search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahamariamman temple"

    • கணபதி ஹோமம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • ஸ்ரீ மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் பிரசித்திபெற்ற மகாமாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று பொங்கல் விழா விமர்சையாக நடந்தது.

    முன்னதாக கடந்த மாதம் 29-ந் தேதி கணபதி ஹோமம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 4ந் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜை, மற்றும் பூச்சட்டி எடுத்து ஆடுதல் நடந்தது. 5ந் தேதி படைக்கலம் எடுத்தல், அம்மனை அழைத்தல், கரகம் எடுத்தல் நடந்தது. 6-ந் தேதி காலை 5 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், ஸ்ரீ மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 3 மணிக்கு முளை ப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த திரளா னோர் கலந்துகொண்டனர்.

    • சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத் தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
    • இன்று காலை உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத் தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. கடந்த 2 ந் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தது. தினமும் காலை 6 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதை தொடர்ந்து பெண்கள் கம்பத்திற்கு மஞ்சள் பூசி தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். 7-ந் தேதி இரவு தலவுமலை மற்றும் வடுகபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து மாரியம்மனை வழிபட்டனர். 8 -ந் தேதி இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து அம்மன்கோவில்புதூர், வாய்கால்மேடு பகுதி மக்கள் வந்து வழிபாடு நடந்தினர்.

    நேற்று இரவு காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து இரவு 8.30 மணிக்கு மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை நடந்தது. அதைதொடந்து கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள் வந்து மாரியம்மனை வழிபட்டனர். அதன்பின்பு காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாவிளக்கு பூஜை நடத்தினர்.

    இன்று காலை 7.20 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதைதொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பழி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    பின்னர் மாலை 3.30 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷம் இட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5.20 மணிக்கு தேர் நிலை சேரும். இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடக்கும்.

    நாளை மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் 15 நாள் விழா நிறைவு பெறுகிறது. முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொட–ர்ந்து முருங்கத்தொழுவு சுற்று பகுதியில்உள்ள 14-க்கும் மேற்பட்ட கிராமங்க–ளில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    ×