என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்25 July 2018 1:47 PM GMT (Updated: 25 July 2018 1:47 PM GMT)
நாகர்கோவிலில் இன்று காலை வீட்டு வளாகத்தில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் இளங்கடை அரிப்பு தெருவை சேர்ந்தவர் நவாப்ஜாண் (வயது 48). பெயிண்டர். இவர் அடிக்கடி குடித்து விட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று நவாப்ஜாண் வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்ப வில்லை. இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை நவாப்ஜாண் அவரது வீட்டில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய நவாப்ஜாணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட நவாப்ஜாணுக்கு சோபியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நவாப்ஜாண்தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X