search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painter suicide"

    கோவை ஆர்எஸ் புரத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை வேலாண்டி பாளையம் ஆனந்தா காலனியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). பெயிண்டர். இவருக்கு பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் மணிகண்டன் ஆர்.எஸ். புரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு மணிகண்டன் வேலை செய்யும் கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அங்குள்ள காவலாளி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    இதேபோன்று கோவை போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்தவர் மோகன் (54). இவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். போத்தனூர் பாரதி நகரை சேர்ந்த அந்தோணி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடத்தில் மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    பல்லடம் மங்கலம் ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 38) பெயிண்டர். இவரது மனைவி ரமீலா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் அப்பாசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்பாஸ் தனது தாய் சைனாவுடன் வசித்து வந்தார். மனைவி, குழந்தைகளை பிரிந்த அப்பாஸ் விரக்தியில் மது குடித்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இரவு அப்பாஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடிப்பழக்கத்தை நிறுத்தச்சொல்லி தாய் கண்டித்ததால் பெயிண்டர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லை அடுத்த நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் பரந்தாமன் என்கிற அய்யப்பன் (வயது 26), பெயிண்டர் வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட பரந்தாமனை அவரது பெற்றோர், விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

    அங்கு சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின்னர் கடந்த ஜனவரி மாதம் பரந்தாமன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். அவ்வாறு வேலைக்கு செல்லும்போது அவருக்கு மீண்டும் குடிப்பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் இந்த குடிப்பழக்கத்தை நிறுத்தச்சொல்லி பரந்தாமனை அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பரந்தாமன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் எம்.பி.டி. ரோட்டை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 24). பெயிண்டர் வேலை செய்து வந்தார். நேற்று மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது பெற்றோருடன் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலாஜா போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கால் முறிந்த வேதனையில் பெயிண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள அனுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 50). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியின் போது தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. காயம் சரியாகாததால் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி பாண்டி வேதனையுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் அங்குள்ள தோட்டத்தில் பாண்டி வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பாண்டி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பாண்டி மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திப்புராயப்பேட்டில் மனைவி திட்டியதால் பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திப்புராயப்பேட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் லூர்து நாதன் பெயிண்டர் (வயது 34). இவரது மனைவி சோபியா (33). தனியார் கூட்டுறவு வங்கி ஊழியர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    லூர்துநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார்.

    அதேபோல் நேற்றும் லூர்துநாதன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் மனைவி திட்டினார். இதில் மனமுடைந்த லூர்துநாதன் வம்பாகீரப் பாளையம் செஞ்சி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை குடோனில் நைலான் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சோபியா வீட்டில் கணவர் இல்லாததால் தேடினார். அப்போது குடோன் அருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் லூர்துநாதன் தூக்கில் தொங்குவதை கண்டு சோபியாவுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதுகுறித்து சோபியா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் எம். தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32). பெயிண்டர். இவரது மனைவி புஷ்பலதா(27). மாரிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. சமீப காலமாக கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதையடுத்து கடந்த மாதம் கணவரிடம் கோபித்து கொண்டு புஷ்பகலா, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த மாரிமுத்து நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்த மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூரில் தாயார் இறந்த நினைவு நாளில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த அரியூர்பேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி பெயிண்டர். இவரது மனைவி சத்யா (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சுந்தரமூர்த்தியின் தாயார் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த சோகம் தாங்க முடியாமல் சுந்தரமூர்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

    இந்த நிலையில் நேற்று சுந்தரமூர்த்தியின் தாயார் நினைவு தினம். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் உள்ள மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    இதை பார்த்த சத்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சுந்தரமூர்த்தி இறந்து போனார்.

    இதுகுறித்து சத்யா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மங்கலம் கோர்க்காடு அம்மன்நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (42 லாரி டிரைவர். இவரது மனைவி வேம்பு (41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    குடிப்பழக்கம் உள்ள பார்த்திபன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

    இதேபோல் நேற்றும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்த பார்த்திபன் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் சீட் பைப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வேம்பு கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவிலில் இன்று காலை வீட்டு வளாகத்தில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இளங்கடை அரிப்பு தெருவை சேர்ந்தவர் நவாப்ஜாண் (வயது 48). பெயிண்டர். இவர் அடிக்கடி குடித்து விட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று நவாப்ஜாண் வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்ப வில்லை. இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை நவாப்ஜாண் அவரது வீட்டில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய நவாப்ஜாணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட நவாப்ஜாணுக்கு சோபியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நவாப்ஜாண்தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
    வாணரப்பேட்டையில் குடும்ப தகராறில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவாதோப்பு 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது47), பெயிண்டர். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ராமு அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வந்ததால் ராமுவுக்கும், அவரது மனைவி பிருந்தாவுக்கும் தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இரவும் இதுபோல ராமு மதுகுடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராமு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் ஆஸ்பெட்டால் கூரை இரும்பு பைப்பில் ராமு துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவை வேல்ராம்பட்டில் மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு திருப்பதி பாலாஜி நகரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி ஜானகி (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சசிகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

    அதேபோல் நேற்றும் சசிகுமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் அவரது மனைவி வேலைக்கு செல்லாமல் இப்படி மது குடித்து விட்டு வந்தால் பிள்ளைகளை யார் கவனிப்பது? அவர்களது படிப்பு செலவுக்கு என்ன செய்வது? என திட்டினார்.

    இதனால் மனவேதனை அடைந்த சசிகுமார் நேற்று மாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்து மனைவி, மகள்கள் வேகமாக வந்து தீயை அணைத்து புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சசிகுமார் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன், ஏட்டு செஞ்சிவேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×