search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uthappam"

    • ஊத்தாப்பம் அனைவருக்கும் பிடிக்கும்.
    • இன்று பிரெட் வைத்து ஊத்தாப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1 கப்,

    தயிர் - அரை கப்,

    பிரெட் - 5,

    வெங்காயம் - 2,

    பச்சைமிளகாய் - 5,

    கொத்தமல்லி - சிறிது,

    எண்ணெய், உப்பு, சீரகம் - தேவையான அளவு.

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பொடித்து போடவும்.

    அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் பிரெட் ஊத்தப்பம் தயார். சூடாக பரிமாறலாம்.

    இதற்கு தொட்டுகொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - அரை கப்
    முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - நான்கு
    இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
    வெங்காயம் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    துருவிய கேரட் - அரை கப்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    முளைகட்டிய பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று தடிமனாக வார்க்கவும்.

     தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய் விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

    சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
    பல்வேறு வகையான ஊத்தப்பம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் சாப்பிட, எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்,
    தக்காளிப்பழம் - 2,
    மிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பவும்.

    அடுத்து இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும்.

    நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.

    சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரையில் செய்த பல்வேறு உணவுகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கீரையை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
    அரைக்கீரை  - ஒரு கைப்பிடி அளவு,
    பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
    இட்லி அரிசி - 250 கிராம்,
    உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
    வெங்காயம் - ஒரு கப்,
    இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று
    எண்ணெய் - 100 மில்லி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கீரைகளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கிய பின்னர் முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பங்களாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த கீரை ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகள், வேர்க்கடலை பொடி தூவி ஊத்தப்பம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊத்தப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்,
    வேர்க்கடலைப் பொடி - தேவையான அளவு,
    வெங்காயம், தக்காளி - தலா 1,
    கொத்தமல்லி -  சிறிது,
    தோல் சீவிய இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்,
    கேரட் துருவல் - 5 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் பொடியை தூவவும்.

    பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×