search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Proso Millet Adai"

    சிறுதானியங்களில் பனிவரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனிவரகில் சத்தான கார அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனிவரகு - 1 கப்.
    கடலைப்பருப்பு - கால் கப்.
    துவரம் பருப்பு - அரை கப்.
    காய்ந்த மிளகாய் - 8.
    உப்பு - தேவையான அளவு.
    சோம்பு - 2 ஸ்பூன்.
    பெருங்காயம் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    வெங்காயம் - 2.
    கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - அரை கப்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பனிவரகு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    ஊற வைத்த பொருட்களை மிளகாய், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    பின்னர் அந்த மாவு கலவையில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்

    சத்தான பனிவரகுக் கார அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×