search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிசேக விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
    X

    யானை மீது வைத்து தீர்த்தம் எடுத்து வரப்பட்ட காட்சி.

    குமாரபாளையம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிசேக விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்

    • ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 30-ந் தேதி தொடங்கின.
    • தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாரதனையும் நடைபெறுகிறது பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் செல்வ விநாயகர், கல்யாண விநாயகர், செந்தூர் வேலன், ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 30-ந் தேதி தொடங்கின.

    தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. இன்று மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜைதொடங்குகிறது. தொடர்ந்து ரக்ஷா பந்தன், கும்பஸ்தாபனம், யாக சாலை பிரவேசம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன.

    நாளை விசேஷ சாந்தி, 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு செல்வ விநாயகர், எல்லை மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாரதனையும் நடைபெறுகிறது பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது அன்று மாலை 7 மணிக்கு தேச மங்கையர்க்கரசி ஆன்மீக சொற்பொழிவு மறுநாள் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    Next Story
    ×