search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Millets Recipes"

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துகள் அடங்கியுள்ளன.
    • சிறுதானியங்கள் நூடுல்ஸ் வடிவிலும் கிடைக்கின்றன.

    தேவையான பொருட்கள்

    ராகி நூடுல்ஸ் - 1 கப்

    பெரிய வெங்காயம் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கேரட் - 1/2 கப்

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    குடை மிளகாய்- 1

    பூண்டு- 1

    முட்டைகோஸ் - சிறிய துண்டு

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்

    மிளகுத்தூள்- சிறிதளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    பெரிய வெங்காயம், முட்டைகோஸ், குடைமிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட், பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு வாணலியில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ராகி நூடுல்ஸை சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள்

    பின், தண்ணீரை வடிகட்டி சிறிது எண்ணெய் சேர்த்து உதிர்த்து வைக்கவும். எண்ணெய் சேர்த்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    மற்றொரு வாணலியில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து சிவக்கும் வரை வதக்கிய பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் கேரட், குடை மிளகாய், முட்டைகோஸை சேர்த்து வதக்கவும்

    காய்கறிகள் முக்கால் பாகம் வெந்ததும் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதில் வேகவைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்து கிளறவும்

    மசாலா அனைத்தும் நூடுல்ஸில் சேர்ந்ததும் அதில் இன்னும் சிறிதளவு வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சூப்பரான சுவையான ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.

    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று தினை வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தினை அரிசி - 1 கப்
    வெங்காயம் - 1
    கேரட்  - 1
    ப.மிளகாய் - 2
    தேங்காய் - 1 துண்டு
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுந்து - 2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - 2 கைப்பிடி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    தேங்காய், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தினை அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..

    ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கேரட், தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்..

    பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்..

    காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.

    மாவு நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் 15 வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தினை வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.

    சிறுதானியங்களில் சத்தான சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று சாமை அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப்
    வெந்தயம் - கால் ஸ்பூன்
    சீரகம் - கால் ஸ்பூன்
    முழுப்பூண்டு - 2
    தேங்காய் துருவல் - அரை கப்
    உப்பு - தேவைக்கேற்ப


     
    செய்முறை :

    சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

    முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, நன்றாக கழுவி அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    உளுந்து பாதியளவு வெந்ததும் ஊறவைத்த சாமை அரிசியை சேர்க்கவும்.

    அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும்.

    அனைத்து நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான சாமை கருப்பு உளுந்துகஞ்சி ரெடி.

    கஞ்சி திக்காக இருந்தால் பால் அல்லது மோர் அல்லது சூடான நீர் சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குதிரைவாலியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி - 1 கப்
    தண்ணீர் - 2 1/4 குவளை
    நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
    கிராம்பு - 2 எண்ணிக்கை
    கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    மிளகு - 8 எண்ணிக்கை
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    தேங்காய் துருவல் - கப்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :


    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சமைப்பதற்கு முன்னர் குதிரைவாலி அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி போன பிறகு, 10 நிமிடங்கள் கழித்து திறக்கவும். சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி சில நிமிடங்கள் ஆற விடவும்.

    மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அது சூடானதும் கிராம்பு, கடலைப் பருப்பை போட்டு, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கிய பின் மிளகைப் பொடித்து வாணலியில் போடவும்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து கிளறவும்.

    பின்னர் வேகவைத்த சாதத்தை இந்தக் கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விடவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி.

    குறிப்பு:

    இதே செய்முறையில் குதிரைவாலிக்கு பதிலாக, வரகு, திணை மற்றும் சாமை போன்ற சிறுதானியங்களையும் பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியில் சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 1 கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வரகு அரிசியை மாவாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு சேர்த்து இறக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த வரகு மாவை போட்டு அதில் கொதிக்கும் தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கரண்டியால் நன்றாக கிளறவும்.

    சற்று சூடு ஆறியதும் கைகளில் எண்ணெய் தேய்த்து கொண்டு மாவை கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்தி மாவு போல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    பிசைத்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இந்த சப்பாத்திக்கு எண்ணெய் தேவையில்லை.

    சூப்பரான சத்தான வரகு அரிசி சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினந்தோறும் காலை உணவாக கம்பு கூழ் அல்லது கம்பு களியாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடலை திடமாக வைத்திருக்க உதவும்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - 1 கப்
    பால் - 1 ½ கப்
    தயிர் - ½ கப்
    கேரட் - 1
    கடுகு - சிறிதளவு
    உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    காய்ந்த மிளகாய் -2
    இஞ்சி - 1 துண்டு
    பெருங்காயம் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கம்பை புடைத்து சுத்தம் செய்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.

    சுத்தம் செய்த கம்பை மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும்.

    உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவும்.

    4 விசில் வந்ததும் இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    பின் கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைத் தாளிக்கவும்.

    அத்துடன்  கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும்.

    கடைசியாக, உப்பு, துருவிய கேரட், தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் கால்சியம், நார்ச்சத்து ஆகிய இரண்டும் அதிகம் இருக்கிறது. இன்று கேழ்வரகில் சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்
    உளுத்தம் பருப்பு - 3/4 கப்
    உப்பு - 1 தே.கரண்டி



    செய்முறை :

    உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.

    கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

    கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு, அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.

    இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு ஆரோக்கியமானது. இந்த சத்து மாவு உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சத்து மாவு - 1 கப்
    வெல்லம்/கருப்பட்டி - 1/3 கப்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை



    செய்முறை:

    சத்து மாவை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 8-10 நிமிடம் நன்கு மணம் வெளிவரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெல்லம்/கருப்பட்டியை தட்டி/துருவிக் கொண்டு, ஒரு வாணலியில் போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, வெல்லம் நன்கு கரைந்து, சற்று கெட்டியாக தேன் போன்ற பதத்திற்கு வரும் போது அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    பாகை வறுத்து வைத்துள்ள சத்து மாவில் சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பிறகு நெய்யை சூடேற்றி, அதனையும் சத்து மாவுடன் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடித்தால், சத்து மாவு உருண்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானிய புட்டு மிகவும் சத்தான சிற்றுண்டி. இன்று சிறுதானியங்களை சேர்த்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    புட்டு மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்

    சாமை - 1 கப்
    தினை - 1 கப்
    வரகு - 1 கப்
    குதிரைவாலி - 1 கப்
    கேழ்வரகு - 1 கப்
    கம்பு - 1 கப்
    சோளம் - 1 கப்

    புட்டு மாவு தயார் செய்யும் முறை

    சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். பின் அதனை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். சிறுதானியப்புட்டு மாவு தயார்.

    இந்த மாவினை காற்று புகாத டப்பாவில் அடைத்து சுமார் மூன்று மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.



    புட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள்

    சிறுதானிய புட்டு மாவு - 1 கப்
    தேங்காய் - ½ மூடி (மீடியம் சைஸ்)
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    உப்பு - ஒரு சிட்டிகை
    ஏலக்காய் - 3
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை :

    தேவையான அளவு தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிறுதானியப் புட்டு மாவை போட்டு அதனுடன் உப்பு கலந்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கட்டி விழாமல் உதிரியாகப் பிசிறவும். புட்டு மாவானது உதிரியாகவும், ஈரப்பதத்துடனும் இருக்குமாறு செய்ய வேண்டும்.

    பின் ஈரப்பதமான மாவினை ஒன்றுபோல் அழுத்திவிட்டு துணியால் மூடி பத்து நிமிடம் வைக்கவும். பின் புட்டு மாவினை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

    வெந்த புட்டு மாவினை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும்.

    சுவையான சிறுதானிய புட்டு தயார்.

    விருப்பமுள்ளவர்கள் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக மண்டை வெல்லத்தை கலந்து புட்டு தயார் செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் பனிவரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனிவரகில் சத்தான கார அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனிவரகு - 1 கப்.
    கடலைப்பருப்பு - கால் கப்.
    துவரம் பருப்பு - அரை கப்.
    காய்ந்த மிளகாய் - 8.
    உப்பு - தேவையான அளவு.
    சோம்பு - 2 ஸ்பூன்.
    பெருங்காயம் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    வெங்காயம் - 2.
    கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - அரை கப்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பனிவரகு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    ஊற வைத்த பொருட்களை மிளகாய், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    பின்னர் அந்த மாவு கலவையில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்

    சத்தான பனிவரகுக் கார அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/3 கப்
    பாலக் கீரை - 1 கட்டு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 1
    இஞ்சி - 1 துண்டு
    உப்பு - 1/3 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    உளுந்து - அரை  டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    முந்திரி - 10



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

    வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசி, காராமணி சேர்த்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1 கப்,
    காராமணி  - 2 டேபிள் ஸ்பூன்,
    துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    மிளகு - 1/4 டீஸ்பூன்,
    துருவிய தேங்காய் - 1/2 கப்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    தண்ணீர் - 2 1/4 கப்.

    தாளிக்க…

    எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
    பச்சை மிளகாய் - 1,
    கறிவேப்பிலை - தேவையான அளவு.



    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காராமணியை 1/2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    மிக்சியில் துவரம் பருப்பு, சீரகம், மிளகை போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் குதிரைவாலி அரிசியை சேர்த்து ரவையாகப் பொடிக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தாளித்த பின்னர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த ரவை, வேக வைத்த காராமணி, துருவிய தேங்காய் போட்டு நன்கு கட்டியில்லாமல் கிளறவும். மிதமான தீயில் கிளறி, சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கவும்.

    பொறுக்கும் சூடு வந்ததும் உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்து எடுத்து சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான குதிரைவாலி காராமணி பிடி கொழுக்கட்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×