search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "procession"

    • ராமநவமி விழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • கொல்கத்தாவின் புர்ரா பஜார், சிலிகுரி, பராசத் ஆகிய இடங்களில் பெரிய ஊர்வலங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கொல்கத்தா:

    ராம நவமி விழாவையொட்டி மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு இன்று சுமார் 5 ஆயிரம் ஊர்வலங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ராம நவமி விழாவின்போது சில இடங்களில் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து தற்போது ராமநவமி விழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவின் புர்ரா பஜார், சிலிகுரி, பராசத் ஆகிய இடங்களில் பெரிய ஊர்வலங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • இன்று அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா.
    • சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர்.

    தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார்.

    கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு பகுதியில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. உன்னில் இறைவனைப் பார் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இங்கு கண்ணாடியே தரிசனத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. அய்யா வைகுண்டரை பின்பற்றுபவர்கள் நெற்றியில் நீண்ட நாமமும், தலையில் தலைப்பாகையும் கட்டுவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவதார தினம் மார்ச் 3-ந் தேதி வருகிறது. அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி வழிபடும் அய்யா வைகுண்டரின் 192- வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி திருவனந்தபுரத்தில் இருந்தும் திருச்செந்தூரில் இருந்தும் வெவ்வேறு பேரணிகள் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்து அடைந்தது.

    இன்று காலை நாகர்கோவிலில் இருந்து தலைமை பதியான சுவாமி தோப்பிற்கு பிரம்மாண்ட பேரணி துவங்கியது. சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஏந்தியபடி பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க சென்ற இந்த பேரணியில் சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அய்யா ஹர ஹர ஐயா சிவ சிவ என கோஷமிட்டபடி சென்றனர். பேரணியை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் சென்றன.

    இதேபோல் அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அவதார பதியில் அதிகாலை தாலாட்டு, பள்ளி உணர்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது. சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு அய்யா வைகுண்டரை அழைத்து வருதல், அய்யா வைகுண்டருக்கு பணிவிடை, அன்னதானம் நடைபெறுகிறது. இதையொட்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    தனிமனிதன் நெடுங்காலம் இருக்க முடியாது ஆனால் மானுடம் நெடுங்காலம் இருக்கும். மானுடத்தின் மதிப்பீடுகளை தனிமனிதன்தான் வகுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அறம்சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது. எளிமையாய் வாழு, காட்டுக்குப்போய் கடும் தவம் செய்ய வேண்டாம், வீட்டுக்குள் இருந்து உன் சொந்த பந்தங்களுடன் முறிவு ஏற்படாமல் புத்திரோடு பேசி இருந்தால் அதுதான் ஆன்மீகம் என்கிறது அய்யாவழி.

    • ஆர்.எஸ்.எஸ். கொடி ஏற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஆர்.எஸ்.எஸ்.சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் சங்க கொடிக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பாரதமாதா, மற்றும் நிறுவனர் கேசவர் மற்றும் தலைவர் மாதவர் ஆகியோரின் உருவப்படங்களை வாகனத்தில் வைத்து பேரணியாக சென்றனர்.

    பேரணியை தலைவர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியானது கண்ணாரதெரு, கச்சேரி ரோடு, காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, பெரி யகடைவீதி மகாதான தெரு உள்ளிட்ட வீதிகளின் வழியாக துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.

    தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். கொடியேற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தனியார் பள்ளி தாளாளர் வெங்கட்ரமணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் மௌன மடாலயம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி பேசினார்.

    இதில் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ரயில் நிலையத்தி லிருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்போது வழி நெடுகிலும் கூடியிருந்த பெண்கள் ஆர் எஸ் எஸ் கொடிக்கு மலர் தூவி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலமானது நாகை அவுரித்திடலில் நிறைவடைந்தது.

    அதன் பின்னர் அவுரித்தி டலில் கொடியேற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியை செய்து காண்பித்தனர்.

    நாகையில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    • ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
    • பேராசிரியர்கள் மற்றும் சுகாதார நிலைய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

    ஊர்வலத்தை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஐஸ்வர்யா, டாக்டர்கள் ஜமுனாஸ்ரீ, ஷீலா தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் மணக்குள விநாயகர் பாலி டெக்னிக் கல்லூரி என். எஸ்.எஸ்.மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் சுகாதார நிலைய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சுகாதார நிலையத்தை வந்தடைந்தது. ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். அலுவலர் வேலழகன் செய்திருந்தார்.


    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    மதுரை

    ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) சங்க நிர்வாகி சேகர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    மதுரை, தேனி, திண்டுக் கல், திருச்சி, விருதுநகர், புதுகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவ கங்கை, உள்ளிட்ட மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 20 இடங்களில் வரு கின்ற விஜ யதசமி நாளன்று (22-ந் தேதி) ஊர்வ லம் மற்றும் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    அன்றைய தினம் ஆர்.எஸ்.எஸ். சார்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை யான காக்கி டவுசர், வெள்ளை சட்டை, தொப்பி, பெல்ட், பிளாக் ஷூ அணிந்து இசை வாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4 மணிக்கு பேரணி ஆரம்பித்து நகரின் பல்வேறு பகுதிகளை பேரணி ஊர்வ லமாக சுற்றி இறுதியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் விண்ணப்பித் திருந்தும் இதுவரை சம் பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

    எனவே விஜயதசமி அன்று பேரணி, கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண் டும்.

    இவ்வாறு மனுவில் கூறி யிருந்தனர்.

    இந்த மனு நீதிபதி இளங் கோவன் முன் விசார ணைக்கு வந்தது. விசாரணை யின் போது நீதிபதி, இதே கோரிக்கைகளை வலியு றுத்தி பல்வேறு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். இந்த வழக்குகளை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • மாணவிகள் விழிப்புணர்வு பகாதைகளுடன் கோடியக்கரை பூங்காவிலிருந்து ஊர்வலமாக சரணாலயம் வந்தனர்.
    • அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக்காப்பாளர் அபிஷேக் தோமர், உத்தரவின்படி நாகப்பட்டினம் வனஉயிரினக் கோட்டம் வேதாரண்யம் வனச்சரகம் கோடியக்கரை சரணா லயத்தில் வனஉயிரின வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்சியாக வனசரக அலுவலர் அயூப்கான் தலைமையில் கோடியக்கரை அரசு மேல்நிலைபள்ளி மாணவ, மாணவிகள் ஆரியர்கள், வனத்துறை , பணியாளர்கள், வனவர்கள் மகாலெட்சுமி, பெரியசாமி, சதீஷ்குமார். மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர், பாலசுப்பிரமணியன் மற்றும் துணை தலைவர் குமார் ,உறுப்பினர்கள் ராமன், வீரசுந்தரம், சிவகணேசன் உள்ளியிட்டோர் கலந்துகொ ண்டனர்.

    பின்பு தம்புசாமி இல்லவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன .வன உயிரின வாரா நிகழ்ச்சியினை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பகாதைகளுடன் கோடியக்கரை பூங்கா விலிருந்து ஊர் வலமாக சரணாலயம நுழைவுவாயிலை வந்த டைந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பின் சரணாலய பகுதிகளை சுற்றி காண்பித்தும் வனஉயிரினங்கள், வனம், மற்றும் பறவைகள் குறித்து டாக்டர். சிவகணேசன் மாணவ- மாணவிகளுக்கு எடுத்து உரைத்தார்.

    முடிவில் வனஉயிரின வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
    • முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 31-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    இதற்கு பா.ஜனதா மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்குகிறார்.

    இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாஷம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    ஊர்வலமானது மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    5ஆளில்லா குட்டி விமானங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    100-க்கும் மேற்பட்ட இடத்தில் போலீசார் நிறுத்தி பைனாக்குலர் பயன்படுத்த உள்ளது.

    மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன், திருச்சி டிஐஜி பலவன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், மயிலாடுதுறை எஸ்பி மீனா, தஞ்சை எஸ்.பி ஆஸிஷ் ராவத், எஸ்ஐயூ எஸ்பி பாண்டியராஜன், திருச்சி டிராபிக் எஸ்பி செல்வகுமார், சேலம் எஸ்பி மதிவாணன், கரூர் எஸ்பி சுந்தரவதனம், கடலோர காவல் படை எஸ்பி அதிவீரப்பாண்டியன், திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார், அரியலூர் எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உட்பட 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவலர் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும், கமோண்டோ போலீசாரும் வந்துள்ளனர்.

    மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை அதிராம்பட்டினம் வண்டிப் பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து விநாயகர் ஊர்வலம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.

    ஏரிப்புறக்கரையில் சிலைகளை கரைக்க கடற்கரையில் படகு தயார் நிலையில் நிறுத்தி வைக்கபட்டது.

    500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

    • ஊர்வலத்திற்கு அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • கோவில் முன்பு இருந்து தொடங்கிய விநாயகர் ஊர்வலம் மெயின் ரோடு, திருவேங்கடம் சாலை, முக்கிய ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு சென்றடைந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கரன்கோவில் நகரில் உள்ள கோமதியாபுரம் தெருக்கள், லட்சுமியாபுரம் தெருக்கள், புதுமனை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் அமைக்கப்பட்டிருந்த 25 விநாயகர் சிலைகளும், குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட 2 சிலைகளும், சங்கர நாராயணசாமி கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்து முன்னணி தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    பாரதீய மஸ்தூர் சங்க மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார். தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநிலத் துணை தலைவர் மாரிமுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கோவில் முன்பு இருந்து தொடங்கிய விநாயகர் ஊர்வலம் மெயின் ரோடு, ராஜ பாளையம், திருவேங்கடம் சாலை, முக்கிய ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு சென்றடைந்தது.

    இந்த ஊர்வலத்தில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் சுப்பிரமணியன், இந்து முன்னணி நெல்லை கோட்ட அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, இந்து முன்னணி நகர பொருளாளர் குருச்சந்திரன், பொதுச் செயலாளர் விஜய் பாலாஜி, நகர செயலாளர்கள் சங்கர், மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் பாலகுமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டையுடன் ஊர்வல மாக சென்றது.
    • 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 3 அடி முதல் 10 அடி உயரம் வரை 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். அப்போது விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது.  இந்நிலையில் 3-ம் நாளான நேற்று அனைத்து சிலைகளும் ஏரியில் கரைப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டை யுடன் ஊர்வல மாக சென்றது. இதனைக் காண திரளான பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை காவல் துறை துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கு வழிவகுத்தனர். இந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சின்ன சேலம் காவல் ஆய்வாளர் ராஜாராமன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

    பின்னர் விநாயகர் சிலையை ஒன்றன்பின் ஒன்றாக கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடனும் விநாயகர் சிலையை சின்னசேலம் ஏரியில் கரைக்கப்பட்டது. சிலையை கரைக்கும் போது பக்தர்கள் ஏரிக்குள் அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க போலீ சாரின் கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு, இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி கோவிந்தராஜ் தலைமையில் திண்டி வனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக் டர்கள் கலையரசி, லட்சுமி, கலையரசன் நகரம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். இந்து முன்னணி சார்பாக 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக அமைதியான முறையில் நடைபெற்றது.

    • முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
    • போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பகுதியில் 87 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. பின்னர், விநாயகர் சதுர்த்தி நாளிலேயே 40 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

    இந்நிலையில் கும்ப கோணம் மகாமகக்குளம் பகுதியில் இருந்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்ய ப்பட்டிருந்த 47 விநாயகர் சிலைகளை மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு நாகேஸ்வ ரன்கோவில் கீழவீதி, வடக்கு வீதி, காந்தி பூங்கா, மடத்து தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்க ப்பட்டன.

    இதில் பா. ஜனதா கட்சியின் அறிவு சார்பு பிரிவின் மாநில தலைவர் கார்த்திகேயன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீர்த்திவாசன் (கும்பகோணம்), ஜாபர்சித்திக் (திருவிடை மருதூர்), பூரணி (பாபநாசம்) உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×