search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
    X

    டெல்லி மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

    டெல்லியில் உள்ள சத்தர்பூர் நிலையத்தில் மெட்ரோ ரெயிலின் முன்னர் பாய்ந்து நடுத்தர வயது பெண் தற்கொலை செய்து கொண்டதால் ரெயில் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. #Womansuicide #DelhiMetrotrain
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள சத்தர்பூர் மெட்ரோ நிலையத்தில் வழக்கம் போல் இன்று மாலை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 4 மணியளவில் அந்த நிலையத்தை நோக்கி ஒரு ரெயில் வந்ததும் நடைமேடையில் நின்றிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயது பெண் திடீரென்று ரெயிலின் குறுக்கே பாய்ந்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். அந்த பெண் யார்? என்பது தெரியாத நிலையில் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதனால் அந்த  சத்தர்பூர்  நிலையத்தின் வழியாக செல்லும் மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று மாலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. #Womansuicide #DelhiMetrotrain 
    Next Story
    ×