search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிபன்"

    மருத்துவ குணம் நிறைந்த முருங்கை இலையை அடிக்கடி உணவில் சேர்த்தோ, சூப்பாகவோ செய்து குடியுங்கள். இன்று முருங்கைக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி மாவு - 1 கப்
    முருங்கை கீரை - 1/4 கப்
    வெங்காயம் - 1
    பூண்டு - 5
    மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயம், முருங்கைக் கீரை, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவை போட்டு அதோடு உப்பு சேர்த்து கலந்த பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முருங்கை கீரை, மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு சுட்டு எடுத்தால் முருங்கைக் கீரை சப்பாத்தி ரெடி.
    நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - அரை கப்
    முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - நான்கு
    இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
    வெங்காயம் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    துருவிய கேரட் - அரை கப்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    முளைகட்டிய பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று தடிமனாக வார்க்கவும்.

     தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய் விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

    சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
    காலை வேளையில் ஆரோக்கியமான அதே சமயம் வித்தியாசமான உணவை சாப்பிட நினைத்தால், வரகு அரிசி பருப்பு அடை செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    வரகு - 1 கப்
    கடலைப் பருப்பு - 1/4 கப்
    துவரம் பருப்பு - 1/4 கப்
    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    அவல் - 2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 6
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 )
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி - சிறிய துண்டு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    நன்றாக ஊறிய பின்னர் மிக்ஸியில் வரமிளகாய், உப்பு, பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பின்பு ஊற வைத்துள்ள வரகில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, வரகுடன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள

    அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், அடை மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி!!!
    சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு அரிசி மாவு - 1 கப்
    கொதிநீர் - தேவையான அளவு
    உப்பு - சிறிதளவு
    வெல்லத்தூள் - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - அரை கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன் கொதிநீர், உப்பு சேர்த்து கரண்டியால் நன்றாக கிளறவும்.

    சூடு ஆறியதும் மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    இடியாப்ப அச்சில் மாவை போட்டு இட்லி தட்டில் இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சிவப்பரிசி இடியாப்பம் ரெடி.
    ×