

பதப்படுத்திய சிறுதானிய மாவு (சாமை, குதிரைவாலி) - தலா 1 கப்.
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை, துவரம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4-5,
கட்டி பெருங்காயம் - சிறிது,
பாதாம், முந்திரி - தலா 6.
தாளிக்க :
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிது,
நெய், உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
மஞ்சள்தூள் - சிறிது.
பாசிப்பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
சாமை, குதிரைவாலி மாவை லேசாக வறுத்து, 1½ கப் வெந்நீர், உப்பு சேர்த்து கிளறி இட்லி சட்டியில் இடியாப்பமாக பிழிந்து ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து தாளிக்க வைத்திருக்கும் பொருட்களை தாளித்து, மஞ்சள்தூள், உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து இடியாப்பத்தை உதிர்த்து போட்டு நன்கு கலந்து, வறுத்து அரைத்த பொடிகளை தூவி கலந்து, சூடாக சிறிது நெய் விட்டு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.