search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jumping"

    • எளிதாக கையாளக்கூடிய பயிற்சிகளை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.
    • ஸ்கிப்பிங் செய்வது உடலில் கொழுப்பை கணிசமாக குறைக்கும்.

    உடற்பயிற்சிகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்கள் எளிதாக கையாளக்கூடிய பயிற்சிகளை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் அது ஒட்டுமொத்த உடற் தகுதியையும் மேம்படுத்தும் விதமாகவும், இதய தசைகளை வலுப்படுத்தும் வகையிலும், உடல் எடையையும், எலும்பு அடர்த்தியையும் சீராக பராமரிக்கும் விதமாகவும், நீண்ட ஆயுளுக்கு வித்திடுவதாகவும் அமைய வேண்டும்.

    அதற்கு ஏற்ற பயிற்சிகளாக ஓடுவதும், துள்ளிக்குதிப்பதும் அமைந்திருக்கின்றன. இவைகளில் எது சிறந்தது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. எந்த பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வருவது நல்லது என்று பார்ப்போம்.

    இதயத்தின் சுவர்களை வலுப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஒட்டுமொத்த உடல் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இதய செயல்பாடுகளை மேம்படுத்தும்.

    எண்டோர்பின் மற்றும் செரோடோனின் போன்ற ரசாயனங்களை வெளியிட உதவும். இவை மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க செய்யும்.

    சுவாசத்தில் கலக்கும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை அகற்றி, நுரையீரலை பலப்படுத்தும். சளி, இருமல் பிரச்சினைகளை விரட்டியடிக்கும்.

    எதை தேர்வு செய்வது?

    இரண்டு வகையான உடற்பயிற்சிகளும் உடல் எடை குறைப்புக்கும், ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை சேர்ப்பதாக இருந்தாலும் பயிற்சிக்காக செலவிடும் நேரத்தை கணக்கில் கொள்ளும்போது, ஓடுவதை விட துள்ளிக்குதிப்பது அதிக பலன் அளிக்கும். இருப்பினும், உடற்பயிற்சியின் போது இயற்கைக்காட்சிகளை ரசிக்க விரும்புவோருக்கு ஓடுவதுதான் சிறந்த வழி.

    அதிக கலோரிகளை எரிக்க வேண்டுமா?

    `ஸ்கிப்பிங்' எனப்படும் துள்ளிக் குதிப்பது, ஓடுவது ஆகிய இரண்டுமே பயிற்சி செய்ய தொடங்கிய பத்து நிமிடங்களுக்குள் கணிசமான எண்ணிக்கையிலான கலோரிகளை எரிக்க உதவிபுரியும். இருப்பினும், ஓடுவதுடன் ஒப்பிடுகையில், கயிற்றை கொண்டு துள்ளிக்குதிப்பது சற்று கூடுதல் நன்மையை வழங்கும். 10 நிமிடங்கள் வேகவேகமாக ஓடுவதுடன் ஒப்பிடும்போது நின்ற இடத்திலேயே துள்ளி குதித்தபடி 146 கலோரிகளை எரித்துவிட முடியும்.

    ஸ்கிப்பிங் செய்வது உடலில் உள்ள கொழுப்பை கணிசமாகக் குறைக்கும், இதய நோய்களுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளை விரட்டியடிக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டம் மற்றும் ஸ்கிப்பிங் ஆகிய இரண்டுமே இதய நலனை பாதுகாக்கக்கூடியவை.

    ஓடுவது, துள்ளிக்குதிப்பது இரண்டுமே தரையுடன் நேரடி தொடர்பு கொண்டவை. இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால்களில் காயம் அடைந்தவர்களுக்கு இந்த பயிற்சிகள் கடினமானவை. மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    • புதுவையை அடுத்த ஆரோவில்லில் இயங்கும் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி ஆண்டுதோறும் குதிரையேற்ற போட்டியை நடத்தி வருகிறது.
    • 3-வது நாளான அட்வான்ஸ் டிரஸ்ஏஜ் ஒருங்கிணைப்பு பிரிவில் வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த ஆரோவில்லில் இயங்கும் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி ஆண்டுதோறும் குதிரையேற்ற போட்டியை நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு 23-வது தேசிய அளவிலான குதிரை ஏற்ற போட்டி 16-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கின்றது. போட்டியில் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கோயம்புத்தூர், ஐதராபாத் மற்றும் உதகை உட்பட நாடு முழுவதும் இருந்தும் 140 பயிற்சி பெற்ற குதிரைகள் மற்றும் 150 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    முதல் நாளில் குதிரை அணிவகுப்பு மற்றும் உடல் ஆரோக்கிய பிரிவில் குதிரைகளும் வீரர்களும் பங்கேற்றனர். 2-வது நாளில் டிரஸ்சேஜ் எனப்படும் குதிரை மற்றும் வீரர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு போட்டியும் சிறுவர்களுக்கான தடை தாண்டும் போட்டியும் நடத்தப்பட்டது.

    3-வது நாளான அட்வான்ஸ் டிரஸ்ஏஜ் ஒருங்கிணைப்பு பிரிவில் வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து சீனியர் தடை தாண்டும் பிரிவில் போட்டி நடந்தது.

    இதில் சென்னை, பெங்களூர்,கோவை, புதுவை,ஊட்டியை சேர்ந்த வீரர்கள் 10 இடங்களில் வைக்கப்பட்ட 90 செ.மீ. உயர தடைகளை தாண்டினார்கள்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் டார்ச்சர் பாலத்தில் இருந்து மனைவி குதித்து தற்கொலை.
    • சென்னை–யிலிருந்து மரியா உடல் இன்று காலை சேலத்திற்கு கொண்டுவரப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் லூசியா. இவரது மகள் மரியா. சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த சூசைராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் ஜப்பானில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி டோக்கியோவில் உள்ள பாலத்தில் இருந்து மனைவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சூசைராஜ், மனைவியின் பெற்றோருக்கு தெரிவித்தார்.

    ரூ.2 கோடிக்கு காப்பீட்டு

    இதையடுத்து அவரது உடல் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே மரியாவின் தாய் அனுசியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் . அதில், எனது மகளை வரதட்சனை கேட்டு சூசைராஜ் கொடுமைப்படுத்தினார். கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் சூசைராஜி, வேலை கிடைத்தது.

    அங்கு செல்லும் முன் எனது மகள் பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளார். என் மகள் இறந்து விட்டதாக இம்மாதம் 3-ம் தேதி தெரிவித்தார் இயற்கையான முறையில் அவர் இறக்கவில்லை. ஆகவே எனது மகள் சாவில் மர்மம் உள்ளதால் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார்.

    போலீஸ் பாதுகாப்பு

    இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மரியாவின் கணவர் சூசைராஜ் நேரில் ஆஜராக நீதிபதி உத்திரவிட்டார். அதன்படி அவர் நேற்று ஆஜராகி மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி அப்துல் குத்தூஸ் சேலம் அரசு மருத்துவமனையில் மரியா உடல் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும். டாக்டர்கள் குழுவை சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் நியமித்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு போலீசருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் நகலை மனுதாரருக்கும், சூசைராஜுக்கும் வழங்க வேண்டும், கணவர் முன்னிலையில் இறுதி சடங்கிற்காக உடலை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் கணவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    நடவடிக்கை

    இதையடுத்து சென்னை–யிலிருந்து மரியா உடல் இன்று காலை சேலத்திற்கு கொண்டுவரப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி, அதன் அறிக்கையின் அடிப்படையில் இன்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    பொள்ளாச்சி அருகே கடன் தொல்லைக்கு குடும்பமே பலியான சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம்:

    பொள்ளாச்சியை அடுத்துள்ள நடுப்புளி அருகே உள்ள சித்தூரை சேர்ந்தவர் சதிஷ்குமார் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி தவமணி (30).

    இவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மோனிகா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது.

    கடந்த மாதம் 1-ந் தேதி முதல் சதிஷ்குமார் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கவுண்டம் பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு குடி வந்தார்.

    அங்கு தங்கி இருந்து விவசாய வேலைகளை கவனித்து வந்தார். இந்த விவசாய தோட்டத்தில் 11 அடி உயர தண்ணீர் தொட்டி உள்ளது. நேற்று மதியம் இந்த தண்ணீர் தொட்டிக்குள் சதிஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குதித்தார்.

    இதில் சதிஷ்குமாரும், குழந்தை மோனிகாவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தவமணி மட்டும் கை, கால்களை அசைத்தபடி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார்.

    அப்போது தோட்டத்துக்கு வந்த டிராக்டர் டிரைவர் தவமணி தண்ணீர் தொட்டிக்குள் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தவமணியை மீட்டார். அப்போது அவருக்கு சுய நினைவு இருந்தது.

    இந்த நிலையில் கணவன்- மகள் தண்ணீரில் குதித்து இறந்த தகவல் கிடைத்ததும் தவமணி வேதனை அடைந்தார். அவர் கண்ணீர் விட்டு தரையில் புரண்டு கதறி அழுதார்.

    வீட்டிற்குள் ஓடி சென்ற தவமணி அங்கு தென்னை மரங்களுக்கு வைக்க பயன்படுத்தப்படும் வி‌ஷ மாத்திரையை தின்றார். இதில் அவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 4 மணியளவில் தவமணி இறந்தார்.

    கடன் தொல்லையால் சதிஷ்குமார் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பொள்ளாச்சியில் சதிஷ்குமார் வசித்து வந்த போது சிலரிடம் கடன் வாங்கி உள்ளார்.

    அவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சதிஷ்குமார் குடும்பத்துடன் கவுண்டம் பாளையம் வந்து உள்ளார்.

    இங்கு வந்த பின்னரும் கடன் கொடுத்தவர்கள் சதிஷ்குமார் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர். நீங்கள் தங்கி உள்ள இடம் தெரிந்து விட்டது. நாங்கள் அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாமா என மிரட்டி உள்ளனர்.

    இதனை சதிஷ் குமார் தன்னுடன் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களிடம் கூறி வேதனை பட்டு உள்ளார். இந்த நிலையில் தான் அவர் குடும்பத்துடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லைக்கு குடும்பமே பலியான சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    கோவை ஆர்எஸ் புரத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை வேலாண்டி பாளையம் ஆனந்தா காலனியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). பெயிண்டர். இவருக்கு பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் மணிகண்டன் ஆர்.எஸ். புரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு மணிகண்டன் வேலை செய்யும் கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அங்குள்ள காவலாளி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    இதேபோன்று கோவை போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்தவர் மோகன் (54). இவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். போத்தனூர் பாரதி நகரை சேர்ந்த அந்தோணி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பாகூர்:

    புதுவை நோனாங்குப்பம் புதுக்காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது28), கட்டிட தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள லோகநாதன் நேற்று மதுகுடிப்பதற்காக மனைவி கவிநிதியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் கவிநிதி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய லோகநாதன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள சுண்ணாம்பாற்று பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் ஆற்றில் இறங்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்து லோகநாதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பலன் இல்லை. மேலும் இருள் சூழந்ததால் மீட்பு நடவடிக்கையை கைவிட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை மீன்வலையில் சிக்கிய நிலையில் லோகநாதனின் உடல் அதே இடத்தில் மிதந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துமலை அருகே மூலநோயால் அவதிப்பட்டு வந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குளம்:

    நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 31). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மூலநோய் வந்ததால் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என்றதால், அதற்கு மறுப்பு தெரிவித்து வெளியேறினார். 

    இதில் மனம் உடைந்த அவர் கடந்த 15-ந் தேதி காற்றாலை மின்நிலையத்தில் மின்வயரை பிடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதில் வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இவரை மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித் தனர். அங்கு வெங்கடேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் வெங்கடேஷ்சின் முகத்தின் ஒரு பகுதி கருகி மோசமான நிலையில் காட்சி அளித்தது.

    இதற்காக தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி திடீர் என்று அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்தநிலையில் மாயமான வெங்கடேஷ் கடந்த 25-ந் தேதி அரியநாயகிபுரத்தில் உள்ள அவரது அக்காள் வீட்டுக்கு சென்று அவரை பார்த்து பேசிவிட்டு, வீட்டுக்கு போவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் வீட்டுக்கு அவர் செல்லவில்லை. இதனால் வெங்கடேசை அவரது உறவினர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஊத்துமலை ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில், வெங்கடேஷ் உடல் மிதந்தது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு ஊத்துமலை போலீசாரும், ஆலங்குளம் தீயணைப்புபடை வீரர்களும் விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.         
    சேலம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த இளம்பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டார்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் ரோட்டில் உள்ள  மஞ்சக்கல்பட்டி, சிவா பாலிமேடு இறக்கம் கள்ளுக்கடை பகுதியில் வசித்து வருபவர் செல்வம் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்புக்கரசி (31). இவர்களுக்கு கனிஷ்கா(4) என்ற  மகள் உள்ளார்.

    செல்வம்-அன்புக்கரசி தம்பதியினர் எடப்பாடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மாமர தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் செல்வத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மாலை நேரம் ஆனதும் அவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதாக தெரிகிறது. இதனால் அன்புக்கரசி, அவரிடம் இப்படி மது குடிக்காதீர்கள். தோட்ட வேலையை கவனிங்கள் என்று கூறியுள்ளார்.

    ஆனால், செல்வம் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. பணத்தை  குடித்து செலவழித்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து செல்வம் மது குடித்துவிட்டு வந்து தோட்டத்தை சரியாக பராமரிக்காமல் இருந்ததால் வீட்டில் கடந்த 2 நாட்களாக சண்டை ஏற்பட்டுள்ளது.

    தினம் தினம் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்புக்கரசி குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் மனைவியும், மகளும் காணாததால் செல்வம் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார். இன்று ராஜேந்திரன் என்பவருடைய மாமர தோட்டத்தில் உள்ள கிணற்றில் அன்புக்கரசியும், குழந்தை கனிஷ்காவும் பிணமாக மிதந்தனர். அக்கம், பக்கத்தில் வசித்து வருபவர்கள் இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அன்புக்கரசி மற்றும் குழந்தை கனிஷ்கா ஆகியோர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  

    இது பற்றி போலீசார் கூறுகையில், அன்புக்கரசி தனது மகள் கனிஷ்காவை அழைக்குக் கொண்டு மாமர தோட்டத்திற்கு வந்துள்ளார். பின்னர் தனது மகளை தூக்கி நெஞ்சோடு இறுக்கி பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதனால்  தண்ணீரில் மூழ்கி தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர். மேலும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் முழு விபரங்களும் தெரியவரும் என்றனர்.
    டெல்லியில் உள்ள சத்தர்பூர் நிலையத்தில் மெட்ரோ ரெயிலின் முன்னர் பாய்ந்து நடுத்தர வயது பெண் தற்கொலை செய்து கொண்டதால் ரெயில் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. #Womansuicide #DelhiMetrotrain
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள சத்தர்பூர் மெட்ரோ நிலையத்தில் வழக்கம் போல் இன்று மாலை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 4 மணியளவில் அந்த நிலையத்தை நோக்கி ஒரு ரெயில் வந்ததும் நடைமேடையில் நின்றிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயது பெண் திடீரென்று ரெயிலின் குறுக்கே பாய்ந்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். அந்த பெண் யார்? என்பது தெரியாத நிலையில் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதனால் அந்த  சத்தர்பூர்  நிலையத்தின் வழியாக செல்லும் மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று மாலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. #Womansuicide #DelhiMetrotrain 
    வேலை கிடைக்காத விரக்தியில் வணிக வளாக அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
    கோயம்பேடு:

    வேலை கிடைக்காத விரக்தியில் வணிக வளாக அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். தரைதளத்தில் இருந்த பாதுகாவலர் அவரை கைகளில் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார்.

    சென்னை வடபழனி, ஆற்காடு சாலையில் கமலா திரையரங்கம் எதிரில் தனியார் அடுக்குமாடி வணிகவளாக கட்டிடம் உள்ளது. அதில் நான்காவது மாடியிலிருந்து ஒரு வாலிபர் குதிக்க முயன்றார். இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை வேண்டாம்... என எச்சரித்து சத்தம் போட்டனர்.

    ஆனாலும் அதை கேட்காமல் அந்த வாலிபர் ஏறி குதித்தார். சத்தம் கேட்டு அதை தரைதளத்திலிருந்து கவனித்த பாதுகாவலர் சகாயம் ஓடிச்சென்று அவரை 2 கைகளாலும் தாங்கிப்பிடித்தார். இதனால் அந்த வாலிபரின் தலை தரையில் மோதாமல் தவிர்க்கப்பட்டு உயிர்தப்பினார்.

    ஆனால் இந்த சம்பவத்தில் பாதுகாவலர் சகாயத்தின் கை முறிந்தது. குதித்த வாலிபரும் காயம் அடைந்தார். இரண்டு பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிதம்பரத்தை சேர்ந்த சபரிநாதன் (வயது 27) என்று தெரிந்தது. பொறியியல் பட்டதாரியான இவர் பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

    இங்கு தங்கியிருந்து வேலை தேடிவந்த அவருக்கு சரியான வேலை கிடைக்காததால் ஏமாற்றத்துக்கு உள்ளானார். தனக்கு வேலை கிடைக்காததற்கு இடஒதுக்கீடு மற்றும் நிர்வாக குளறுபடிகள் தான் காரணம் என்று அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி தற்கொலை முயற்சிக்கு முன்னதாக முகநூலில் பதிவு செய்துள்ளார்.

    வாலிபரின் தலை தன் மீது விழுந்தால் உயிர் போய்விடும் என்று தெரிந்தும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றிய பாதுகாவலர் சகாயத்தை வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்களும், போலீசாரும் பாராட்டினார்கள். 
    ×