search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker body"

    • மாயாண்டியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிவாரண உதவி வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காலையில் 6 பேர் திடீரென அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரியை சேர்ந்த தொழிலாளி மாயாண்டி என்பவர் கடந்த 10-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

    13 பேர் கைது

    இதுதொடர்பாக போலீசார் 3 சிறுவர்கள் உள்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் மாயாண்டியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிவாரண உதவி வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5-வது நாளாக போராட்டம்

    இன்று 5-வது நாளாக ஊர்வலமாக சென்று பாளை லூர்துநாதன் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். இதையொட்டி துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இன்று காலையில் 6 பேர் திடீரென அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மாயாண்டியின் உறவினர்கள் பாளை ராஜகோபாலசுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு லூர்துநாதன் சிலைக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய துணை கமிஷனர் சீனிவாசன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டால் வழக்குபதிவு செய்யப்படும்.

    இதனால் மாண வர்கள் எதிர்காலம் கேள்வி க்குறியாகும். எனவே குறிப்பிட்ட சிலர் மட்டும் பேச்சுவார்த்தைக்கு வருவமாறு அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய மாயாண்டியின் உறவினர்கள் கைது செய்யப்பட்ட 6 பேரை விடுதலை செய்தால் நாங்கள் கலைந்து செல்கிறோம் என தெரிவித்தனர்.

    தொடர்ந்து முக்கிய சிலர் மட்டும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    மீண்டும் பேச்சுவார்த்தை

    மாயாண்டியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58).
    • கொலை தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58). இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.

    சாலை மறியல்

    இவர் கடந்த மாதம் 26-ந்தேதி வீட்–டில் இருந்து வெளியே சென்றார், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    ஆனால் போலீசார் அவரை கண்டுபிடிக்காததை கண்டித்து நேற்று முன்தினம் காலை மாயாண்டியின் உறவினர்கள் கரையிருப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தாழையூத்து அருகே சிதம்பரநகர் காட்டு பகுதியில் மாயாண்டி கல்–லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தாழை–யூத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவரது உடல் கிடந்ததால் தாழையூத்து போலீசார் வழக்குப்ப–திவு செய்து விசா–ரணை நடத்தி அவருடன் வேலை பார்த்து வந்த மாரி மதன் (21) என்பவரை கைது செய்தனர்.

    3-வது நாள் போராட்டம்

    இந்த சம்பவத்தில் போலீசாரின் மெத்தன போக்கை கண்டித்து நேற்று முன்தினம் மாயாண்டி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். நேற்று 2-வது நாளாக கரையிருப்பு கிராமத்தில் பந்தல் அமைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாயாண்டி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பாகூர்:

    புதுவை நோனாங்குப்பம் புதுக்காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது28), கட்டிட தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள லோகநாதன் நேற்று மதுகுடிப்பதற்காக மனைவி கவிநிதியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் கவிநிதி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய லோகநாதன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள சுண்ணாம்பாற்று பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் ஆற்றில் இறங்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்து லோகநாதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பலன் இல்லை. மேலும் இருள் சூழந்ததால் மீட்பு நடவடிக்கையை கைவிட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை மீன்வலையில் சிக்கிய நிலையில் லோகநாதனின் உடல் அதே இடத்தில் மிதந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆந்திராவில் துப்பாக்கி சூட்டில் பலியான ஜவ்வாதுமலை தொழிலாளியின் உடலை சாலை வசதி இல்லாததால் 5 கிலோ மீட்டர் தூரம் சுமந்துசென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. #RedSandersSmuggling
    போளூர்:

    ஆந்திராவில் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கொல்லப்பல்லி வனப்பகுதியில் கடந்த 31-ந் தேதி இரவில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போதைய துப்பாக்கிச்சூட்டில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கானமலை கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் பலியானார்.

    இந்த என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாகவும் காமராஜ் உடலை மறு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் இறந்தவரின் உறவினர்கள் ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநில முதன்மை செயலாளர் உட்பட 9 பேர் விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், அதுவரை இறந்த காமராஜின் உடலை ஸ்ரீ காளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் வைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி, காமராஜ் உடலை மறுபிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, காளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவர் முன்னிலையில் இறந்த காமராஜின் உடல் மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.தொடர்ந்து வக்கீல் ரவி முன்னிலையில் ஸ்ரீகாளஹஸ்தி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்சன்பிரசாத், காமராஜின் உடலை அவருடைய மகன் ராமராஜனிடம் ஒப்படை த்தார்.

    காமராஜின் உடல் சொந்த ஊரான கானமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. கானமலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்சில் சென்ற உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட முடியவில்லை. இதையடுத்து, கம்பில் துணியை கட்டி டோலி அமைத்து அதற்குள் உடலை வைத்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரடு முரடான மலைப்பாதை வழியாக அவரது வீட்டுக்கு உறவினர்கள் சுமந்து சென்றனர்.

    பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. #RedSandersSmuggling
    ×