என் மலர்
நீங்கள் தேடியது "Kanji"
- குதிரைவாலியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்.
- எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 200 கிராம்
குதிரைவாலி அரிசி - 50 கிராம்
தயிர் - கால் கப்
சின்ன வெங்காயம் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்தைய நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும்.
குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும்.
தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் வரும் போது இறக்கி விடவும்.
பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.
சம்பா கோதுமை மாவு - 3 டீஸ்பூன்,
தண்ணீர் - ஒரு கப்,
ஓமம், சுக்கு, சீரகம், மிளகு - சிறிதளவு,
எலுமிச்சம்பழம் - அரை மூடி,
நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் - 2.
செய்முறை:
ஓமம், சுக்கு, சீரகம், மிளகு நான்கையும் வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும்.
வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி, மீதி தண்ணீரையும் ஊற்றிக் கிளறவும். கூழ் போல் ஆகிவிடும். அத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும்.
பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 3, 4 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மிளகு போன்ற சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
இந்த உருண்டைகளை, கோதுமைக் கஞ்சியில் சேர்த்துப் பருகவும்.
கைக்குத்தல் அரிசி - 4 டீஸ்பூன்
பொரிகடலை - 2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - ½ டீஸ்பூன்
செய்முறை
அரிசியை நன்றாக கழுவி வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்ததும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக உப்பி வரும் வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
அதே போல் அடுத்து கடாயில் பொரிகடலையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.
இரண்டும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்குத்தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் 2 டீஸ்பூன் கஞ்சிப்பொடியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கஞ்சி பதம் வரும் அளவிற்கு கலக்கவும்.
கஞ்சி தயார் ஆனவுடன் இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
அரிசி - 1 கப்
பச்சை பயறு - 3/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1 பல்
சின்ன வெங்காயம் - 3-4
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 8 கப்

செய்முறை:
பச்சை பயறு, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் போட்டு வேக வைக்கவும்.
சாமை அரிசி - 1 கப்
கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப்
வெந்தயம் - கால் ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
தேங்காய் துருவல் - அரை கப்

செய்முறை :
சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.
முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, நன்றாக கழுவி அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
உளுந்து பாதியளவு வெந்ததும் ஊறவைத்த சாமை அரிசியை சேர்க்கவும்.
அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும்.
அனைத்து நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
சூப்பரான சாமை கருப்பு உளுந்துகஞ்சி ரெடி.
கவுனி அரிசி - அரை கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :
கவுனி அரிசியை நன்றாக கழுவி 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
கவுனி அரிசியை அரைக்கும் போது தண்ணீரை தனியாக வடித்து வைத்து அரிசியை மட்டும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை அடி கனமாக பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் ஊறவைத்து தனியாக வைத்த தண்ணீரை சேர்த்து நன்றாக கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கைவிடாமல் கிளற வேண்டும். கலவை நன்றாக வெந்து திக்கான பதம் வரும் போது பாலை சேர்க்கவும்.
பால் சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து கலக்கவும்.
சத்தான கவுனி அரிசி கஞ்சி ரெடி..
ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats) - அரை கப்
கேரட் - 1
பீன்ஸ் - 5
பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.
மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.
கஞ்சியை கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் பரிமாறவும்.
குறிப்பு :
கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் .
வறுத்துப் பொடித்த கொள்ளு, வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).
கொள்ளு மாவு - 1 கப்
பார்லி மாவு - அரை கப்
சீரகத்தூள் - 1 சிட்டிகை,
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,

செய்முறை
கொள்ளு, பார்லி மாவை ஒன்றாக போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீல் ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கொதிக்க விடவும்.
அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும். கஞ்சி வெந்து வாசனை வரும் போது சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.
ஊறவைத்த கம்பு - அரை கப்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கடுகு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
பிரியாணி இலை - 1,
வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து, அரைத்தது) - 3 கப்,
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
பூண்டு - 3 பல்,
உப்பு, மிளகுத் தூள் - சுவைக்கேற்ப,

செய்முறை :
கம்பை நன்றாகச் சுத்தம் செய்து ஊறவைக்கவும்.
இதனுடன், வெஜிடபிள் ஸ்டாக், சீரகம், மிளகு, ஏலக்காய், பிரியாணி இலை, மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, வேகவைக்கவும்.
பிரியாணி இலையை எடுத்துவிட்டு, வெந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளவும்.
இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.
குதிரைவாலி அரிசி - 1 கப்,
கொள்ளு - அரை கப்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை :
கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து நீரில் மூழ்கும் வரைப் போட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்.
குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் அதை குக்கரில் போட்டு அதனுடன் கொள்ளுவை போட்டு மூழ்கும் அளவிற்கு மேல் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
நன்கு குழைய வெந்ததும் அதில் கடைந்து அடுப்பில் வைத்து மேலும் நீர் சேர்த்து கிளறிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சூப்பரான குதிரைவாலி கொள்ளு கஞ்சி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கொள்ளு - 2 டீஸ்பூன்
சிறுதானியம் - 2 டீஸ்பூன் ( ஏதாவது ஒரு சிறுதானியம்)
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - சிறிதளவு
மோர் - 2 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :
கொள்ளு, சிறுதானியத்தை தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
கொள்ளு ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
சிறுதானிய அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
கொத்தமல்லி, வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து பொடித்த கொள்ளு, சிறுதானிய அரிசி, தண்ணீர், வெந்தயக்கீரை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் போட்டு இறக்கி வைக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மோர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சூப்பரான கொள்ளு - சிறுதானிய கஞ்சி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு மாவு - கால் கப்
தண்ணீர் - 1 கப்
மோர் - 1 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம் - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :
கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
வறுத்த கேழ்வரகு மாவை தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
கைவிடாமல் காய்ச்ச வேண்டும். அப்போது தான் அடிபிடிக்காது. கேழ்வரகு நன்றாக வெந்து வரும் போது இறக்கி குளிர வைக்கவும்.
நன்றாக ஆறிய பின்னர் அதில் மோர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கேழ்வரகு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான கேழ்வரகு - மோர் கஞ்சி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.