search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green Gram Recipes"

    • உடல் பருமனைக் குறைக்க பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
    • கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வு தரும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - 100 கிராம்

    பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு

    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

    சீரகம் - 2 சிட்டிகை

    பச்சை மிளகாய் - ஒன்று

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    பச்சைப் பயறு, பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஊறவைத்த அரிசி, பயிருடன் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான பச்சைப் பயறு கொத்தமல்லி பெசரட் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உடலில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடை செய்கிறது.
    • பாசி பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பயறு - 1 கப்

    தேங்காய் - 2 துண்டு

    புளி - நெல்லிக்காய் அளவு

    பூண்டு - 2 பல்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    வரமிளகாய் - 6

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    வர மிளகாய் - 2

    கறிவேப்பிலை - 1 கொத்து

    எண்ணெய் - தாளிக்க

    செய்முறை

    பச்சை பயிறை நன்கு சுத்தம் செய்து, நீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு அதனுடன் ஊற வைத்துள்ள பச்சை பயிறை போட்டு அதனுடன் பூண்டு, புளி, தேங்காய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

    பின் அதில் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    இப்போது சூப்பரான பச்சை பயறு சட்னி ரெடி!!!

    • பாசிப்பருப்பு அல்வா வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • திடீரென உறவினர்கள் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1 கப்,

    தண்ணீர் - 2 கப்,

    பால் - 1 கப்,

    சர்க்கரை - 11/2 கப்,

    வறுத்த ரவை - 1/4 கப்,

    நெய் - 4 டேபிள்ஸ்பூன்

    முந்திரி - விருப்பத்திற்கேற்ப

    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்.

    செய்முறை :

    * முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி வடிகட்டி விட்டு குக்கரில் சேர்த்து ஈரப்பதம் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பு வறுபட வறுபட ஒட்டாமல் வரும். அந்த சமயத்தில் கொஞ்சமாக நெய் சேர்த்து வாசம் வர வறுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து விடுங்கள்.

    * குக்கரில் 4 விசில் போட்டு பருப்பு வெந்ததும் குக்கர் மூடியை திறந்து வெந்த பருப்பை கரண்டி வைத்து மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த திக்கான பால் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டால் சற்று தளர ஆரம்பிக்கும்.

    * அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் வைத்து 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு அதில் முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

    * முந்திரி வறுபட்டதும் பாசி பருப்பை அதில் ஊற்றி கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் வறுத்த ரவையை சேர்த்து கிண்டும் பொழுது பருப்பு திரண்டு அல்வா போல கெட்டியான பதத்திற்கு வரும்.

    * இந்த சமயத்தில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நெய் தெளிந்து கரண்டியில் பாசிப்பருப்பு ஒட்டாமல் அல்வா பதத்திற்கு திரண்டு வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அல்வாவை கரண்டியில் எடுத்து பேனில் போட்டால் பொத்தென்று அழகாக விழும். அது தான் சரியான பதம். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து சுட சுட கரண்டியால் எடுத்து தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான்.

    * ஆரோக்கியம் நிறைந்த தித்திக்கும் இந்த பாசிப்பருப்பு அல்வா நொடியில் செய்து விடலாம்.

    • உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பச்சைப்பயறை சேர்த்து கொள்ளலாம்.
    • பச்சைப் பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - ஒரு கப்,

    கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    சின்ன வெங்காயம் - 10,

    பச்சை மிளகாய் - 3 ,

    தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்,

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை:

    சின்னவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பச்சைப் பயறுடன் கடலைப் பருப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடிகட்டி மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.

    வெங்காயத்துடன் மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

    பச்சைப் பயறு மாவுடன் அரைத்த விழுது, அரிசி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.

    தோசைக் கல்லை காய வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெசரெட் ரெடி.

    • தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும், மேலும் ஆண்மை குறைபாட்டை நீக்கும்.
    • பச்சைப் பயறில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது, புரதச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    தினை மாவு - 1 கப்,

    பச்சைப் பயறு - அரை கப்,

    தேங்காய்த்துருவல் - 1 கப்,

    கருப்பட்டி - 100 கிராம்,

    நெய், உப்பு - சிறிது.

    செய்முறை

    தினை மாவை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின் ஒரு தட்டில் வறுத்த தினை மாவை சிறிது வெந்நீர் விட்டு, கொஞ்சம் உப்பு கலந்து பிசிறிக் கொள்ளவும்.

    பச்சைப்பயறு, தினை மாவு, தேங்காய்த்துருவல் இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக புட்டு குழாயில் வைத்து நீராவில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான தினை பச்சைப் பயறு புட்டு ரெடி.

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - அரை கப்
    முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - நான்கு
    இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
    வெங்காயம் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    துருவிய கேரட் - அரை கப்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    முளைகட்டிய பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று தடிமனாக வார்க்கவும்.

     தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய் விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

    சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
    உடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை பயறு - 1 கப்
    அரிசி - 3 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    இஞ்சி - 1 இன்ச்
    சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.

    இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!

    இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
    பட்டாணி இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
    தேவையான பொருட்கள்

    பட்டாணி - கால் கிலோ
    பச்சை பயிறு - கால் கிலோ
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி - அரை கட்டு
    வெங்காயம் - 1
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணி, பச்சை பயிரை 3 மணிநேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக கழுவி மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பட்டாணி பச்சை பயிறு அடை ரெடி.

    பாசிப்பயிறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் பாசிப்பயிறை ஊறவைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பாசிப்பயிறில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பயிறு - 200 கிராம்,
    பச்சரிசி - 50 கிராம்,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    பச்சை மிளகாய் - 3,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    நல்லெண்ணெய், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு,



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பயிறையும், அரிசியையும் நன்றாக கழுவி தனித்தனியாக 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

    மிக்ஸியில் பச்சரிசியை தண்ணீர் கலந்து நைசாக அரைத்து பின்னர் தண்ணீர் வடிகட்டிய பச்சை பயிறையும் சேர்த்து அடை மாவுபதத்துக்கு அரைத்தெடுக்கவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு பெருங்காத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    இந்த அடையை தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

    சூப்பரான பாசிப்பயிறு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் பச்சைப்பயறை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று பச்சைப் பயறு புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - ஒரு கப்,
    வெங்காயம் - ஒன்று,
    காய்ந்த மிளகாய் - 3,
    தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    பச்சைப் பயறை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு, முதல் நாள் இரவே ஊறவிடவும்.

    மறுநாள் நீரை நன்கு வடித்துவிட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஆவியில் வேகவிடவும்.

    ஆறிய பின் உதிர்த்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெயை காய வைத்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து… வெங்காயம், உப்பு சேர்த்துக் கிளறவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் வேக வைத்து உதிர்த்த பயறு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

    சூப்பரான பச்சைப் பயறு புட்டு ரெடி.
    ×