என் மலர்
நீங்கள் தேடியது "Recipes"
- ஈரலைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கழுவிப் பிழிந்து கொள்ளுங்கள்.
- ஈரல் துண்டுகளை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது.
தேவையான பொருட்கள்:
கோழி ஈரல் - அரைக் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 8 பல்
பட்டை - 2
இஞ்சி - 1 துண்டு
தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
கிராம்பு - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
* இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொண்டு, தேங்காய்த் துருவலுடன் கிராம்பு, சோம்பு, பட்டை ஆகியவற்றைச் சேர்த்து நீர் தெளித்து அரைத்துக் கொள்ளுங்கள்.
* ஈரலைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கழுவிப் பிழிந்து கொள்ளுங்கள்.
* அந்த துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு இஞ்சி விழுது, பூண்டு விழுது, மஞ்சள் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துப் பக்குவமாகப் புரட்டிவிட்டு ஊற வையுங்கள்.
* வெங்காயத்தைத் தோலுரித்துக்கொள்ள வேண்டும்.
* அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், வெங்காயத்தைத் தட்டிப் போட்டு வதக்குங்கள்
* பிறகு ஈரல் துண்டுகளை மசாலாவுடன் கொட்டி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்க் கலவையைப் போட்டு உப்பு சேர்க்கவும். அரை கப் நீர் ஊற்றி, ஒரு தட்டால் மூடி வைத்து வேகவிடுங்கள்.
* ஈரல் துண்டுகளை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. ஆகையால் அவை வெந்ததும் உடனே அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்.
சுவையான ஈரல் வறுவல் ரெடி!
- தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
- மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
* அடை மாவு புளித்து விட்டால் இட்லி தட்டில் இட்லி போல் மாவை ஊற்றி 7 நிமிடம் வேக வைத்து பின்பு அதை உதிர்த்து கடுகு, மஞ்சள் தூள், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து சிறிது உப்பு போட்டு வாணலியில் வறுக்க சூப்பர் அடை காரபுட்டு ரெடி.
* பலகாரம் செய்ய எண்ணெயை கொதிக்க வைக்கும்போது சிறிது இஞ்சியை அம்மியில் அல்லது மிக்சியில் நசுக்கிப் போட்டு உபயோகித்தால் பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது. பொங்கியும் வழியாது. எண்ணெய் புகையில் வாந்தி தலை, சுற்றல் வராது.
* வாழைக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகளை சிறிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் சத்தம் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விட வேண்டாம்.
* தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
* வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அது காய்ந்ததும் பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.
* பிடி கொழுக்கட்டை செய்யும்போது கொதிக்கும் நீரில் கேரட், பீன்ஸ், பட்டாணி இவைகளையும் வேக வைத்து அரிசி மாவை சேர்த்து வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.
* கோவைக்காயை கொதிநீரில் கொட்டி 5 நிமிடம் கழித்து வடிகட்டி உப்பு, பச்சை மிளகாய் அரைத்துப்போட்டு புளித்த தயிர் கடைந்து கிளறி ஒரு நாள் ஊறவைத்து காய போட்டால் கோவைக்காய் வற்றல் ரெடி.
* முருங்கை பூவை தேங்காய் எண்ணெயில் பொன்நிறமாக வறுத்து மோர் குழம்பில் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும், வாசம் சூப்பராக இருக்கும்.
* மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
* வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல் பாயசத்திற்கு கொஞ்சம் வெல்லம் குறைவாகப் போட்டு கடைசியில் சர்க்கரையை கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்.
* கூட்டு, குழம்பு இவற்றிற்கு அரிசி மாவு கரைத்து விடுவதற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து விட்டால் சீக்கிரம் கெட்டுப்போகாது, கெட்டியாகவும் இருக்கும்.
- எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
- பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.
* பக்கோடா, வடை முதலியவை செய்யும் பொழுது சிறிது சோம்பு அதிகமாக சேர்த்தால் ருசி தூக்கலாக இருக்கும்.
* வெங்காயம் வதக்கும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் நன்கு வதங்கும். சர்க்கரை வெங்காயத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மென்மைப்படுத்தும்.
* எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
* பால்கோவா செய்யும்போது இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை துணியில் கட்டி பாலில் வைத்தால் பால்கோவாவின் நிறம் கிரீம் போல் கிடைக்கும்.
* இரண்டு ஐஸ் கட்டிகள் மற்றும் கல் உப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பிளேடு கூர்மையாக மாறும்.
* பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.
* இட்லிக்கு மாவு அரைக்கும்போது சிறிது பழைய சாதம் மற்றும் அவல் சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
* சேமியா பாயசம் செய்யும்போது சேமியா குழைந்து விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்தால் சேமியா தனித்தனியாக பிரிந்து விடும்.
* எண்ணெய் பலகாரங்களை வைக்கும் டப்பாவில் உப்பை ஒரு துணியில் முடிச்சு போட்டு வைத்தால் காரல் வாடை வராது. நீண்ட நாட்களுக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.
* தேங்காயை தண்ணீரில் நனைத்து உடைத்தால் தேங்காய் சரிபாதியாக உடையும்.
* சப்பாத்திக்கு மாவு பிசையும்பொழுது சிறிது வெதுவெதுப்பான நீர் மற்றும் பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும்.
* தயிர் மிகவும் புளித்து விட்டால் ஒரு டம்ளர் நீர் ஊற்றி 10 நிமிடம் கழித்து அந்த நீரை வடித்து விட்டால், புளிப்பு நீருடன் சென்று விடும். புளிப்பில்லாத தயிர் கிடைக்கும்.
* மீன் குழம்பு செய்யும்போது சிறிது கடுகை வறுத்து அரைத்து மீனில் தடவி ஐந்து நிமிடம் கழித்து குழம்பில் சேர்த்தால் மீன் உடைந்து போகாது.
- சிக்கனில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம்.
- தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
அரைத்த தக்காளி - 1 கப்
நெய் - 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கிய பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் மூடியைத் திறந்து, அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது நன்கு வெந்தது நெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!
- வெற்றிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
- இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வெற்றிலை - 10
காய்ந்த மிளகாய் - 4
வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் - சிறிதளவு
பூண்டுப் பல் - 3
புளி - கோலிக்குண்டு அளவு
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெற்றிலைத் துவையல்
வெற்றிலைத் துவையல்
செய்முறை:
வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும்.
இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.
- அதிக நார்ச்சத்து உள்ள வாழைப்பூ மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
- மூலநோய், மூல புண்கள், இரத்தம் வெளியேறுதல் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 4
துருவிய தேங்காய் - கால் கப்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை:
வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.
அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.
மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும்.
இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.
- மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.
- உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
வெங்காயம் - 1
கேரட் - 2
முட்டைகோஸ் - அரை கப்
குடைமிளகாய் - 1
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வைக்கவும்.
பிசைந்து மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும்.
இதன் நடுவில், வேகவைத்த காய்களை மசாலாவை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து மூடிவிடவும்.
இதனை, இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான வெஜ் மோமோஸ் ரெடி..!
- இந்த தோசையை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
- இந்த தோசை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கரண்டி
ஸ்வீட் கார்ன் - தேவையான அளவு
குடைமிளகாய் - சிறியது 1
வெண்ணெய் - தேவையான அளவு
மிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி
சீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப
புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் - 1 மேசைக் கரண்டி
செய்முறை
குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றி வெண்ணெய் ஊற்ற அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
பின்னர் தோசை மேல் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸை தேய்க்கவும்.
அடுத்து அதன் மேல் ஸ்வீட் கார்ன், குடைமிளகாயை மேலே தூவி கொள்ளவும்.
அடுத்து அதன் மேல் மிளகு தூள், சிறிது உப்பு தூவவும்.
கடைசியாக தோசை மேல் சீஸை துருவி விடவும்.
சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவும்.
இப்போது சீஸ் கார்ன் கேப்சிகம் தோசை ரெடி.
- பாஸ்தாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று பாஸ்தாவில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மக்ரோனி - 1 கப்
பால் - 2 1/2 கப்
சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
முந்திரி - 2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதில் மக்ரோனியை சேர்த்து, மக்ரோனி பாதியாக வேகும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி நீரை வடித்து, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசிக்
கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே பேனில், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.
அடுத்து அதில் மக்ரோனியை சேர்த்து, பாலில் மக்ரோனி நன்கு மென்மையாக வேக வைத்து, பின் அதில் கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி
விட வேண்டும்.
பாலானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், பாஸ்தா பாயாசம் ரெடி!!!
- வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது.
- நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 250 கிராம்
கடலைமாவு - நான்கு மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்
பச்சைமிளகாய் - இரண்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.
பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.
உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.
வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்த வெண்டைக்காயைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.
இப்போது சூப்பரான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ரெடி.
- நண்டு குருமா இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
- சளி, வறட்டு இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
நண்டு - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
தேங்காய் பால் - 2 டம்ளர்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்
எண்ணெய் - 100 மிலி
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் - ஒரு கப்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
பாதாம் - 6
பூண்டு - 5 பல்
செய்முறை:
நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மசாலாவை பாத்திரத்தில் எடுத்து தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதுளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இப்போது கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி நண்டை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான நண்டு குருமா ரெடி.
- சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- இன்று சிக்கன் சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 300 கிராம்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்
அரைப்பதற்கு...
சின்ன வெங்காயம் - 10
கொத்தமல்லி - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேறிப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 1 சின்ன வெங்காயம்
செய்முறை:
* முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.






