search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Adai"

    சிறுதானியங்களில் பனிவரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனிவரகில் சத்தான கார அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனிவரகு - 1 கப்.
    கடலைப்பருப்பு - கால் கப்.
    துவரம் பருப்பு - அரை கப்.
    காய்ந்த மிளகாய் - 8.
    உப்பு - தேவையான அளவு.
    சோம்பு - 2 ஸ்பூன்.
    பெருங்காயம் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    வெங்காயம் - 2.
    கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - அரை கப்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பனிவரகு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    ஊற வைத்த பொருட்களை மிளகாய், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    பின்னர் அந்த மாவு கலவையில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்

    சத்தான பனிவரகுக் கார அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாசிப்பயிறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் பாசிப்பயிறை ஊறவைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பாசிப்பயிறில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பயிறு - 200 கிராம்,
    பச்சரிசி - 50 கிராம்,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    பச்சை மிளகாய் - 3,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    நல்லெண்ணெய், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு,



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பயிறையும், அரிசியையும் நன்றாக கழுவி தனித்தனியாக 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

    மிக்ஸியில் பச்சரிசியை தண்ணீர் கலந்து நைசாக அரைத்து பின்னர் தண்ணீர் வடிகட்டிய பச்சை பயிறையும் சேர்த்து அடை மாவுபதத்துக்கு அரைத்தெடுக்கவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு பெருங்காத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    இந்த அடையை தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

    சூப்பரான பாசிப்பயிறு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை - ஒரு கப்,
    அரிசி  - அரை கப்,
    துவரம்பருப்பு - கால் கப்,
    உளுந்தம்பருப்பு - சிறிதளவு,
    கடலைப்பருப்பு - கால் கப்,
    வெங்காயம் - 1,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    பெருங்காயம், காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு,



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமையை தனியாகவும், அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பெருங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்ட அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் தனியாக வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சத்தான சுவையான கோதுமை அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் இனிப்பு சேர்த்து அடை செய்தால் அருமையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேழ்வரகு இனிப்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    வெல்லம் அல்லது கருப்பட்டி - 3/4 கப்,
    தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
    ஏலக்காய்த்தூள் - சிறிது,
    பொடித்த முந்திரி - சிறிது,
    நெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    வெல்லக்கரைசல் சற்று கெட்டியானதும், இத்துடன் தேங்காய்த்துருவல், கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், நெயில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கேழ்வரகு இனிப்பு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் கேழ்வரகு, கோதுமையை சேர்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இன்று இந்த இரண்டு மாவையும் வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்,
    கேழ்வரகு மாவு - அரை கப்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 3,
    பச்சை மிளகாய் - 4,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கேழ்வரகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை கேழ்வரகு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு தினமும் கேரட், முந்திரி கொடுப்பது உடலுக்கு நல்லது. இன்று கேரட், முந்திரி வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - 1 கப்
    கடலை பருப்பு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 3
    அரிசி - 2 கப்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    கேரட் துருவல் - கால் கப்
    முந்திரி - தேவையான அளவு
    நெய் - தேவைக்கு



    செய்முறை :

    முந்திரி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை நீரில் 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஊறவைத்த பருப்பு, அரிசியை மிக்சியில் போட்டு பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் நறுக்கிய முந்திரியை தூவி கைகளால் அழுத்தி விட்டு சுற்றி நெய் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சத்து நிறைந்த கேரட் - முந்திரி அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏற்படாது. இன்று சுரைக்காய் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய்த் துருவல் - 2 கப்
    சீரகச் சம்பா அரிசி - ஒரு கப்
    துவரம்பருப்பு - அரை கப்
    கடலைப்பருப்பு, முழு உளுத்தம்பருப்பு - தலா கால் கப்
    காய்ந்த மிளகாய் - 10
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    சின்ன வெங்காயம்  - கால் கப்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள், மீதமுள்ள இரண்டு மிளகாய் தாளித்து… நறுக்கிய சின்ன வெங்காயம், சுரைக்காய்த் துருவல் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும். சுரைக்காய் மசாலா தயார்.

    அரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி தண்ணீரில் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    எட்டு மிளகாயைத் தனியாக தண்ணீரில் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறியதும் அரிசி, பருப்பைக் களைந்து, ஊறவைத்த மிளகாய்,  உப்பு, புளி சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இதனுடன் சுரைக்காய் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும்.

    தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி,  சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான சுரைக்காய் அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், முருங்கைக்கீரை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு - கால் கிலோ,
    குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி - கால் கிலோ,
    முழு கருப்பு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்,
    வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை, உப்பு, நல்லெண்ணெய் -  தேவையான அளவு.



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் நன்றாக கழுவி காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் அரைத்துக்கொள்ளவும்.  

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி அதன் மேலே முருங்கைக் கீரையைத் தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    பலன்கள்: குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக இருக்கிறது. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - ஒரு கப்
    முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப்
    முளைகட்டியகொண்டைக்கடலை - கால் கப்
    முளைகட்டிய கருப்பு உளுந்து - 2 டீஸ்பூன்
    முளைகட்டிய கொள்ளு - 5 டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3
    தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கேரட் துருவல் - கால் கப்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    பிறகு அரிசியுடன், முளைகட்டிய பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், கேரட் துருவல் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

    சத்தான மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது சத்துமாவு பாசிப்பருப்பு அடை. இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு - அரை கப்,
    பாசிப்பருப்பு - அரை கப்,
    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    பூண்டு - 2,
    கொத்துமல்லித் தழை - சிறிதளவு,
    மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த பாசிப்பருப்பு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.  

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காயவைத்து, மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

    அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அரிசி, துவரம் பருப்பு, மிளகு சீரகம் கொண்டு செய்யும் இந்த டிபனை மாலையில் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 கப்
    துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - ¾ தேக்கரண்டி
    தேங்காய் - 1 கப்
    தண்ணீர் - 2¼ கப்
    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு



    செய்முறை

    அரிசி மற்றும் பருப்பை கழுவி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின், தண்ணீரை வடித்து ஒரு சுத்தமான துண்டில் தண்ணீரை வடித்து பரப்பவும்.

    முதலில் மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, ரவா போல பொடியாக கவனமாக அரைக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து  சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை வரிசையாக சேர்த்து தாளித்த பின்னர் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். துருவிய தேங்காய், உப்பு சேர்க்கவும்.

    பின்னர் அரைத்த அரிசி கலவை சேர்த்து கைவிடாமல் நன்றாக கலந்து விடவும்.

    குறைந்த தீயில் 5 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் (விரும்பினால்). நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

    கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன் ஒரே அளவு உருண்டைகளாக எடுத்து, மொத்தமான அடைகளாகத் தட்டவும். ஒவ்வொரு முறையும் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். பாலிதீன் பை அல்லது வாழை இலையில் தட்டலாம்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் செய்து வைத்த அடைகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் பருமனைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உண்டு. இன்று பப்பாளி, சிறுதானியங்களை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்:

    பப்பாளிக்காய் துருவல் - அரை கப்,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    வெங்காயம் - 2,
    கம்பு மாவு - 2 கப்,
    தினை குருணை, அரிசிமாவு - தலா கால் கப்,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு,
    உப்பு, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.

    அரைப்பதற்கு :

    துவரம் பருப்பு, முளைகட்டிய சுண்டல் கடலை - தலா ஒரு கைப்பிடி,
    இஞ்சி - சிறுதுண்டு,
    பட்டை, கிராம்பு - தலா - 2,
    சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் கடலை இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்துகொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பப்பாளிக்காய துருவல், தேங்காய் துருவல், கம்பு மாவு, திணை குருணை, அரிசிமாவு, ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய அடையாக ஊற்றி, தேவையான எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.

    சத்தான பப்பாளி - சிறுதானிய அடை ரெடி.

    தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×