search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Potato Rice"

    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - 2,
    மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    மாங்காய் தூள் - அரை டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை:

    அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு பாதியளவு வெந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

    உருளைக்கிழங்கு வெந்ததும் கரம் மசாலாதூள், தனியாதூள், மிளகாய்தூள், சீரகத்தூள், மாங்காய் தூள் சேர்த்து நன்கு வதக்கி நெய், சாதம், கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    சூப்பரான உருளை மசாலா ரைஸ் ரெடி.

    குழந்தைகளுக்கு இதன் ருசி மிகவும் பிடிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, கார்ன் சேர்த்து புலாவ் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    கார்ன் - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    தக்காளி - 3,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தேங்காய்ப் பால் - அரை கப்,
    பட்டை, லவங்கம்,
    ஏலக்காய் - தலா ஒன்று,
    எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கார்ன், மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும்.

    இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு - கார்ன் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×