search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corn Recipes"

    சோளத்தில் பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை சோளம் - 1 கப்
    இட்லி அரிசி - 1 கப்
    உளுந்து -  அரை கப்
    வெந்தயம் - ஒரு ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சோளம், இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் கலந்து கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஆறு மணி நேரம் ஊறிய பின்னர் மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மாவு நன்கு புளித்தவுடன் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சாம்பார் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும்.

    சூப்பரான சோள தோசை ரெடி.

    Salad, Recipes, Veg Recipes, Healthy Recipes, Corn Recipes, சாலட், கார்ன் சமையல், சைவம், ஆரோக்கிய சமையல்
    தேவையான பொருட்கள் :

    பேபி கார்ன் - 4,
    ப்ரோக்கோலி - சிறியது 1
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 1,
    வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லி, ப்ரோக்கோலி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். ப்ரோக்கோலி, பேபி கார்னை கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்.

    வேக வைத்த ப்ரோக்கோலி, பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.

    அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் ரெடி.

    சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையை வைத்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோளக்குருணை - 1 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    தேங்காய்த்துருவல் - 3/4 கப்
    பொடித்த வெல்லம் - 3/4 கப்
    நெயில் வறுத்துப் பொடித்த முந்திரி - 3 டேபிள்ஸ்பூன்
    வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை
    ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்
    நெய் - சிறிது



    செய்முறை :

    முதலில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு செய்யவும்.

    அரிசி மாவையும், சோளக்குருணையையும் சூடான கடாயில் லேசாக வறுத்து, உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக அதில் சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலக்கி நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

    பின் மாவுகளைக் கட்டியில்லாமல் உதிர்த்துப் பரப்பி ஆவியில் வேகவைக்கவும்.

    கெட்டி வெல்லப்பாகில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து, வெந்த மாவில் சிறிது சிறிதாகப் போட்டுக் கலந்து நெய் சேர்த்து பிசறி கட்டியில்லாமல் உதிர்த்து முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து கலக்கவும்.

    சுவையான சோள ரவை புட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, கார்ன் சேர்த்து புலாவ் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    கார்ன் - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    தக்காளி - 3,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தேங்காய்ப் பால் - அரை கப்,
    பட்டை, லவங்கம்,
    ஏலக்காய் - தலா ஒன்று,
    எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கார்ன், மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும்.

    இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு - கார்ன் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாட்டுச்சோளத்தில் புரதம், இரும்பு, கால்சியம், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நாட்டுச்சோளத்தில் குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நாட்டுச்சோளம் - 1 கப்
    இட்லி அரிசி - கால் கப்
    உளுந்து - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    ப.மிளகாய் - 3

    தாளிக்க

    கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லி அரிசி, சோளம், உளுந்து மூன்றையும் இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு உப்பு, நீர் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து மூன்று மணிநேரம் புளிக்க விடவும்.

    வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சிறிதளவு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வதக்கியவற்றையும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மாவில் கொட்டி நன்கு கலக்கி குழிப்பணியார சட்டியில் ஊற்றி சுட்டெடுக்கவும்.

    சுவையான நாட்டுச்சோள குழிப்பணியாரம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×