ள–னர்.

    வெற்றி பெற்ற மாண–வர்–க–ளுக்கு பள்–ளி–யின் தாளா–ளர் டி.மாவீ–ர்மல் சோர–டியா, முதல்–வர் எம்.சந்–தோஷ்–மல் சோர–டியா மற்–றும் உதவி தலைமை ஆசி–ரி–யர் பத்–தா–கான் ஆகி–யோர் பாராட்டி இனிப்பு மற்–றும் பரிசு வழங்கினர்.

    • ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று ரவையில் இனிப்பு பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - 1/4 படி

    அச்சு வெல்லம் - 12

    நெய் - 5 தேக்கரண்டி

    முந்திரிப்பருப்பு - 12

    காய்ந்த திராட்சை - 12

    ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

    ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை

    செய்முறை:

    ரவைவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிய பின் நன்றாக வறுத்த ரவாவை சிறிது சிறிதாக கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

    ஃபுட் கலரை சிறிதளவு பாலில் கலந்து இந்த பொங்கலில் கலந்தால் சீராகக் கலந்துவிடும்.

    வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும்.

    இந்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சேர்ந்து வரும் வரை கிளறவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை சுட வைத்து முந்திரி, திராட்சை வறுத்து ரவா பொங்கலில் கலக்கவும்.

    ஏலக்காய் பொடி கலந்துவிட்டால் சுவையான ரவை இனிப்பு பொங்கல் தயார்.

    • சிறுத்தலைகாடு மீனவ கிராமத்தில் இருந்து நாகைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது.
    • புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டதால் பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா சிறுத்தலைகாடு மீனவ கிராமத்தில் இருந்து நாகைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழழ நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமை வகித்தார்.

    தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன் பஸ் சேவையை தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக வேதாரண்யம் கிளை மேலாளர் எழில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, வார்டு கவுன்சிலர் ஐஸ்வர்யா, மாவட்ட பிரதிநிதி பாபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.

    புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ் சிறுத்தலை காட்டில் இருந்து காலை 8 மணி, 10:30 மணி, மாலை 3 மணி என மூன்று முறை கருப்பம்புலம், நெய்விளக்கு நால்ரோடு, வேதாரண்யம் வழியாக நாகைக்கு தினசரி மூன்று முறை இயக்கப்படும் என கிளை மேலாளர் தெரிவித்தார்.

    • சிவகங்கையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    சிவகங்கை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    இதையடுத்து சிவகங்கையில் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், இணை செயலாளர் மோசஸ், கூட்டுறவு சங்க தலைவர்கள் சசிக்குமார், பாபு, நகர நிர்வாகிகள் மோகன், கேபி.முருகன், அண்ணா தொழிற்சங்கம் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×