என் மலர்
நீங்கள் தேடியது "Green Gram Recipes"
- உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பச்சைப்பயறை சேர்த்து கொள்ளலாம்.
- பச்சைப் பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு - ஒரு கப்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 3 ,
தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
சின்னவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பச்சைப் பயறுடன் கடலைப் பருப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடிகட்டி மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.
வெங்காயத்துடன் மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
பச்சைப் பயறு மாவுடன் அரைத்த விழுது, அரிசி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
தோசைக் கல்லை காய வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெசரெட் ரெடி.
பச்சை பயறு - 1 கப்
அரிசி - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!
இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
பட்டாணி - கால் கிலோ
பச்சை பயிறு - கால் கிலோ
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - அரை கட்டு
வெங்காயம் - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணி, பச்சை பயிரை 3 மணிநேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக கழுவி மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
பாசிப்பயிறு - 200 கிராம்,
பச்சரிசி - 50 கிராம்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 3,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
நல்லெண்ணெய், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு,

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பயிறையும், அரிசியையும் நன்றாக கழுவி தனித்தனியாக 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
மிக்ஸியில் பச்சரிசியை தண்ணீர் கலந்து நைசாக அரைத்து பின்னர் தண்ணீர் வடிகட்டிய பச்சை பயிறையும் சேர்த்து அடை மாவுபதத்துக்கு அரைத்தெடுக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு பெருங்காத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
இந்த அடையை தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
பச்சைப் பயறு - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 3,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பயறை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு, முதல் நாள் இரவே ஊறவிடவும்.
மறுநாள் நீரை நன்கு வடித்துவிட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஆவியில் வேகவிடவும்.
ஆறிய பின் உதிர்த்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து… வெங்காயம், உப்பு சேர்த்துக் கிளறவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் வேக வைத்து உதிர்த்த பயறு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சூப்பரான பச்சைப் பயறு புட்டு ரெடி.