search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dosa"

    • பேப்பர் தோசை முதல் பன்னீர் தோசை வரை என மக்கள் சமைப்பதில் 100-க்கும் மேற்பட்ட வகைகளை நாம் இன்றைய காலத்தில் பார்க்க முடியும்.
    • கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 123 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தோசை தயாரிக்க முடிவு செய்தது.

    பெங்களூரு:

    ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு செய்முறை என்று வரும்போது, தோசை ஒருபோதும் ஈர்க்க தவறுவதில்லை. தென்னிந்திய சமையலில் பிரபலமாக அறியப்படும் தோசை புளித்த அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட மாவுடன் தயாரிக்கப்பட்டது. குறைந்த எண்ணெய் நெய்யுடன் ஒரு ஒட்டாத பாத்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. பேப்பர் தோசை முதல் பன்னீர் தோசை வரை என மக்கள் சமைப்பதில் 100-க்கும் மேற்பட்ட வகைகளை நாம் இன்றைய காலத்தில் பார்க்க முடியும்.

    இந்த நிலையில் பெங்களூரு பொம்மசந்திராவில் எம்.டி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 123 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தோசை தயாரிக்க முடிவு செய்தது. அதன்படி 75 சமையல் கலைஞர்கள் குழுவுடன் எம்.டி.ஆர். புட்ஸ் நிறுவனம் இணைந்து லார்மன் கிச்சன் எக்யூப்மென்ட் மூலம் தோசை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 110 முறை தோல்விக்கு பிறகு அவர்கள் 123 அடி நீள தோசையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.


    இந்த தோசை 54 அடி 8.69 அங்குலம் இருந்தது. 37.5 மீட்டர் நீளம் கொண்டது. சிவப்பு அரிசி மாவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள எம்.டி.ஆர். தொழிற்சாலையில் இந்த மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டது.

    இந்த தோசை தயாரிப்பில் தலைமை சமையல்காரராக செயல்பட்ட செப் ரெஜி மேத்யூ தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி, "எம்டிஆரில் ஒரு வரலாற்று மைல்கல்லை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 123.03 அடி நீளமான தோசைக்கான கின்னஸ் உலக சாதனை பட்டத்துடன் 100-வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறோம் என தெரிவித்துள்ளார்.

    • இஷானியின் வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், சுகாதார அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் நடந்த தவறுக்கு இஷானியிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    டெல்லியில் ஒரு ஓட்டலில் பரிமாறப்பட்ட தோசையில் 8 கரப்பான்பூச்சிகள் இருந்ததாக பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இஷானி என்ற அந்த பெண் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள பிரபலமான ஓட்டலுக்கு கடந்த 7-ந்தேதி சென்றுள்ளார். அங்கு பிளைன் தோசை ஆர்டர் செய்த அவருக்கு சிறிது நேரத்தில் தோசை பரிமாறி உள்ளனர். அதில், பல கரும்புள்ளிகள் இருப்பதையும், அவை கரப்பான் பூச்சிகள் என்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இஷானியும், அவரது தோழியும் தோசையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை வீடியோ எடுத்துள்ளனர்.

    இதைப்பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவை எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து இஷானி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இஷானியின் வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், சுகாதார அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளனர். அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் ஓட்டல்களில் தங்களுக்கு நேர்ந்த உணவு அனுபவம் குறித்து பகிர்ந்தனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் நடந்த தவறுக்கு இஷானியிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடம் தான் பிடிக்கும்.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

    தேவையான பொருட்கள்:

    கல் தோசை - 3

    வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்)

    தக்காளி - 1

    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகு தூள் - - அரை டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 4

    கொத்தமல்லி - தேவையான அளவு

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    உப்பு - சுவைக்கு ஏற்ப

    எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

    தாளிக்க…

    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில் கல் தோசையை சிறிய துண்டுகளாக பிய்ந்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தொடர்ந்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    இவையனைத்தும் நன்றாக வதங்கியதும், பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    நாம் சேர்த்துள்ள தோசை மசாலாவுடன் நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழையைத் தூவி கீழே இறக்கவும்.

    இப்போது சூப்பரான தோசை உப்புமா தயார். அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து சுவைக்கலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உடல் பருமனைக் குறைக்க பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
    • கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வு தரும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - 100 கிராம்

    பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு

    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

    சீரகம் - 2 சிட்டிகை

    பச்சை மிளகாய் - ஒன்று

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    பச்சைப் பயறு, பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஊறவைத்த அரிசி, பயிருடன் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான பச்சைப் பயறு கொத்தமல்லி பெசரட் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டயட்டில் இருப்பவர்களுக்கு சத்தான டிபன் இது.
    • குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்

    வெங்காயம்- 1,

    பீன்ஸ் - 10,

    கோஸ் - 50 கிராம்

    கேரட் - 1,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    ப.மிளகாய் - 2,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பீன்ஸ், கோஸ், உப்பு சேர்த்து வேக விடவும்.

    காய்கள் முக்கால் பாகம் வெந்ததும் அதை கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    சத்தான வெஜிடபிள் தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள ஏதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகள் எதை வேண்டுமானலும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகள் தினமும் வெரைட்டியாக சாப்பிட ஆசைப்படுவாங்க.
    • குழந்தைகளுக்கு இந்த தோசையை செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    தோசைமாவு - தேவையான அளவு

    பன்னீர் - 2 கப்

    குடை மிளகாய் - 1

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன்

    சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

    பட்டர் - தேவையான அளவு

    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துருவிக் கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்கு சாஃப்ட் ஆகும் வரை வதக்க வேண்டும்.

    பிறகு, அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா வதக்கி கொள்ள வேண்டும்.

    இப்பொழுது அதில், துருவிய பன்னீரை சேர்த்து கொள்ளலாம்.

    தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது பன்னீர் மசாலா ரெடியாகி விட்டது. இதை தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசை போல் ஊற்றி அதன் மேல் நெய் சேர்த்து நன்கு மொறு மொறுப்பாகும் வரை வேக விட வேண்டும்.

    இப்பொழுது தோசையின் மேல் பன்னீர் மசாலாவை சேர்க்க வேண்டும். அதன் மேல் சிறிது பட்டர் வைத்துக் கொள்ளலாம். தோசை வெந்ததும் இரண்டாக மடித்து தட்டில் மாற்ற வேண்டும்.

    இப்போது சூப்பரான பன்னீர் மசாலா தோசை ரெடி.

    இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த தோசையை சாப்பிடலாம்.
    • காலையில் குறைந்த நேரத்தில் சத்தான டிபன் செய்ய நினைப்பவர்கள் இதை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை ரவை - கால் கிலோ

    அரிசி மாவு - கால் கப்

    சின்ன வெங்காயம் - 10

    சீரகம் - அரை டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    காய்ந்த மிளகாய் - 5

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கோதுமை ரவையை நன்றாக கழுவி கொள்ளவும்.

    ஒரு மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும்.

    அடுத்து அதில் கழுவிய கோதுமை ரவையை போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, பொடியாக நறுக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 15 நிமிடம் ஊற விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான டிபன் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    • பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - 100 கிராம்

    அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி

    ரவை - ஒரு தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    துருவிய பீட்ரூட் - 3 மேசைகரண்டி

    ப.மிளகாய் - ஒன்று

    கொத்தும்மல்லி - சிறிதளவு

    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, ரவை, வெங்காயம், துருவிய பீட்ரூட், ப.மிளகாய், கொத்தும்மல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்துஎடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான கேழ்வரகு பீட்ரூட் தோசை ரெடி.

    * இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • பச்சை பயறு, கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம், புரதம் அதிகம் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - அரை கப்

    பச்சை பயறு - முக்கால் கப்

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரக தூள்- அரை டீஸ்பூன்

    ப.மிளகாய் - 2

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    தக்காளி - 1

    வெங்காயம் - 1

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு, பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த கேழ்வரகு, பச்சை பயறை மிக்சிஜாரில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சீரகத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான கேழ்வரகு பச்சை பயறு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகளவு உள்ளது.
    • ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    தேவையான பொருள்கள்

    ஓட்ஸ் - 3 கப்

    தயிர் - 2 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 3

    அரிசி மாவு - 2 ஸ்பூன்

    சோள மாவு - 2 ஸ்பூன்

    வெங்காயம் - 1

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸை எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் போட்டு வறுத்து, மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தையும் அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில், சிறிதளவு வெந்நீர் ஊற்றி, அதில் ஓட்ஸ் பொடி, தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    ஊறிய ஓட்ஸ் மாவில், நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, தோசைக் கல்லில் மெல்லிய தோசை போல ஊற்றி வேகவைத்து, எடுக்க வேண்டும்.

    இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் வெங்காய தோசை ரெடி.

    இதற்கு கார சட்னி, தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மசால் தோசை எனில் உருளைக்கிழங்கு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள்.
    • இன்று முட்டை சேர்த்து மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தோசை மாவு - 1 கப்

    முட்டை - 4

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    கடுகு - அரை ஸ்பூன்

    மிளகு தூள் - அரை ஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

    தனியா தூள்- அரை ஸ்பூன்

    மிளகாய் தூள்- அரை ஸ்பூன்

    கரம் மசாலா- அரை ஸ்பூன்

    கறிவேப்பிலை - 2 கொத்து

    கொத்தமல்லித்தழை - கையளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    முட்டையை ஒரு பௌலில் ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு தக்காளியை சேர்த்து குழை வதக்கி விட வேண்டும்.

    தக்காளி நன்கு மசிந்த பிறகு , மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகிய மசாலாக்களை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் .

    இப்போது முட்டையை ஊற்றி உப்பு, மிளகுத் தூள் சேர்த்து முட்டை நன்றாக உதிர்ந்து வரும் வரை கிளறி விட வேண்டும்.

    அடுப்பில் தோசைக்கல் வைத்து , கல் சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் முட்டை மசாலாவை தோசை மேல் தோசை முழுவதும் பரப்பி விட வேண்டும். சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்த பிறகு எடுத்து , மேலே கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறினால் எத்தனை வைத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

    இப்போது சூடான முட்டை மசாலா தோசை ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    காலை வேளையில் ஆரோக்கியமான அதே சமயம் வித்தியாசமான உணவை சாப்பிட நினைத்தால், வரகு அரிசி பருப்பு அடை செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    வரகு - 1 கப்
    கடலைப் பருப்பு - 1/4 கப்
    துவரம் பருப்பு - 1/4 கப்
    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    அவல் - 2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 6
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 )
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி - சிறிய துண்டு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    நன்றாக ஊறிய பின்னர் மிக்ஸியில் வரமிளகாய், உப்பு, பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பின்பு ஊற வைத்துள்ள வரகில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, வரகுடன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள

    அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், அடை மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி!!!
    ×