search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Idiyappam"

    சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு அரிசி மாவு - 1 கப்
    கொதிநீர் - தேவையான அளவு
    உப்பு - சிறிதளவு
    வெல்லத்தூள் - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - அரை கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன் கொதிநீர், உப்பு சேர்த்து கரண்டியால் நன்றாக கிளறவும்.

    சூடு ஆறியதும் மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    இடியாப்ப அச்சில் மாவை போட்டு இட்லி தட்டில் இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சிவப்பரிசி இடியாப்பம் ரெடி.
    காலையில் சத்துநிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கவுனி அரிசியில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கவுனி அரிசி மாவு - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    தேங்காய்த்துருவல் - தேவையான அளவு
    நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை :

    கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர விடவும். உலர்ந்த அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய உபயோகப்படுத்தலாம்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி, சூடானதும் உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் கவுனி அரிசி மாவைக் கொட்டி, சுடவைத்த தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.

    மாவு இடியாப்ப பதத்துக்கு வந்ததும் இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும்.

    பிறகு, ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.

    தேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் சத்துமாவில் இடியாப்பம் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சத்து மாவு - ஒரு கப்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    சத்து மாவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும்.

    மாவு நன்றாக ஆறியதும் இதனுடன் எண்ணெய், உப்பு, வெந்நீர் விட்டு இடியாப்ப மாவு போல பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இதனை, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து இனிப்பாகவோ அல்லது வெங்காயம், காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து சேர்த்து காரமாகவோ சாப்பிடலாம். ஹெல்தியான இந்த இடியாப்பம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த இடியாப்பம் மீந்து போனால் மாலையில் அதை வைத்து சூப்பரான புலாவ் செய்யலாம். இன்று இடியாப்ப புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இடியாப்பம் - 6,
    வெங்காயம், தக்காளி, கிராம்பு - தலா 1,
    பட்டை - ஒரு சிறிய துண்டு,
    கீறிய பச்சை மிளகாய் - 2,
    கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இடியாப்பத்தை உதிர்த்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பின்னர் உதிர்த்து வைத்த இடியாப்பம், உப்பு சேர்த்து கிளறவும்.

    மசாலா அனைத்து இடியாப்பத்தில் சேர்ந்தவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இடியாப்ப புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மிளகு சீரக இடியாப்பம் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இடியாப்ப வகைகளுள் ஒன்று. இன்று மிளகு சீரக இடியாப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு / இடியாப்ப மாவு - ¾ கப்
    மிளகு - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 2 தேக்கரண்டி
    துருவிய தேங்காய் - ¼ கப்
    நெய் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    முந்திரிப் பருப்பு - 8
    கறிவேப்பிலை - 1 கொத்து
    பெருங்காயம் - 2 சிட்டிகை



    செய்முறை

    தண்ணீரில் சில சொட்டுகள் நல்லெண்ணெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசி மாவில் சேர்த்து, மாவாக பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை இடியாப்பமாக பிழிந்து இட்லி சட்டியில் வேக வைத்து கொள்ளவும்.

    இடியப்பம் செய்து ஆறியவுடன் உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.

    மிளகு சீரகத்தை கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் சேர்த்து, உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    மிளகு சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    இதனை, வேகவைத்து உதிர்த்த இடியாப்பம், துருவிய தேங்காய், உப்பு (தேவைபட்டால்) சேர்த்து, கலந்து வைக்கவும்.

    சூப்பரான மிளகு சீரக இடியாப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்து மீந்து போன இடியாப்பத்தை மாலையில் முட்டை சேர்த்து மசாலா இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்,
    முட்டை - 3,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    நாட்டு தக்காளி - 3,
    பூண்டு - 6 பல்,
    மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் துளி உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    அதை கனமான அடையாக ஊற்றி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

    தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலாதூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுங்கள்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள்.

    நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது, உதிர்த்த இடியாப்பத்தையும் நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

    சூப்பரான முட்டை இடியாப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் சத்தான சுவையான உணவுகளை செய்யலாம். இன்று சிறுதானிய மாவில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    சிறுதானிய இடியாப்ப மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்

    சாமை - 1 கப்
    தினை - 1 கப்
    வரகு - 1 கப்
    குதிரைவாலி - 1 கப்
    கேழ்வரகு - 1 கப்
    கம்பு - 1 கப்
    சோளம் - 1 கப்
     
    சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். பின் அதனை ஆறவைத்து மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். இதனை நன்கு ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் நேரத்தில் எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    சிறுதானிய இடியாப்ப மாவு - 1 கப்
    கல் உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 2 கப்



    செய்முறை :

    தேவையான அளவு கல் உப்பினை இரண்டு கப் தண்ணீரில் சேர்த்து சூடேற்றவும். தண்ணீர் கொதித்ததும் இறக்கி விடவும்.

    சிறுதானிய இடியாப்ப மாவில் உப்பு சேர்த்த சுடுதண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசையவும். மொத்த மாவினையும் சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும்.

    இம்மாவினை தேவையான அளவு எடுத்து இடியாப்பக் குழலில் இட்டு இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும்.

    பின்னர் இதனை ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சிறுதானிய இடியாப்பம் தயார்.

    சத்துக்கள் நிறைந்த இதனை சிறுகுழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இந்த இடியாப்பத்துடன் தேங்காயப் பூ, தேங்காய் பால், குருமா, சாம்பார் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைச் சேர்த்து உண்ணலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கம்பு உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று கம்பு இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 கப்,
    தேங்காய்த்துருவல், வெல்லத் துருவல் - தலா 1 கப்,
    ஏலப் பொடி - சிறிது,
    நெய், உப்பு- தேவைக்கு.



    செய்முறை :

    கம்பு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும்.

    இடியாப்ப அச்சில் கம்பு மாவை போட்டு இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

    வெந்த கம்பு மாவில் தேங்காய் துருவல், வெல்லத்துருவல், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

    சத்து நிறைந்த கம்பு இடியாப்பம் ரெடி.

    வெல்லம் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெந்த இடியாப்பத்துடன் சட்னி, குருமா சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×