search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தீபாவளி மருந்து
    X
    தீபாவளி மருந்து

    கமகமவென வாசனையுடன் தீபாவளி மருந்து தயாரிப்பது எப்படி?

    கமகமவென்ற மணத்துடன் தீபாவளி மருந்து தயாரித்து நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். தீபாவளி மருந்து தயாரிப்பது எப்படி என்ற விவரம் வருமாறு:-
    தேவையான பொருட்கள்

    கண்டந்திப்பிலி - 50 கிராம்
    அரிசி திப்பிலி - 20 கிராம்
    ஜாதிக்காய் - 1
    ஜாதிபத்திரி - 8 இதழ்
    சித்தரத்தை - 50 கிராம்
    விரலி மஞ்சள் -10 கிராம்
    சுக்கு - 100 கிராம்
    அதிமதுரம் - 20 கிராம்
    ஓமம் - 100 கிராம்
    லவங்கம் - 6
    ஏலக்காய் - 6
    தனியா - 25 கிராம்
    மிளகு - 50 கிராம்
    சீரகம் - 50 கிராம்
    வெல்லம் - 400 கிராம்
    நெய் - 250 கிராம்
    நல்லெண்ணை - 250 கிராம்
    தேன் - 100 கிராம்

    செய்முறை

    கண்டந்திப்பிலி அரிசி திப்பிலி, ஜாதிக்காய், ஜாதி பத்திரி, சித்தரத்தை, விரலி மஞ்சள், சுக்கு, அதிமதுரம் ஆகிய பொருட்களை தனித் தனியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்,

    பின்னர் வாணலியில் செந்நிறம் வரும்வரை வறுத்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்,

    அதன்பிறகு ஓமம், லவங்கம், ஏலக்காய், தனியா, மிளகு, சீரகம் ஆகிய பொருட்களை வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

    அவற்றுடன் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள 8 பொருட்களையும் நன்றாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக மிக்சியில் போட்டு நைசாக அரைத்து மாவு ஜல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

    ஜல்லடையில் மீது உள்ளதை மீண்டும் மிக்சியில் அரைத்து சலித்து எல்லா மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான சூடு கொண்ட தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.

    அதன்பிறகு அடிகனமான வாணலியில் வெல்லத்தை பொடியாக்கி போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதை அந்த வாணலியில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    நன்றாக கொதித்தவுடன் நல்லெண்ணை, நெய் இரண்டையும் பாதி பாதி ஊற்றி கிளறி விட வேண்டும்.

    பின்னர் கரைத்து வைத்துள்ள மருந்து பொடியை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியானதும் மீதி இருக்கும் நெய்யையும், நல்லெண்ணையையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி நெய்யும், எண்ணெணையும் பிரிந்து கெட்டியாக அல்வா பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு தேனை பரவலாக விட்டு நன்றாக கலக்க வேண்டும்.

    2 முதல் 3 மணிநேரம் ஆற விட்டு கிளறினால் கமகம என்ற வாசனையுடன் தீபாவளி மருந்து தயாராகும்.

    Next Story
    ×